X
X

உண்மை சரிபார்ப்பு: சுபாஷ் சந்திர போஸ் தன் இறப்பு பற்றிய செய்தியையே படிப்பது போல வைரல் ஆக இருக்கும் படம் திருத்தப்பட்டது

முடிவு: சுபாஷ் சந்திர போஸ் தன் இறப்பு பற்றிய செய்தியையே படிக்கிறார் என்று சொல்லும் வைரல் படம் திருத்தப்பட்டது. வைரல் உரிமைக் கோரிக்கை பொய்யானது.

புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்):  பல்வித சமூக ஊடகத் தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் சுபாஷ் சந்திர போஸின் கருப்பு வெள்ளை படம் ஒன்று விஷ்வாஸ் நியூஸ்-இன் கவனத்துக்கு வந்தது. அது அந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஒரு விமான விபத்தில் இறந்து போனதாக வந்த செய்தியை தானே செய்தித் தாளில் படிப்பதாக இருந்தது. விஷ்வாஸ் நியூஸ் தன்னுடைய புலன் விசாரணையில் அந்தப் படம் திருத்தப்பட்டது என்று கண்டுபிடித்தது.

உரிமைக் கோரிக்கை:

முகநூல் பயனர், பாரத சந்திர தாஷ் ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தை, இந்த விஷயத்துடன் பதிவேற்றினார்: என்ன ஒரு தொகுப்பு…. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிருங்கள்

23 ஏப்ரல், 1945 அன்று, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஒரு விமான விபத்தில் இறந்து போனதாக வந்த செய்தியை தானே செய்தித் தாளில் படிக்கிறார். பிரிட்டிஷாரின் வளர்ப்பு நாயான காங்கிரஸின் மிகப்பெரிய பொய்.

பதிவையும் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பையும் இங்கே பார்க்கவும்

புலன் விசாரணை:

விஷ்வாஸ் நியூஸ் அந்தப் படத்தைப் பற்றி ஒரு எளிமையான கூகிள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தது. அந்தத் தேடல் எங்களை அனுஜ் தாரின் ட்விட்டர் ஹேண்டிலுக்கு இட்டுச் சென்றது.

அந்தத் தலைப்பு சொன்னது: சுபாஷ் சந்திர போஸ் ஜப்பானின் மிகப் பெரியதும் மிகப் பழையதும் ஆன ஆங்கில மொழி தினசரி செய்தித் தாளான நிப்பான் டைம்ஸ்-ஐ (இப்போது த ஜப்பான் டைம்ஸ் @japantimes) படிக்கிறார்.

இந்தப் படம் பெரிதாக்கப்பட்டு பார்க்கப்பட்டால், அந்த சுதந்திரப் போராட்ட வீரர் தன் இறப்பு பற்றிய செய்தியை அல்ல, வேறு ஏதோ ஒரு செய்தியைப் படித்துக் கொண்டிருப்பது தெரியும்.

நாங்கள் அனுஜ் தாரின் ட்விட்டர் விவரக் குறிப்பின் மேல் அந்த வைரல் பிம்பத்தையும் கண்டுபிடித்தோம். அதன் தலைப்பு சொன்னது: மூலப் படம் @BiplabC2-ஆல் சிறிது மறுகற்பனை செய்யப்பட்டது.

இருந்தும், @BiplabC2-இன் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

விஷ்வாஸ் நியூஸ் தன் அடுத்த கட்ட விசாரணையில் சுபாஷ் சந்திர போஸ் பற்றிய ஆய்வுகள் செய்திருக்கும் அம்பரிஷ் புண்ட்லிக்-ஐ அணுகியது. “இது, ஜப்பானியரால் விமான விபத்து பற்றிய செய்தி வெளிக் கொண்டுவரப்பட்டபோது, நேதாஜி உயிருடன் இருந்தார் என்று விளக்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு  ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட பிம்பம். ஆனால் விமான விபத்து நடந்தது 18 ஆகஸ்ட் 1945 அன்று, 23 ஏப்ரல் அல்ல. 15 ஆகஸ்ட் 1945-க்குப் பிறகு அவருடைய ஒரு புகைப்படம் கூட கிடைக்கவில்லையே. படத்தில் உள்ள நேதாஜி பிடித்திருக்கும் செய்தித்தாளில் உள்ள உள்ளடக்கம் திருத்தப்பட்டது.” என்று அவர் கூறினார்.

விஷ்வாஸ் நியூஸ் அந்த வைரல் பிம்பத்தை பகிர்ந்த அந்த முகநூல் பயனரின் மேல் ஒரு சமூக பின்புல சரிபார்ப்பை செய்தது. அந்தப் பயனர் பாரத சந்திர தாஷ் ஒரு “செய்தியாளர்” மேலும் அவர் பாலாசோரில் நிலை கொண்டிருக்கிறார் என்று நாங்கள் கண்டுபிடித்தோம்.

निष्कर्ष: முடிவு: சுபாஷ் சந்திர போஸ் தன் இறப்பு பற்றிய செய்தியையே படிக்கிறார் என்று சொல்லும் வைரல் படம் திருத்தப்பட்டது. வைரல் உரிமைக் கோரிக்கை பொய்யானது.

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later