Fact Check: மீனை வைத்திருக்கும் ஸ்மிருதி இரானியின் படம் நவராத்திரியின் போது எடுக்கப்பட்டதல்ல

Fact Check: மீனை வைத்திருக்கும் ஸ்மிருதி இரானியின் படம் நவராத்திரியின் போது எடுக்கப்பட்டதல்ல

புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்). மத்திய அமைச்சரும் எம்.பி.யுமான ஸ்மிருதி இரானியின் இரண்டு புகைப்படங்களின் கொலாஜ் (தொகுப்புப்படம்) சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு படத்தில் அவர் ஒரு மீனை வைத்திருப்பதைக் காணலாம், மற்றொன்றில் அவர் துர்கா தேவியின் படத்தை வைத்திருப்பதைக் காணலாம். சிலர் இந்தப் படத்தை நவராத்திரியின் போது எடுக்கப்பட்டதாகக் கூறி பல்வேறு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

விஷ்வாஸ் நியூஸ் வைரல் போஸ்ட்டை ஆராய்ந்து, அந்தக் கூற்று தவறாக வழிநடத்துவதாகக் கண்டறிந்தது. இந்த வைரல் படம் நவராத்திரிக்கு முந்தைய ஏப்ரல் 6, 2024 அன்று ஸ்மிருதி இரானி வடசென்னையில் பாஜக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்தபோது எடுக்கப்பட்டதாகும். சைத்ரா நவராத்திரி இந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17 ஆம் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வைரலாவது என்ன?

ஃபேஸ்புக் பயனர் ஹர்ஜீத் சிங் ஜோஹர் ஏப்ரல் 15, 2024 அன்று இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளார், நவராத்திரியின் போது ஒரே ஃப்ரேமில் மீன் ஒன்றையும் மற்றும் துர்கா தேவியும் ஒரே புகைப்படத்தில் தோன்றுவதாக இருப்பதைக் கேள்விக்குள்ளாக்கினார்.

விசாரணை:

விஷ்வாஸ் நியூஸ் ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொன்றாக முழுமையாக ஆய்வு செய்தது.

முதல் படம்:

கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலை மேற்கொண்டபோது, ஹிந்துஸ்தான் டைம்ஸின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்மிருதி இரானி மீனை வைத்துக் கொண்டிருக்கும் படத்தைக் கண்டோம். இது ஏப்ரல் 6, 2024 அன்று சென்னை வடக்குத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற செய்தி இணையதளங்களும், இந்த நிகழ்வு ஏப்ரல் 6, 2024ல் நிகழ்ந்ததாகவும் இதில் ஸ்மிருதி இரானிக்கு மீனவர்கள் ஒரு பெரிய மீனை பரிசாக அளித்ததாகவும் அறிவிக்கின்றன.

இரண்டாவது படம்:

ஏப்ரல் 6, 2024 அன்று அவரது சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் துர்கா அன்னையின் புகைப்படத்தை வைத்திருக்கும் ஸ்மிருதி இரானியின் படம், வடசென்னை மற்றும் திருவள்ளூரில் அவர் பிரச்சாரம் செய்ததை விவரிக்கும் ட்வீட்டில் காணப்பட்டது.

இந்தியாவில் ஏப்ரல் 9, 2024 அன்று நவராத்திரி தொடங்கியது என்பதால், இந்த இரண்டு படங்களும் நவராத்திரிக்கு முன் எடுக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது.

எங்கள் கண்டுபிடிப்புகளை சரிபார்க்க, சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரபாகரன் தமிழரசுவைத் தொடர்புகொண்டோம், அவர் இரண்டு படங்களும் உண்மையில் ஏப்ரல் 6, 2024 அன்று தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்தினார்.

பயனர் ஹர்ஜீத் சிங் ஜோஹரின் சுயவிவரத்தை விஷ்வாஸ் நியூஸ் ஸ்கேன் செய்தது, அவர் தவறான கூற்றுடன் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். கான்பூரில் வசிப்பவர், அவரை 400 பேர் பின்தொடர்கிறார்கள்.

முடிவு: ஸ்மிருதி இரானியின் இந்த படங்கள் நவராத்திரியில் எடுக்கப்பட்டவை என்கிற கூற்று தவறானது. இரண்டு படங்களும் ஏப்ரல் 6, 2024 அன்று சைத்ரா நவராத்திரி தொடங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்டவை.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்