X
X

உண்மை சரிபார்ப்பு: புகைப்படக்காரர் தரையில் படுத்தபடி பிரதமர் மோடியை புகைப்படம் எடுப்பது போன்ற புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்றாகும்.

விஷ்வாஸ் நியூஸ் (புது தில்லி): விஷ்வாஸ் நியூஸ், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் ஒன்று பல்வேறு தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருவதைக் கண்டது. இந்தப் படத்தில் புகைப்படக்காரர் ஒருவர் தரையில் படுத்துக் கொண்டு பிரதமரை புகைப்படம் எடுப்பதைக் காண முடிகிறது. விஷ்வாஸ் நியூஸ் தன்னுடைய புலனாய்வில் இந்தப் படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை கண்டுபிடித்தது. இது இரண்டு புகைப்படங்களின் இணைப்பு ஆகும்.

கிளைம்:

நேஹா சிங் ரதோர் எனும் டிவிட்டர் பயனர், தன்னுடைய ப்ரொஃபைலில் இந்த இமேஜைப் பகிர்ந்து இவ்வாறு எழுதியுள்ளார், ”क्या सीन है”

பதிவு மற்றும் அதன் ஆர்ச்சிவ் பதிப்பை இங்கு காணவும்.

https://twitter.com/NehafolksingerI/status/1577100101038018560

புலனாய்வு:

விஷ்வாஸ் நியூஸ் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் தேடலைப் பயன்படுத்தி தேடத் தொடங்கியது, இது நம்மை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய அதிகாரப்பூர்வ அக்கவுண்டில், தில்லியில் காந்தி ஸ்மிருதியில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்திலிருந்து 2 அக்டோபர், 2021 அன்று ஒரு செய்துள்ள ட்வீட்டிற்கு இட்டுச் சென்றது.

இந்த ட்வீட்டில் இருந்த இரண்டாவது புகைப்படம் வைரல் ஆன அதே புகைப்படம் ஆகும். இந்தப் படத்தில் எந்த ஒரு புகைப்படக்காரரும் இல்லை.

மேலும், siasat.com-யிலும் பிரதமர் மோடியின் புகைப்படம் பின்வரும் சொற்றொடர்களுடன் வந்திருந்ததை நாங்கள் கண்டோம்: “புது தில்லி: மஹாத்மா காந்தியின் பிறந்த நாள் விழாவில் காந்தி ஸ்மிருதியில் பிரதமர் நரேந்திர மோடி” (பிடிஐ புகைப்படம்)”

பிறகு அந்த இன்னொரு படத்தை, அதாவது புகைப்படக்காரரின் படத்தைச் சரிபார்த்தோம்

ரிவர்ஸ் இமேஜ் தேடல் எந்த முடிவுகளையும் தரவில்லை என்பதால் இதை கீவேர்டு தேடல் பயன்படுத்தி தேடினோம்.

‘photographer capturing photo lying on ground‘ (’புகைப்படக்காரர் தரையில் படுத்த நிலையில் புகைப்படம் எடுக்கிறார்’) என்கிற கீவேர்டுகள் கொண்டு கூகுள் தேடலில் தேடினோம்.

இந்த புகைப்படக்காரரின் புகைப்படத்தை alamy (அலாமி) என்கிற ஸ்டாக் புகைப்படங்கள் இணையதளத்தில் கண்டுபிடித்தோம் இந்தப் படத்தில் பிரதமர் மோடி இல்லவே இல்லை.

இந்தப் புகைப்படம் 15 மார்ச், 2017 அன்று வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கேப்ஷன் பின்வருமாறு உள்ளது, ”மாறுபட்ட கோணத்திலிருந்து ஒரு பெரிய கட்டடத்தை புகைப்படக்காரர் புகைப்படம் எடுக்கையில், தரையில் படுத்தபடி உள்ளார், க்ரியேட்டிவ் ஃபோட்டோகிராஃபி பாணி.”

இந்தப் புகைப்படம் ‘Ingemar Magnusson‘(‘இன்கிமார் மான்க்னுஸன்’) ஆல் வழங்கப்பட்டதாகும். விஷ்வாஸ் நியூஸ் இவரையும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டது, ஆனால் நாங்கள் இதுவரை எந்த பதிலையும் பெறவில்லை.

புலனாய்வின் அடுத்த கட்டமாக பிடிஐயில் ஃபோட்டோ டெஸ்க்கில் பணியாற்றும் ஒரு பத்திரிக்கையாளரை தொடர்பு கொண்டோம். அவர், நரேந்திர மோடியின் புகைப்படம் 2021ல் பிஐபி (PIB) ஆல் வழங்கப்பட்டு பிடிஐ (PTI) ஆல் வெளியிடப்பட்டது என்று அவர் உறுதி செய்தா்.

விஷ்வாஸ் நியூஸ், பிஜேபி செய்தித்தொடர்பாளர் ஷிவ்ராஜ் குல்கர்னியை தொடர்பு கொண்டது, அவர் பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்று கூறியதோடு அவரின் இமேஜிற்கு தீங்கு விளைவிப்பதற்காக எதிர்கட்சிகளால் எடுக்கப்படும் முயற்சி இது என்றும் கருத்து தெரிவித்தார்.

விஷ்வாஸ் நியூஸ், இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தையும் தொடர்பு கொண்டது, அவர்களிடமிருந்து தகவல் வந்ததும் தெரிவிக்கப்படும்.

கடைசியாக, வைரல் புகைப்படத்தை பகிர்ந்த பயனர் குறித்த பின்புலச் சரிபார்ப்பை விஷ்வாஸ் நியூஸ் நடத்தியது. நேஹா சிங் ரதோர் டிவிட்டரில் 19.7 ஆயிரம் ஃபாலோயர்களுடன் உள்ளார்.

முடிவு: விஷ்வாஸ் நியூஸ் நடத்திய புலனாய்வில், பிரதமர் மோடியை ஒரு புகைப்படக்காரர் தரையில் படுத்தபடி புகைப்படம் எடுப்பது போன்ற இந்தப் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்று தெரியவருகிறது. இந்த வைரல் இமேஜ் போலியானது.

  • Claim Review : क्या सीन है
  • Claimed By : நேஹா சிங் ரதோர்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later