உண்மை சரிபார்ப்பு: இந்த புகைப்படத்திற்கும் சுதந்திர தேவி சிலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை

இந்த இடுகை தவறானது. இந்த பெண்ணின் புகைப்படம் உண்மையில் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. சுதந்திர தேவியின் சிலையால் கவரப்பட்டு ஒரு கலைஞர் இந்தப் புகைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

உண்மை சரிபார்ப்பு: இந்த புகைப்படத்திற்கும் சுதந்திர தேவி சிலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் பிரபல சுதந்திர தேவி சிலைக்கு பிண்ணனியில் உள்ள பெண் இவர்தான் என்று கூறப்படுகிறது. இவரை முன்மாதிரியாக கொண்டே சுதந்திர தேவி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து விஸ்வாஸ் செய்தி விசாரித்தபோது, இந்த ​​வைரல் இடுகையில் உள்ள கூற்று தவறானது என்று கண்டறியப்பட்டது. இந்த வைரல் இடுகையில் காணப்படும் பெண்ணின் புகைப்படம் உண்மையில் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட படமாகும். சுதந்திர தேவி சிலையால் ஈர்க்கப்பட்டு ஒரு கலைஞர் புகைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

கூற்று

பேஸ்புக் பயனரான மிட்செல் ரெபா ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, “சுதந்திர தேவி சிலைக்கு போஸ் கொடுத்த பெண்ணின் புகைப்படம்,” என்று எழுதியுள்ளார்.

இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

இப்புகைப்படம் குறித்து விசாரிக்க நாங்கள் கூகுள் பின்னோக்கிய படத் தேடல் கருவியைப் பயன்படுத்தினோம். அவ்வாறு தேடியதில், Designboom.com என்ற இணையதளத்தில் ஒரு அறிக்கையில் இந்தப் படத்தைக் கண்டோம். அந்த அறிக்கையின்படி, இந்தப் புகைப்படத்தை அமெரிக்காவின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள புகைப்படக் கலைஞரான பாஸ் உட்வாரிக், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கொண்டு உருவாக்கியுள்ளார். மேலும் இதுபோன்ற பல புகைப்படங்களையும் அவர் உருவாக்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்தையும் அவரின் இணையதளத்தில் காணலாம்.

டெய்லி மெயிலின் ஒரு கட்டுரையையும் நாங்கள் கண்டோம். அதில் பெஸ் உட்வாரிக்கின் இந்த வைரல் புகைப்படத்தையும், அதனோடு மற்ற புகைப்படங்களையும் நம்மால் காண முடிந்தது. இந்த கட்டுரை 2 ஜூலை, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தவிர, உட்வாரிக்கின் ட்விட்டர் கணக்கிலும் இந்த வைரல் புகைப்படத்தை நம்மால் காண முடிந்தது.

யூடியூபில் உட்வாரிக்கின் நேர்காணல் ஒன்றை நாங்கள் கண்டோம், அதில், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் இந்த புகைப்படங்களை தான் உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். மேலும் புகைப்பட தொழில்நுட்பம் கண்டறியப்படுவதற்கு முன்பு வாழ்ந்தவர்களின் புகைப்படங்களை தான் எடுக்க விரும்புவதாகவும், சுதந்திர தேவி தவிர்த்து, நெப்போலியன் போனபர்ட், இயேசு கிறிஸ்து, ஜார்ஜ் வாஷிங்டன் போன்றோரின் புகைப்படங்களையும் செயற்கை நுண்ணறிவு கொண்டு தான் உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இது குறித்த உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் செயற்கை நுண்ணறிவு நிபுணர் தேவேந்திர சர்மாவை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், “இந்த வைரல் புகைப்படத்துடன் உள்ள கூற்று தவறானது, இந்தப் புகைப்படம் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

இந்த இடுகையை பேஸ்புக்கில் மிட்செல் ரெபா என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இந்தப் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், இவர் ஜார்ஜியாவின் டால்டனைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்தோம்.

निष्कर्ष: இந்த இடுகை தவறானது. இந்த பெண்ணின் புகைப்படம் உண்மையில் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. சுதந்திர தேவியின் சிலையால் கவரப்பட்டு ஒரு கலைஞர் இந்தப் புகைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்