Fact Check: அபுதாபியில் BAPS கோவில் திறப்பு விழாவிற்கு முன்பு மழை குறித்தான தவறான கூற்று

Fact Check: அபுதாபியில் BAPS கோவில் திறப்பு விழாவிற்கு முன்பு மழை குறித்தான தவறான கூற்று

புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்) சமீபத்தில், அபுதாபியில் (பாப்ஸ்) BAPS கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், நாட்டின் மற்றும் உலகின் பல முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர். தற்போது இது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, இதில் கோவிலுக்கு வெளியே மழை பெய்து கொண்டிருப்பதாகக் காண முடிகிறது. இந்த வீடியோவைப் பகிரும் பயனர், தொடக்க விழாவுக்கு முந்தைய இரவில் அபுதாபியில் முதல் முறையாக மழை பெய்ததாகவும், ஆனால் உள்ளூர் மக்களும் நிர்வாகமும் இது “வறண்ட பாலைவன பகுதி” என்றும் இதுபோன்று மழை இதுவரை பெய்ததில்லை என்று கூறுவதாகவும் கூறுகிறார்.

விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் அபுதாபியில் வானிலைக்கு ஏற்ப அடிக்கடி மழை பெய்வதைக் களண்டறிந்துள்ளது. BAPS கோவில் திறப்பு விழாவிற்கு முன், முதல் முறையாக மழை பெய்தது என்பது தவறாக வழிநடத்தும் கூற்றாகும்.

வைரல் பதிவில் இருப்பது என்ன?

ஃபேஸ்புக் பயனர் வைரல் போஸ்ட்டை பகிர்ந்து, “ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் ஒரு அற்புதமான மற்றும் நம்பமுடியாத சம்பவம் நடந்தது…. எந்த யக்ஞத்தின் பொழுதிலும் மழை பெய்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அபுதாபியில் கோயில் திறப்பு விழாவிற்கு சற்று முன்னதாக மழை பெய்தது, இது குறித்து அங்குள்ள நிர்வாகம் இது அடர்ந்த பாலைவனப் பகுதி, இதுவரை இங்கு மழை பெய்ததில்லை என்று கூறுகிறது! உலகின் தலைசிறந்த உலகத் தலைவர் திரு நரேந்திர மோடி அபுதாபியின் பிரமாண்ட கோவிலை திறந்து வைக்கிறார்.” என்று எழுதியுள்ளார். 

போஸ்டின் ஆர்க்கைவ் பதிப்பை இங்கே பார்க்கவும்.

விசாரணை:

எங்கள் விசாரணையின் தொடக்கமாக, முதலில் அபுதாபியின் தற்போதைய வானிலை தொடர்பான செய்திகளைத் தேடினோம். எங்களது தேடலில் சர்வதேச செய்தி கிடைத்தது, அதில் தரப்பட்டுள்ள தகவலின் படி, “வானிலை ஆய்வு மையம்  ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி உட்பட பல நகரங்களில் கனமழை குறித்தான எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது.”

விசாரணையின் அடுத்த கட்டமாக, அபுதாபியில் இவ்வாறான மழை முதல் முறையாக பெய்ததா என்பதைக் கண்டறிய முயற்சித்தோம். தேடலில், யுஏஇ-யின் செய்தி இணையதளமான ‘தி நேஷனல் நியூஸ்’ இன் யூடியூப் சேனலில் 26 அக்டோபர் 2023 அன்று பதிவேற்றப்பட்ட வீடியோவை கண்டுபிடித்தோம். அதில் அபுதாபியில் கனமழை பெய்தது பற்றிய குறிப்பு உள்ளது.

அதே போல், ஜனவரி 26 , 2020 அன்று கலீஜ் டைம்ஸின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படியும் –  துபாய் , அபுதாபி , ஷார்ஜா மற்றும் வேறு சில நகரங்களில் கனமழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகள் தேசிய வானிலை மையத்தின் ஒரு பதிவில், அபுதாபியில் மழைக்குப் பிறகு தண்ணீர் தேங்குவது போன்ற வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பான 2018ஆம் ஆண்டுக்கான செய்திகள் ‘தி நேஷனல் நியூஸ்’ இணையதளத்திலும் இந்த செய்தியைக் காணலாம்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாலைவனத்தில் மழை பெய்யும் செயல்முறையை விளக்கும் வீடியோவை கலீஜ் டைம்ஸில் நாங்கள் கண்டோம், இது ‘க்ளவுட் சீடிங்’ பற்றிய தகவலை வழங்குகிறது. 

ஸ்டாடிஸ்டா டாட் காம் (statista.com) தளத்தில் 2005 முதல் 2020 வரையில் பெய்த மழை நாட்களின்  ஒரு  கிராஃப்பும்  பதிவேற்றம் செய்யப்பட்டது.

வைரலான காணொளியை உறுதிப்படுத்த அபுதாபியில் வாழும் இந்திய பத்திரிக்கையாளர் சான்யா அஜிஸை தொடர்பு கொண்டோம். வைரலான பதிவை அவருடன் பகிர்ந்து கொண்டதும், அவர், அபுதாபியில் மழைக்காலம் டிசம்பர் முதல் மார்ச் வரை நீடிக்கும் என்றும், இந்த காலகட்டத்தில் மழை மிதமாகவும் கனமாகவும் பெய்யும் என்றார்.

வைரல் பதிவை பகிர்ந்த ஃபேஸ்புக் பக்கத்தை சோசியல் ஸ்கேனிங் செய்ததில் அந்தப் பயனரை 10 ஆயிரம் பேர் பின்தொடர்வதைக் கண்டறிந்தோம்.

முடிவு: விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில், அபுதாபியில் வானிலைக்கு ஏற்ப அடிக்கடி மழை பெய்வதாக கண்டறிந்துள்ளது. BAPS கோவில் திறப்பு விழாவிற்கு முன், முதல் முறையாக மழை பெய்தது எனும் கூற்று தவறானது.

Misleading
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்