X
X

Fact Check: படத்தில் காணும் வாகனங்கள் கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் போலீஸ் படையில் சேர்க்கப்பட்டன – வைரல் போஸ்ட் தவறாக வழிநடத்துகிறது

விஷ்வாஸ் நியூஸ் இந்த போஸ்ட்டை ஆராய்ந்து அது தவறாக வழிநடத்துவைதைக் கண்டறிந்தது. இந்த வாகனங்கள் கடந்த ஆண்டு ஜம்மு & காஷ்மீர் போலீஸ் படையில் சேர்க்கப்பட்டன. குழப்பத்தை ஏற்படுத்தவும் தவறான தகவல்களைப் பரப்பும் நோக்கிலும் இந்தப் படம் குறித்து தொடர்பிலாத தகவல் பரப்பப்படுகிறது.

புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்). ஜம்மு காஷ்மீரில் 2500 குண்டு துளைக்காத ஸ்கார்பியோ கார்களை இந்திய ராணுவம் பெற்றுள்ளதாக பல்வேறு சமூக ஊடகங்களில் வைரலான படம் ஒன்று கூறுகிறது. படத்தில் வாகனங்களின் வரிசை காட்டப்பட்டுள்ளது, அவற்றை இந்திய இராணுவம் சமீபத்தில் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

விஷ்வாஸ் நியூஸ் இந்த போஸ்ட்டை ஆராய்ந்து அது தவறாக வழிநடத்துவைதைக் கண்டறிந்தது. இந்த வாகனங்கள் கடந்த ஆண்டு ஜம்மு & காஷ்மீர் போலீஸ் படையில் சேர்க்கப்பட்டன. குழப்பத்தை ஏற்படுத்தவும் தவறான தகவல்களைப் பரப்பும் நோக்கிலும் இந்தப் படம் குறித்து தொடர்பிலாத தகவல் பரப்பப்படுகிறது.

வைரலாவது என்ன?

செப்டம்பர் 1, 2024 அன்று, ‘the_great_india_vision‘  என்கிற இன்ஸ்டாகிராம் ஹேண்டில் “ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2500 குண்டு துளைக்காத ஸ்கார்பியோக்களை பெற்ற இந்திய இராணுவத்திற்கு வாழ்த்துக்கள்” என்ற கேப்ஷனுடன் ஒரு படத்தை வெளியிட்டது.

வைரல் போஸ்ட்டின் உள்ளடக்கம் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பகிரப்பட்டு மற்ற பயனர்களும் அதை உண்மை என்று நம்பி பகிர்ந்து கொள்கிறார்கள். இடுகையின் ஆர்க்கைவ்டு பதிப்பை நீங்கள் இங்கே காணலாம்.

விசாரணை

விஷ்வாஸ் நியூஸ், கூகுள் ஓப்பன் சேர்ச் பயன்படுத்தி வைரலான கூற்றை விசாரிக்கத் தொடங்கியது. ஆனால் இந்திய ராணுவம் 2500 குண்டு துளைக்காத ஸ்கார்பியோக்களைப் பெற்றதாக எந்த சமீபத்திய செய்தியும் கிடைக்கவில்லை. மேலும் விசாரணையின் அடுத்த கட்டமாக, வைரல் இடுகையிலிருந்து இமேஜை கொண்டு கூகுள் லென்ஸ் மூலம் தேடினோம். அக்டோபர் 30, 2023 அன்று ரிபப்ளிக் சேனலின் ஆங்கில இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரையில் இந்தப் படம் வெளிவந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் காவல்துறை நவீன தொழில்நுட்ப வாகனங்களான ‘ரக்ஷக்’ மற்றும் ‘சௌர்யா’ ஆகியவற்றை அதன் வாகனங்களாக அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. முழு செய்தியையும் இங்கே படிக்கலாம்.

விஷ்வாஸ் நியூஸ், விசாரணையின் அடுத்த கட்டமாக, ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் ஊடக மையத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை ஸ்கேன் செய்தது. அக்டோபர் 30, 2023 தேதியிட்ட ஒரு இடுகையில், கொடியேற்ற விழாவின் போது ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்கு 160 வாகனங்களை டிஜிபி அர்ப்பணித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விஷ்வாஸ் நியூஸ் வைரல் படத்தை ஸ்கேன் செய்தபோது, அதில் “ஜம்மு காஷ்மீர் போலீஸ்” மற்றும் “டயல் 112” என்று குறிப்பிடப்பட்டிருந்ததை நாங்கள் கவனித்தோம். இந்த படம் இந்திய ராணுவத்தினுடையது அல்ல, காவல்துறைக்கு சொந்தமானது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

விசாரணையில் மேலும், இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவரை தொடர்பு கொண்டோம், அவர் வைரலான படம் இந்திய ராணுவத்துக்கு சொந்தமானது அல்ல என்றும், அந்த வைரல் கூற்று போலியானது என்றும் உறுதி செய்தார்.

முடிவு: விஷ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில் வைரல் போஸ்ட் தவறாக வழிநடத்துகிறது என்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு ஜம்மு & காஷ்மீர் போலீஸ் வாகனப் படையில் சேர்க்கப்பட்ட வாகனங்களை படம் காட்டுகிறது, இதை இந்திய இராணுவத்துடன் தொடர்புபடுத்தி தவறான கூற்றுடன் சித்தரிக்கப்படுகிறது.

  • Claim Review : ஜம்மு காஷ்மீரில் 2500 குண்டு துளைக்காத ஸ்கார்பியோக்களை இந்திய ராணுவம் பெற்றுள்ளது.
  • Claimed By : ஃபேஸ்புக் பயனர்
  • Fact Check : Misleading
Misleading
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later