உண்மை சரிபார்ப்பு: பிங்க் யானையின் இந்தப் படம் திருத்தப்பட்டது.

விஷ்வாஸ் நியூஸ் இந்தக் க்ளைம் பொய் என்று கண்டு பிடித்தது. இந்தப் படத்தில் காணப்படும் யானை டிஜிட்டல் சாதனங்களின் உதவியோடு தயாரிக்கப்பட்டது.

உண்மை சரிபார்ப்பு: பிங்க் யானையின் இந்தப் படம் திருத்தப்பட்டது.

புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): பிங்க் நிற யானை கொண்ட படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. அது ஒரு உண்மையான பிங்க் யானை என்றும் அது இந்தியாவில் காணப்படுகிறது என்று அந்தப் பதிவில் க்ளைம் செய்யப்படுகிறது. விஷ்வாஸ் நியூஸ் இந்தக் க்ளைம் பொய் என்று தன் புலன் விசாரணையில் கண்டுபிடித்தது. அந்த யானையின் புகைப்படத்தில் பிங்க் நிறம் டிஜிட்டல் சாதனங்களின் உதவியோடு சேர்க்கப்பட்டுள்ளது.

வைரல் பதிவில் இருப்பது என்ன?

ஹ்ரித்திக் மல்ஹோத்ரா என்ற ஒரு ஃபேஸ்புக் பயனர் (ஆவணப்படுத்தப்பட்ட இணைப்பு) இந்தப் பதிவைப் பகிர்ந்திருக்கிறார். அந்தப் படத்தில் உள்ள உரை இவ்வாறு உள்ளது: ‘இந்தியாவின் சில பாகங்களில் பிங்க் நிற யானைகள் காணப்படுகின்றன. செம்மண் காரணத்தினால், யானைகள் நிரந்தரமாக பிங்க் நிறத்தைக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் பூச்சிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள அவை தங்கள் உடல்களின் மீது நீரைப் பீய்ச்சி அடித்துக் கொள்கின்றன.’

புலன் விசாரணை

இந்தப் பதிவை சரி பார்க்க , இந்தப் புகைப்படத்தின் ரிவர்ஸ் இமேஜ் தேடலை நாங்கள் செய்தோம். இந்தப்படத்தை baixaki.com.br-இல் கண்டுபிடித்தோம். ஆனால் இந்தப் படத்தில் இருக்கும் யானை பிங்க் நிறத்தில் அல்ல, பிரவுன் நிறத்தில் இருந்தது, அந்தப் பதிவின் படி, இந்தப் படம் கார்லோஸ் ஈடி பார்ரெயிரோஸோ-வினால் 14 அக்டோபர் 2005 அன்று அப்லோட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த இரண்டிற்குமான ஒற்றுமைகள் கீழே உள்ள ஒட்டு வடிவத்தில் காணலாம்.

இது குறித்து கேரளா வனத் துறையில் வனத்துறை அதிகாரியாகப் பணி புரியும் கிருஷ்ண தாசோடு நாங்கள் தொடர்பு கொண்டோம். அவருக்கு யானைகள் மேல் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. இந்தியாவில் பிங்க் நிற யானைகள் இல்லை என்று அவர் எங்களிடம் கூறினார். இந்த வைரல் படம் நிச்சயமாக திருத்தப்பட்டது. இருந்தும், சில யானைக் குட்டிகள் மரபணு சீர்குலைவினால் வெளிர் பிங்க் நிறம் கொண்டிருக்கலாம், ஆனால் இந்த வரை படத்தில் இருப்பது போன்ற நிறம் கொண்ட யானைகள் எங்கும் இல்லை.

டெல்லி பல்கலைக் கழகத்தின் கார்கி கல்லூரியின் விலங்கியல் துறை முன்னாள் பேராசிரியர் உமா கங்கூலியிடமும் இது குறித்து நாங்கள் பேசினோம். உடலில் மண்ணைப் போடுவதன் மூலம் தோலின் நிறத்தை நிரந்தரமாக மாற்ற முடியாது. இந்த வைரல் படத்தில் இருக்கும் யானை உண்மையானது அல்ல’ என்று அவரும் கூறினார்.

இந்தத் தவறான க்ளைமுடன் கூடிய இந்தப் படம் ஒரு ஃபேஸ்புக் பயனரான ஹ்ரித்திக் மல்ஹோத்ரா என்பவரால் பகிரப்பட்டது. அந்தத் தற்குறிப்பின்படி அந்தப் பயனர் டெல்லியில் வசிக்கிறார்.

निष्कर्ष: விஷ்வாஸ் நியூஸ் இந்தக் க்ளைம் பொய் என்று கண்டு பிடித்தது. இந்தப் படத்தில் காணப்படும் யானை டிஜிட்டல் சாதனங்களின் உதவியோடு தயாரிக்கப்பட்டது.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்