Fact Check: துருக்கியில் நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்களுக்கான கால்பந்து போட்டியில் பொம்மை விநியோகம் செய்வதை காட்டும் பழைய வீடியோ இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பில் வைரலாகிறது

Fact Check: துருக்கியில் நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்களுக்கான கால்பந்து போட்டியில் பொம்மை விநியோகம் செய்வதை காட்டும் பழைய வீடியோ இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பில் வைரலாகிறது

புதுடெல்லி விஷ்வாஸ் நியூஸ் – கால்பந்து போட்டியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. வீடியோவில், பார்வையாளர்கள் பொம்மைகளை நன்கொடையாக வழங்குவதைக் காண முடிகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்து, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகளுக்காக இந்த பொம்மைகளை நன்கொடையாக பார்வையாளர்கள் வழங்கியுள்ளனர் என்று கூறப்பட்டு உள்ளது.

விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில், வைரல் வீடியோ இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு  தொடர்பில்லாதது என்பதை கண்டுபிடித்தது. பிப்ரவரி 2023க்கு முந்தைய இந்த வைரல் வீடியோ, உண்மையில் துருக்கியில் நடைபெற்ற ஒரு போட்டியிலிருந்து வந்தது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மைதானத்தில் மக்கள் பொம்மைகளை நன்கொடையாக அளித்ததை இதில் காணலாம்.

எது வைரல் ஆகிறது?

அக்டோபர் 23, 2023 அன்று வைரல் வீடியோவைப் பகிர்ந்து, ஃபேஸ்புக் பயனர் ‘ஓமர் ஷாஹித்‘ (ஆர்க்கைவ்), “கால்பந்து மைதானம் பாலஸ்தீனியர்களுக்கு போர்க்களமாக மாறியது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததற்காக அனைவருக்கும் நன்றி” என்று அதில் எழுதியுள்ளார்.

விசாரணை:

விஷ்வாஸ் நியூஸ், தொடர்புடைய தகவல்களைச் சரிபார்க்க முதலில் முக்கிய வார்த்தை தேடல்களைப் பயன்படுத்தியது. வீடியோவுடன் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடலைத் தொடங்கினோம், இது ‘த க்வின்ட்’ என்கிற இணையதளத்தில் ஒரு அறிக்கைக்கு எங்களை இட்டுச்சென்றது. இந்த அறிக்கை பிப்ரவரி 27, 2023 அன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில் துருக்கிய கால்பந்து ரசிகர்கள் ஆயிரக்கணக்கான பொம்மைகளை மைதானத்தில் தாராளமாக வழங்கினர்.

விசாரணையின் போது, த கார்டியன் ஃபுட்பால்-இன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இந்த கூற்று தொடர்பான வீடியோ அறிக்கையை நாங்கள் கண்டோம். இந்த வீடியோ பிப்ரவரி 27, 2023 அன்று பதிவேற்றப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி, இந்த வீடியோ டர்க்கிஷ் சூப்பர் லீக்-ல் பெசிக்டாஸ் மற்றும் அன்டலியாஸ்போர் இடையேயான போட்டியைப் பற்றியது. துருக்கி நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த குழந்தைகளுக்கு ஆயிரக்கணக்கான டெடிபியர்கள் மற்றும் பொம்மைகளை பார்வையாளர்கள் நன்கொடையாக வழங்கியதை இது ஆவணப்படுத்துகிறது. பொம்மை நன்கொடை வழங்குவதை ஏதுவாக்கும் வகையில் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெசிக்டாஸ், இந்த செயலுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், இந்த டெடிபியர் நன்கொடை வீடியோவை தங்கள் அதிகாரப்பூர்வ கணக்கில் பகிர்ந்துள்ளார். இது பிப்ரவரி 26, 2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. எங்கள் விசாரணையின் அடுத்த கட்டமாக, விளையாட்டு பத்திரிகையாளர் சையத் ஹுசைனை அணுகினோம், அவர், வைரல் காணொளி உண்மையில் துருக்கி நிலநடுக்க சமயத்தில் எடுக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தினார்.

கடைசியாக, தவறான கூற்றுடன் வீடியோவைப் பகிர்ந்த பயனரை நாங்கள் முழுமையாக ஆய்வு செய்தோம். இந்தப் பயனருக்கு 2,500 பேர் பின்தொடர்பாளர்கள் உள்ளதை கண்டறிந்துள்ளோம்.

முடிவு: ஒரு கால்பந்து போட்டியின் போது பொம்மைகளை நன்கொடை வழங்குவதை காட்டும் வைரல் வீடியோ இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மோதலுடன் எந்த தொடர்பும் கொண்டதல்ல என்று விஷ்வாஸ் நியூஸ் முடிவுக்கு வந்தது. பிப்ரவரி 2023 க்கு முந்தைய இந்த வீடியோ, துருக்கியில் நடந்த போட்டியுடன் தொடர்புடையது, அங்கு மக்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக பொம்மைகளை நன்கொடையாக வழங்கினர்.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்