Fact Check: ‘சன்னி முஸ்லிம்கள் மஜ்லிஸ்’ என்ற பெயரில் வைரலாகி வரும் கடிதம் போலியானது

Fact Check: ‘சன்னி முஸ்லிம்கள் மஜ்லிஸ்’ என்ற பெயரில் வைரலாகி வரும் கடிதம் போலியானது

புது தில்லி விஷ்வாஸ் நியூஸ் – நடந்து வரும் மக்களவைத் தேர்தல்களுக்கு மத்தியில், ‘சன்னி முஸ்லிம்கள் மஜ்லிஸ்’ (துபாய்) அமைப்புடையது என்று கூறி ஒரு கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பாஜக அரசாங்கத்தை அகற்றும் நோக்கத்துடன், முஸ்லீம் வாக்காளர்களுக்கு முழு நிதியுதவி செய்வதாகவும், டிக்கெட் முன்பதிவு முதல் செலவுகளை ஈடுகட்டுவதாகவும் கடிதத்தில் உள்ளது.

விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில், ‘சன்னி முஸ்லிம்கள் மஜ்லிஸ் (துபாய்)’ என்ற பெயரில் பரவும் கடிதம் போலியானது என்று கண்டறிந்தது. இந்த கடிதத்தில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் துபாயில் உள்ள ஒரு ஓட்டலுடையது மற்றும் அதிலுள்ள அலுவலக முகவரி துபாயில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்தது. 2024 லோக்சபா தேர்தல் தொடர்பில், இந்த போலி கடிதம் பகிரப்படுகிறது.

வைரல் போஸ்ட்டில் இருப்பது என்ன?

ஏப்ரல் 9, 2024 தேதியிட்ட வைரல் கடிதம், ‘சன்னி முஸ்லிம்களின் சங்கத்தைச் சேர்ந்தது என்று பொய்யாகக் கூறப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் மே 7, 2024 அன்று நடந்து கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்களுக்கு டிக்கெட் முன்பதிவு மற்றும் ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கான பணம் வழங்குதல் உள்ளிட்ட முழு நிதியுதவியை அறிவிப்பதாக அதில் உள்ளது. இந்தத் தேர்தல்களில் பாசிச சக்திகளைத் தோற்கடித்து, முஸ்லிம்களின் உண்மையான கூட்டாளியான இந்திய தேசிய காங்கிரஸை (INC) மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதுதான் நோக்கம்.’

ஆர்கைவ்டு போஸ்ட்டை இங்கே பார்க்கவும்.

விசாரணை

எங்கள் விசாரணையைத் தொடங்க, ‘அசோசியேஷன் ஆஃப் சன்னி முஸ்லிம்ஸ்’ (துபாய்) என்று கூகுள் தேடலைத் தொடங்கினோம். இருப்பினும், இந்தப் பெயரைக் கொண்ட எந்த நிறுவனத்தையும் துபாயில் நாங்கள் கண்டறியவில்லை, அதேபோல் சரிபார்க்கப்பட்ட கணக்கு எதுவும் அடையாளம் காணப்படவில்லை. எங்களின் தொடர்ந்த விசாரணையில், வைரல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  “அசோசியேஷன் ஆஃப் சன்னி முஸ்லிம்ஸ்“ (துபாய்) என்ற முகவரியைத் தேடினோம், எங்கள் விசாரணை எங்களை துபாயில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் முகவரிக்கு இட்டுச் சென்றது.

சன்னி முஸ்லிம்கள் சங்கம் (துபாய்) என்ற பெயரில் பாகிஸ்தான் தூதரகத்தின் முகவரி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது, அதாவது வைரலான கடிதத்தில் போலி முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, வைரலான கடிதத்தில் தரப்பட்டுள்ள முதல் போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, இந்த எண் துபாயில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சொந்தமானது என பதில் கிடைத்தது. இந்த வைரல் பதிவு குறித்து அந்த நபர், “இந்தியப் பொதுத் தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்களுக்கு நிதி உதவி வழங்குவதில் சன்னி முஸ்லிம் சங்கம் ஈடுபட்டதாகக் கூறப்படும் கூற்று தொடர்பாக, நான் சன்னி முஸ்லிம் சங்கம் அல்லது அமைப்புடன் தொடர்புடையவர் கிடையாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதில் கூறப்பட்டுள்ள நிறுவனத்துடனோ சன்னி முஸ்லிம் அசோஷியனுடனோ எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இந்த விஷயத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை” என்றார். மேலும் அவர் கஃபே இணையதளம் மற்றும் சோஷயில் மீடியா ஹேண்டில்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இதுவரை, எங்கள் விசாரணையில் வைரலான கடிதத்தில் பயன்படுத்தப்பட்ட முகவரி மற்றும் தொலைபேசி எண் இரண்டும் தவறானவை என தெரியவந்துள்ளது. இருந்தபோதும், எங்கள் விசாரணையின் அடுத்த கட்டமாக, மீதமுள்ள இரண்டு எண்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அவர்களிடம் இருந்து பதில் கிடைத்தவுடன் விரைவில் செய்தியை அப்டேட் செய்வோம்.

வைரலான இடுகையின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, நாங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பத்திரிகையாளரும் உண்மைச் சரிபார்ப்பாளருமான சன்யா அஜீஸை அணுகினோம், அவர் கருத்துப்படி, இந்த கடிதம் போலியானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லாத குடிமக்களுக்காக ஒரு மத அமைப்பை நிறுவுவது சவாலான விஷயம் என்று அவர் விளக்கினார். அவ்விதம் அனுமதி கிடைத்தாலும், இதுபோன்ற அரசியல் அறிக்கைகளை வெளியிட அனுமதி இல்லை. மேலும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி துபாயில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் முகவரி என்றும், எந்த மத அமைப்புக்கும் சொந்தமானது அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

போலியான போஸ்ட்களை பகிர்ந்த பயனர்களின் ஃபேஸ்புக் சுயவிவரத்தை ஆய்வு செய்ததில், போஸ்ட்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தியல் தொடர்பானவை என்பதைக் கண்டறிந்தோம்.

முடிவு: விஷ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில், ‘சன்னி முஸ்லிம்கள் மஜ்லிஸ்’ (துபாய்) என்ற பெயரில் வைரலான கடிதம் போலியானது என தெரியவந்தது. இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண் துபாயில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சொந்தமானது, அதே போல் அலுவலக முகவரி பாகிஸ்தானின் துபாய் தூதரகத்துடன் தொடர்புடையது. 2024 லோக்சபா தேர்தலின் தொடர்பில் இந்த போலி கடிதம் பகிரப்படுகிறது.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்