உண்மைச் சரிபார்ப்பு: இந்தக் காணொளி நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் கோயிலல்ல, டையூவில் உள்ள கங்கேஷ்வர் கோயிலின் காணொளியாகும்

விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் வைரலான இந்த பதிவு போலியானது என நிரூபிக்கப்பட்டது. டையூவில் உள்ள கங்கேஷ்வர் மகாதேவ் கோவிலின் காணொளி காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவில் என வைரலாகி வருகிறது.

உண்மைச் சரிபார்ப்பு: இந்தக் காணொளி நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் கோயிலல்ல, டையூவில் உள்ள கங்கேஷ்வர் கோயிலின் காணொளியாகும்

விஸ்வாஸ் செய்திக் குறிப்பு (புது டெல்லி). சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் சிவன் கோவிலைப் பற்றிய ஒரு காணொளியானது நேபாளத்தில் அமைந்துள்ள பசுபதிநாத் கோவில் என்று கூறப்பட்டு வருகிறது. வைரலான பதிவை விஸ்வாஸ் நியூஸ் ஆய்வு செய்தது. வைரலான வீடியோவுக்கும் நேபாளத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது எங்களுக்குத் தெரிய வந்தது. இந்த காணொளியானது டையூவில் உள்ள கங்கேஷ்வர் மகாதேவ் கோயிலின் காணொளியாகும்.

வைரலாகி வருவது என்ன ?

முகநூல் (ஃபேஸ்புக்) பயனர் ‘தில்சே’ இந்தப் பதிவைப் பதிவேற்றினார். இந்த காணொளியில் (வீடியோவில்), கடற்கரையில் 5 சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. அந்த வீடியோவில் கடல் அலைகள் தொடர்ந்து சிவலிங்கத்தின் மீது மோதுவதைக் காணலாம். அந்த விளக்கத்தில் கூறுவது: “இந்த காணொளி நேபாளத்தில், காத்மாண்டுவில் உள்ள ஸ்ரீ பசுபதி நாத் ஜி-யின் காணொளி, இந்த சிவலிங்கத்தின் புகைப்படம் கிடைப்பது மிகவும் கடினம், நீங்கள் இதை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பலாம், இதனால் அவர்களும் தரிசனம் செய்யலாம்.”

முகநூல் பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே பார்க்கவும்.

விசாரணை

இந்த இடுகையைச் சரிபார்க்க, விஸ்வாஸ் செய்தி முதலில் இந்த வீடியோவை InVid கருவியில் வைத்து பல ஸ்கிரீன்கிராப்களை பிரித்தெடுத்தது. இதற்குப் பிறகு, இந்த ஸ்கிரீன்கிராப்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலை நாங்கள் மேற்கொண்டோம். இந்த சிவன் கோவிலின் பல்வேறு கோணங்களில் இருந்து பல காணொளிகளை யூடியூப் மற்றும் முகநூலில் கண்டோம். இவ்விடங்கள் அனைத்தும் இந்த இடத்தை டையூவின் கங்கேஷ்வர் மகாதேவ் கோவில் என்று விவரித்தன.

முக்கிய வார்த்தைகளைக் கொண்டு தேடியபோது, ​​டையூவைச் சேர்ந்த கங்கேஷ்வர் மகாதேவின் இன்னும் அநேக காணொளிகள் கிடைத்தன. அனைத்து காணொளிகளும் வைரல் காணொளிளைப் போலவே இருந்தன. இந்த காணொளி டையூவில் உள்ள கங்கேஷ்வர் மகாதேவ் கோயிலின் காணொளிதான் என்பது தெளிவாகிறது.

இது தொடர்பாக மேலும் உறுதிப்படுத்துவதற்காக, டைனிக் ஜாக்ரனின் குஜராத் நிருபர் சத்ருகனிடம் நாங்கள் பேசினோம். இந்த காணொளி டையூவில் உள்ள கங்கேஷ்வர் மகாதேவ் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் கோவிலின் சிவலிங்கம் எப்படி இருக்கும் என்பதை இப்போது எங்களுக்கு தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. இந்த கோவில் பக்மதி ஆற்றின் கரையில் உள்ளது என்பதை ஏபிபி செய்தியின் ஒரு காணொளி மூலம் நாங்கள் அறிந்தோம். இங்கு சிவபெருமானுக்கு நான்கு முகங்கள் உள்ளன. வைரலான வீடியோவில் இருந்து இது மிகவும் வித்தியாசமானது. நீங்கள் முழு காணொளியையும் கீழே பாருங்கள்.

இப்போது இந்த வீடியோவை தவறான கூற்றுடன் வைரலாக்கிய பயனரை விசாரிக்க வேண்டிய நேரமாக இருந்தது அது. ஃபேஸ்புக் பக்கம் தில்சே 879K பின்தொடர்பாளர்களை கொண்டிருந்தது.

निष्कर्ष: விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் வைரலான இந்த பதிவு போலியானது என நிரூபிக்கப்பட்டது. டையூவில் உள்ள கங்கேஷ்வர் மகாதேவ் கோவிலின் காணொளி காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவில் என வைரலாகி வருகிறது.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்