Fact Check: வெளிநாட்டுப் புகைப்படம் வாரணாசி என திரித்துக் காட்டப்பட்டது; வைரல் க்ளைம் பொய் என நிரூபணம்

விஷ்வாஸ் நியூஸ் வைரலான பதிவை ஆய்வு செய்து அது போலியானது என கண்டறிந்தது. வெளிநாட்டைச் சேர்ந்த பழைய புகைப்படம் வாரணாசியின் படம் என சமூக வலைதளங்களில் பொய்யாக பரப்பப்பட்டு வருகிறது. இந்தப் படத்துக்கும் வாரணாசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

Fact Check: வெளிநாட்டுப் புகைப்படம் வாரணாசி என திரித்துக் காட்டப்பட்டது; வைரல் க்ளைம் பொய் என நிரூபணம்

புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்): பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் எடுத்ததாகக் கூறப்படும் புகைப்படம் பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் படம் வாரணாசியின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது என்ற கூற்றுகளுடன் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

விஷ்வாஸ் நியூஸ் வைரலான பதிவை ஆய்வு செய்து அது போலியானது என கண்டறிந்தது. வெளிநாட்டைச் சேர்ந்த பழைய புகைப்படம் வாரணாசியின் படம் என சமூக வலைதளங்களில் பொய்யாக பரப்பப்பட்டு வருகிறது. இந்தப் படத்துக்கும் வாரணாசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

வைரலாவது என்ன? 

ஃபேஸ்புக் பயனர் ‘சலீம் அகமது’ கடந்த 15ஆம் தேதி, “அப்னா பனாரஸ் தேங்க்  யூ மோடி ஜி” என்ற தலைப்பில் ஒரு படத்தை (ஆர்க்கைவ் லின்க்) போஸ்ட்  செய்தார் வைரலான படத்தில் கடாலியா-சோனார்பூர் என்ற தலைப்புடன் இரண்டு ரயில்கள் காட்டப்பட்டன. 

விஷ்வாஸ் நியூஸ் விசாரணை: 

வைரலான புகைப்படத்தைப்  பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற விஷ்வாஸ் நியூஸ் யாண்டெக்ஸ் கருவியைப் பயன்படுத்தியது. வைரலான படத்தை பதிவேற்றம் செய்து தேடியதில், பல இடங்களில் இந்தப் படம் கிடைத்தது. ‘Ethiocarmarket‘ என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த படத்தை ஆகஸ்ட் 25, 2019 அன்று வெளியிட்டது, அது இதை ஜெர்மனியைச் சேர்ந்தது எனக் குறிப்பிடுகிறது (இணையதள இணைப்பு ).

மே 2 2015 அன்று பதிவேற்றப்பட்ட இந்தப் படத்தை ஒரு இணையதளத்திலும்  நாங்கள் கண்டோம். தேடுதலின் போது, வைரலான படத்தில் உள்ள ரயில் ஜெர்மனியின் வூப்பர்டலில் உள்ள சஸ்பென்ஷன் ரயில்வேயின் வீடியோவில் காணப்படுவதையும் கண்டுபிடித்தோம் .

விசாரணையின் அடுத்த கட்டமாக விஷ்வாஸ் நியூஸ் வாரணாசி டைனிக் ஜாக்ரானின் அவுட்புட் ஹெட் ஆன ஷாஷ்வத் மிஸ்ராவை அணுகியது. வைரலான படத்தில் உள்ளது வாரணாசி அல்ல என்றும், அது போலியான பதிவு என்றும் அவர் உறுதி செய்தார்.

எங்கள் விசாரணையின் முடிவில், பயனர் சலீம் அகமதுவின் பேஸ்புக் சுயவிவரத்தை ஸ்கேன் செய்தோம், ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் அவரைப் பின்தொடர்வதையும் அவர் வாரணாசியில் வசிப்பவர் என்பதையும் நாங்கள் கண்டுபிடித்தோம்.

முடிவுரை: வெளிநாட்டில் உள்ள சஸ்பென்ஷன் ரயில்வேயின் படம் வாரணாசியில் இருப்ப தாகக் கூறி சிலர் போலியான செய்திகளை பரப்பி வருவது விஷ்வாஸ் நியூஸ் விசாரணையில் தெரியவந்தது.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்