X
X

Fact Check: தேர்தலையொட்டி வளைகுடா நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் என்பதாக போலி நியூஸ்பேப்பர் கட்டிங் வைரலாக பரவி வருகிறது

புது தில்லி விஷ்வாஸ் நியூஸ் – 2024 மக்களவைத் தேர்தல்களுக்கு மத்தியில், சமூக ஊடகங்களில் ஒரு செய்தித்தாள் கட்டிங் வைரலாக பரவி வருகிறது. அதில் முஸ்லிம் சமூகத்தினரிடையே வாக்களிக்கும் ஆர்வம் அதிகரித்து வருவதாகவும், இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து விமான சேவைகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பயனர்கள் இந்த தகவலை ஒரு வகுப்புவாத   சித்தரிப்புடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

விஷ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில் இந்தக் கூற்று போலியானது என அறியப்பட்டது. மேலும், மேற்கு உ.பி.யில் முதல் கட்டத்தில் ஓட்டிங் சீட்கள் பற்றிய தகவலும் தவறானது. 2022 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின் போது இந்த தவறான தகவல் வைரலானது, இதில் காலவரிசை லக்னோவில் நிகழ்ந்ததாகத் தவறாகக் குறிப்பிடப்பட்டது.

வைரலாவது என்ன?

விஷ்வாஸ் நியூஸின் டிப்லைன் எண் +91 9599299372 க்கு இந்த கட்டிங்கை, இதன் நம்பகத்தன்மையை தெளிவுபடுத்த வேண்டி, சில பயனர்கள் அனுப்பியுள்ளனர். இதில் “முஸ்லீம் சமூகத்தின் வாக்களிக்கும் ஆர்வம். வளைகுடா நாடுகளில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் நிரம்பியுள்ளன.” எனக் கூறப்பட்டுள்ளது,

விசாரணை:

வைரலான கூற்றை சரிபார்க்க நியூஸ்பேப்பர் கட்டிங்கை நாங்கள் ஆராய்ந்தோம், அதில் சில தவறுகளை கவனித்தோம்.

ஜெய்ப்பூர் டேட்லைனில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி என திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மேற்கு உத்தரபிரதேசத்தில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு பிரசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரலான இடுகை ஏப்ரல் 16, 2024 தேதியிடப்பட்டது, அதே நேரத்தில் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 17, 2024 அன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. டைனிக் ஜாக்ரன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஏப்ரல் 17, 2024 அன்று மாலை 6 மணி வரை பிரச்சாரம் செய்யலாம்.

வைரல் பதிவில் வழங்கப்பட்ட தகவல்கள் தவறானவை என்பதை இது குறிக்கிறது.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று டைனிக் ஜாக்ரானில் வெளியிடப்பட்ட செய்தி கூறுகிறது. கைரானா, முசாபர்நகர், சஹாரன்பூர், பிஜ்னோர், பிலிபித், ராம்பூர், மொராதாபாத் மற்றும் நாகினா ஆகியவை இதில் அடங்கும். மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக 8 இடங்களுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்கிற நிலையில், மேற்கு உ.பி.யில் உள்ள 58 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு என வந்த  தகவலும் தவறானது.

உத்தரபிரதேசத்தில் கட்டம் வாரியாக தேர்தல்கள் பற்றிய தகவல், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் ஹேண்டிலில் இருந்து, ஆர்க்கைவ் செய்யப்பட்டபடி. மார்ச் 31, 2024 அன்று போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அந்த போஸ்ட்டின்படி, முதல் கட்டமாக மாநிலத்தில் எட்டு தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுள் தேடலை மேற்கொண்டோம், ஆனால் வைரல்  கூற்றை உறுதிப்படுத்தக்கூடிய எந்த ஊடக அறிக்கையும் கிடைக்கவில்லை.

எங்கள் தேடுதலின் போது, 2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போதும் இதுபோன்ற போஸ்ட்கள் வைரலாகப் பரவியதை கண்டறிந்தோம். பிப்ரவரி 10, 2022 அன்று, அமித் சிங் என்ற ஃபேஸ்புக் பயனரும் இதே போன்ற இடுகையைப் பகிர்ந்துள்ளார் (ஆர்க்கைவ் இணைப்பு).

பிப்ரவரி 2022-ல் பகிரப்பட்ட இடுகையில் டேட்லைனில் லக்னோ என்றும், முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10, 2022 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய மற்றும் புதிய இடுகைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ​​வாக்களிக்கும் தேதியில் வித்தியாசத்தைக் கண்டோம், ஆனால், மற்ற விவரங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை. 

வளைகுடா நாடுகளில் இருந்து வரும் விமானங்களின் நிலை குறித்து டெல்லியின் மாடல் டவுனில் உள்ள மேக் மை ட்ரிப் அலுவலகத்தை தொடர்பு கொண்டோம். அப்போது துபாயில் இருந்து டெல்லி வரும் விமானத்தில் அப்போதும் இருக்கை கிடைக்கும் விதமாக உள்ளது என்பதை அறிந்தோம்.  

முன்னதாக, ராகுல் காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் போலியான நியூஸ்பேப்பர் கட்டிங்குகள் பரப்பப்பட்டு வைரலானது. விஷ்வாஸ் நியூஸ் அவற்றின் மீதும் உண்மை சரிபார்ப்பு (ஃபேக்ட்-செக்) செய்து உண்மையை வெளிக்கொணர்ந்தது.

போலிச் செய்தியைப் பகிர்ந்த ஃபேஸ்புக் பயனரின் சுயவிவரத்தை ஸ்கேன் செய்தோம். பயனர் ஃபரிதாபாத்தில் வசிக்கிறார், சுமார் 3300 நண்பர்கள் உள்ளனர்.

முடிவு: லோக்சபா தேர்தல் 2024-ன் முதல் கட்ட வாக்குப்பதிவைக் கருத்தில் கொண்டு வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்கள் நிரம்பியிருப்பதாக கூறும் நியூஸ்பேப்பர் கட்டிங் போலியானது. அதற்கு தவறான வகுப்புவாத நிறம் பூசப்படுகிறது.

  • Claim Review : அதில் முஸ்லிம் சமூகத்தினரிடையே வாக்களிக்கும் ஆர்வம் அதிகரித்து வருவதாகவும், இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து விமான சேவைகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Claimed By : ஃபேஸ்புக் பயனர்- அஹுஜா வேத்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later