X
X

Fact Check: பூரி ரத யாத்திரையின் வைரல் படம் தவறான கூற்றுகளுடன் பகிரப்படுகிறது

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு, சமூக ஊடகங்களில் ஒரு படம் வைரலாகி வருகிறது, அதில் ஒரு பெரிய கூட்டத்தைக் காண முடிகிறது.

புதுடெல்லி விஷ்வாஸ் நியூஸ் – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு, சமூக ஊடகங்களில் ஒரு படம் வைரலாகி வருகிறது, அதில் ஒரு பெரிய கூட்டத்தைக் காண முடிகிறது. தற்போது, பயனர்கள் சிலர் இந்தப் படத்தை சமீபத்தியது என்பது போல பகிர்ந்து வருகின்றனர். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதையடுத்து நடந்த ஆர்ப்பாட்டத்தின் புகைப்படம் என்கிற கூற்றுடன் பகிரப்படுகிறது.

விஷ்வாஸ் நியூஸ் விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்று கண்டறியப்பட்டது. எங்கள் விசாரணையில், வைரலான படம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு நடந்த போராட்டம் தொடர்பான புகைப்படம் அல்ல, மாறாக ஜெகன்நாத் பூரி ரத யாத்திரையின் புகைப்படம் என்பது தெரியவந்தது. இந்த படம் தற்போது தவறான கூற்றுகளுடன் பகிரப்பட்டு வருகிறது.

வைரலாவது எது?

ஃபேஸ்புக் பயனர் ‘கணேஷ் யாதவ் கயா பீஹார்‘ வைரலான படத்தைப் பகிர்ந்து, “சர்வாதிகாரியின் முடிவு நிச்சயம் என்பதை இந்தப் படம் காட்டுகிறது. சென்னையில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி உள்ளனர்.” என்று எழுதியுள்ளார்.

பல பயனர்கள் இதே போன்ற கூற்றுகளுடன் இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளனர்.

விசாரணை:

வைரலான படத்தை ஆராய கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலைப் பயன்படுத்தினோம். எங்கள் தேடல் sri_mandir (ஸ்ரீ மந்திர்) என்ற பெயர் கொண்ட இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு எங்களை அழைத்துச் சென்றது, அங்கு படம் ஜூன் 20, 2023 அன்று ஜகன்னாத் பூரி ரத யாத்திரை என்று அடையாளப்படுத்தும் விளக்கத்துடன் பகிரப்பட்டிருக்கிறது.

மேற்கொண்டு செய்த விசாரணையில், இது தொடர்பான செய்திகள் Times Content (டைம்ஸ் கான்டன்ட்) இணையதளத்தில் தெரியவந்தது. ஜூன் 20, 2023 தேதியிட்ட புகைப்படத்துடன் “பூரியில் ஆண்டுதோறும் நடைபெறும் பகவான் ஜகந்நாதர் ரத யாத்திரை: வருடாந்திர ஜகந்நாதர் ரத யாத்திரையின் போது பக்தர்கள் கூட்டம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. வெளியிடப்பட்ட கட்டுரையில் ரத யாத்திரையின் பல படங்களும் இடம்பெற்றுள்ளன.

அயோத்தி ராமர் கோயிலுடன் தொடர்புபடுத்தி இதே குறிப்பிட்ட படம் முன்பு சமூக ஊடகங்களில் பரவியது. அந்த நேரத்தில் விஷ்வாஸ் நியூஸ் ஒரு விசாரணையை நடத்தியது, ஒடிசாவின் உள்ளூர் செய்தி இணையதளமான ஒடிசா டைரியின் ஆசிரியர் ரஷ்மி ரஞ்சன் பரிதாவை அணுகிய போது அவர், “இந்தப் படம் பூரி ஜெகநாதர் ரத யாத்திரையின் படம், இதற்கு தற்போதைய சூழ்நிலையுடன் எந்த தொடர்பும் இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.

வைரலான படத்தைப் பகிர்ந்த பயனரை விஷ்வாஸ் நியூஸ் ஆய்வு செய்தது. பயனரை 4,000 பேர் பின்தொடர்வதையும் பீகார் கயாவில் வசிப்பவர் என்பதையும் சுயவிவரம் குறிப்பிடுகிறது.

முடிவு: விஷ்வாஸ் நியூஸ் அதன் விசாரணையில், சமூக ஊடகங்களில் ஒரு கூட்டத்தை சித்தரிக்கும் வைரலான படம் உண்மையில் ஜகன்னாத் பூரி ரத யாத்திரையில் இருந்து வந்தது என்றும் அதற்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் உறுதி செய்தது. தவறான கூற்றுகளுடன் புகைப்படம் பரப்பப்படுகிறது.

  • Claim Review : முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி உள்ளனர்.
  • Claimed By : ஃபேஸ்புக் பயனர் 'கணேஷ் யாதவ் கயா பீகார்' வைரலான படத்தைப் பகிர்ந்து, எழுதியுள்ளார்.
  • Fact Check : Misleading
Misleading
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later