Fact Check: சென்னையில் போக்குவரத்து விதிமீறல் செய்பவரின் புகைப்படம் காட்சிப் திரையில் காட்டப்படுவதாக கூறுவது தவறானது

Fact Check: சென்னையில் போக்குவரத்து விதிமீறல் செய்பவரின் புகைப்படம் காட்சிப் திரையில் காட்டப்படுவதாக கூறுவது தவறானது

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). சென்னை என்ற பெயரில் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், சாலையில் போக்குவரத்து சிக்னலில் உள்ள டிஸ்ப்ளே போர்டில், போக்குவரத்து விதிமீறலில் ஏற்பட்ட நபரின் புகைப்படத்துடன் சலான் விவரங்களும் தெரிகிறது. இதைப் பகிர்ந்துள்ள சில சமூக ஊடக பயனர்கள், சென்னையில் போக்குவரத்து விதிகளை யாராவது மீறினால் அபராதத்துடன் அவரது முகமும் காட்சிப் பலகையில் (டிஸ்ப்ளே போர்டில்) காட்டப்படும் என்று கூறி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் வைரலான இந்த காணொளி ஸ்பெஷல் எஃபெக்ட்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்று விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் கண்டறிந்துள்ளது. சென்னையில் தற்போது அப்படிப்பட்ட வசதி இல்லை. ஸ்பெஷல் எஃபெக்ட்களுடன் உருவாக்கப்பட்ட இந்த காணொளியை பகிர்வதன் மூலம் தவறான கூற்று ஒன்று முன்வைக்கப்படுகிறது.

வைரலான இந்த பதிவில் என்ன உள்ளது

ட்விட்டர் பயனர் ஏவியேட்டர் அனில் சோப்ரா (காப்பக இணைப்பு) ஜூன் 22 அன்று இந்த காணொளியைப் பகிர்ந்து கொண்டு எழுதுகையில்.

(சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறினால், உங்கள் முகமும் அபராதமாக காட்டப்படும்… நல்ல முயற்சி. டெல்லி பற்றிய எண்ணங்கள்? சாலைகளில் பல முரட்டுத்தனமான ஓட்டுநர்கள் உள்ளனர்.)

முகநூல் பயனர் ‘ஜிண்டோ’ (காப்பக இணைப்பு) ஜூன் 23 அன்று இதே காணொளியைப் பகிர்ந்துள்ளார்.

விசாரணை

வைரலான இந்த கூற்றைச் சரிபார்க்க, மே 20, 2022 தேதியையும் மதியம் 12 மணியையும் கொடுத்து முதலில் நாங்கள் இந்த காணொளியை கவனமாகப் பார்த்தோம். அந்த காணொளியில், சலான் தொகை ரூ.1000 என்றும், சிவப்புக் கோட்டைத் தாண்டியதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதைப் பற்றிய முக்கிய வார்த்தைகளுடன் கூகுளில் திறந்த தேடலை நாங்கள் மேற்கொண்டோம். கர்லிடேல்ஸ் என்ற பெயரை உடைய இணையதளம் (காப்பக இணைப்பு) ஜூன் 12, 2023 அன்று ஒரு இடுகையின் அடிப்படையில் இந்தச் செய்தியை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது, “இந்தியாவில் போக்குவரத்து விதி மீறல்கள் என்பது மிகவும் சாதாரணமான ஒன்று. இது பல விபத்துக்களுக்கு வழிவகுக்கிறது, இதில் பல பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர் அல்லது காயமடைகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்காணிக்க சென்னை போக்குவரத்து காவல்துறை மனிதர்களுக்குப் பதிலாக வாகனத்தின் வேகம் மற்றும் ஓட்டுனர் செய்த விதி மீறல்களை படம்பிடிக்கிற கேமராக்கள் மற்றும் வேக உணரிகளை பொருத்தத் தொடங்கியுள்ளது. அவர்கள் அந்த காணொளிகளை ஆதாரமாக எடுத்து, போக்குவரத்து விதி மீறல்களையும் அபராதத் தொகையையும் காட்சிப் பலகைகள் மூலம் காட்டுகிறார்கள். இது போன்று போக்குவரத்து விதிகளை மீறும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இது ஒரு பாடத்தை புகட்டுகிறது”.

கர்லிடேல்ஸின் சரிபார்க்கப்பட்ட முகநூல் பக்கமும் ஜூன் 13 அன்று இந்த இடுகையைப் பகிர்ந்துள்ளது (காப்பக இணைப்பு).

இதைத் தவிர, எந்த ஒரு இணையதளத்திலும் இதைப் பற்றிய செய்திகளை நாங்கள் பார்க்கவில்லை. ஆம், “வேக மீறல்களைக் கண்டறிய 30 ஸ்பீட் ரேடார் கண்களை (guns) மாநகரில் பொருத்தவுள்ளதாக கிரேட்டர் சென்னை போக்குவரத்து காவல் துறையினர் (ஜிசிடிபி) தெரிவித்தனர் என்று, 20 ஜூன் 2023 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நகரின் வேக வரம்பு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மணிக்கு 40 கிமீ ஆகவும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மணிக்கு 50 கிமீ ஆகவும் உள்ளது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது: ஓட்டுனர்கள் அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டுவது பெரும் சவாலாக உள்ளது. போக்குவரத்து போலீசாரை எங்களால் எல்லா இடங்களிலும் நிறுத்த முடியாது. வேக மீறல்கள் கண்டறியப்பட்டால் 30 ஸ்பீட் ரேடார் கண்களும் (guns) தானாகவே சலான்களை வழங்கும். நகரத்தில் அவற்றை நாங்கள் பயன்படுத்துவது இதுவே முதல் முறை. ரூபாய் 54.33 லட்சம் மதிப்புள்ள 10 கருவிகளை ஏற்கனவே நாங்கள் நிறுவியுள்ளோம். இருப்பினும், காட்சித் திரையில் காட்டப்படும் சலான் தொகை, காரணம் மற்றும் புகைப்படம் குறித்து செய்திகளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

நியூஸ்18 இணையதளம் 2023 ஜூன் 20 அன்று, சென்னை போக்குவரத்துக் காவல் துறையானது, மாநகரில் மணிக்கு 40 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தது. இதன் கீழ், வேக மீறல்களைக் கண்டறிய 30 அதிநவீன ஸ்பீட் ரேடார் கண்களை (guns) கிரேட்டர் சென்னை போக்குவரத்து காவல் (ஜிசிடிபி) நிறுவ உள்ளது. இத்துடன், முக்கிய இடங்களில் 10 ஸ்பீட் ரேடார் கண்கள் (guns) ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. வெவ்வேறு இடங்களில் ஆறு டிஜிட்டல் வேகக் காட்சிப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமான வேகத்தில் வாகனம் ஓட்டினால் அது பிடிக்கப்பட்டு பின்னர் அவர்களின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு சலான் அனுப்பப்படும். இந்தச் செய்தியிலும் விதி மீறல் மற்றும் புகைப்படத்துடன் கூடிய காட்சிப் பலகையில் காட்டப்படும் சலான் தொகை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கிரேட்டர் சென்னை போக்குவரத்து காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து 29 ஜூன் 2023 அன்று ஒரு குறிப்பு (காப்பக இணைப்பு) ட்வீட் செய்யப்பட்டுள்ளது. கிரேட்டர் சென்னை போக்குவரத்து காவல் ஆறு வேகக் காட்சிப் பலகைகளை (டிஸ்ப்ளே போர்டுகளை) நிறுவியிருப்பதாகவும், அதில் அந்த பலகையைக் கடக்கும் அனைத்து வாகனங்களின் வேகம் தெரியும் என்றும் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டி வேக வரம்பை மீறினாரா அல்லது மீறவில்லையா என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த பலகைகள் எச்சரிக்கைக்காக மட்டுமே உள்ளன, சலானை உருவாக்குவதற்காக அல்ல. அதாவது காட்சிப் பலகையில் (டிஸ்ப்ளே போர்டில்) வேகம் மட்டுமே தெரியும். அதைத் தவிர வேறொன்றுமில்லை.

இது குறித்த கூடுதல் தகவலுக்கு, சென்னையைச் சேர்ந்த உள்ளூர் பத்திரிகையாளர் சுரேஷ் மூர்த்தியைத் நாங்கள் தொடர்புகொண்டோம். அவர் கூறுகையில், ​​“சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார் நகரில் வேகக்கட்டுப்பாடு மணிக்கு 40 கி.மீ. ஆக நிர்ணயம் செய்தனர். நகரத்தில் சில வேகக் காட்சிப் பலகைகளும் நிறுவப்பட்டுள்ளன. வாகனத்தின் வேகம் அவற்றில் தெரியும். காட்சிப் பலகையில் புகைப்படங்கள் அல்லது அபராதத் தொகையை காட்டும் வசதி இதுவரை இல்லை அல்லது அறிமுகப்படுத்தப்படவில்லை.

இதையடுத்து வைரலான காணொளி குறித்து நாங்கள் கூகுளில் தேடி பார்த்தோம். அந்த முக்கிய வார்த்தையின் தேடல் எங்களை இன்ஸ்டாகிராம் பயனர் ‘தி கல்ச்சர் கல்லி’யின் (காப்பக இணைப்பு) ஒரு இடுகைக்கு அழைத்துச் சென்றது. வைரலான காணொளியை ஜூன் 14 தேதியிட்ட இந்த இடுகையில் காணலாம். ரிகெட் இந்தியன் (Riged Indian) என்ற பயனர் தான் இந்த கான்செப்ட் காணொளியை உருவாக்கியுள்ளார் என்று எழுதப்பட்டுள்ளது. இது ஒரு CGI கான்செப்ட் காணொளியாகும். அதன் பொருள் அது உண்மை இல்லை என்பதாகும்.

ரிகெட் இந்தியன் (Riged Indian) எந்த பெயரை உடைய ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் ஜூன் 8 அன்று இந்த காணொளியை (காப்பக இணைப்பு) வெளியிட்டுள்ளார். இது ஒரு CGI கான்செப்ட் காணொளி என்று எழுதப்பட்டுள்ளது.

மேலும் சில ஸ்பெஷல் எஃபெக்ட்களின் காணொளிகளை இந்த பயனரின் சுயவிவரத்தில் காணலாம். இந்த காணொளியை (காப்பக இணைப்பு) எவ்வாறு உருவாக்குவது என்பதையும் 16 ஜூன் 2023 அன்று இந்த பயனர் விளக்கினார். VFX இன் பயன்பாட்டை இந்த காணொளியில் காணலாம்.

மேலும் தகவலுக்கு, நாங்கள் காணொளி நிபுணர் அருண்குமாரிடம் பேசினோம். அவர் கூறுகையில், “இந்த காணொளியில், போக்குவரத்து விதிகளுக்கு பதிலாக அபராதமும் புன்னகைக்கிற புகைப்படமும் ஒன்றாக பதிவிடப்பட்டுள்ளது, இது முற்றிலும் போலியானது என்று அப்பட்டமாக தெரிகிறது. உண்மையாக இருந்திருந்தால் காரின் நம்பர் பிளேட் தெரிந்திருக்கும். ஸ்பெஷல் எஃபெக்ட்களுடன் உருவாக்கப்பட்ட காணொளி தான் இது. நீங்கள் ஒரு gfx கலைஞராக இருந்தால், ஆஃப்டர் அடோப் எஃபெக்ட் மென்பொருளைக் கொண்டு நிமிடங்களில் இதை எளிதாக உருவாக்கலாம். மேலும், கேப்கட், veet போன்றவை – போன்ற எஃபெக்ட்-ஐ உருவாக்க முடிகிற பல மொபைல் செயலிகளும் இப்போது உள்ளன.

எங்கள் விசாரணையின் முடிவில், டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட காணொளியை தவறான கூற்றுடன் பகிர்ந்துள்ள ட்விட்டர் பயனரான ‘ஏவியேட்டர் அனில் சோப்ரா’வின் சுயவிவரத்தை நாங்கள் ஆராய்ந்தோம். அக்டோபர் 2011 முதல், ட்விட்டருடன் தொடர்புடைய இந்த பயனருக்கு 132 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர். பயனர் ஓய்வு பெற்ற ஒரு விமானப்படை அதிகாரி ஆவர்.

முடிவுரை: சென்னையில் 6 வேகக் காட்சிப் பலகைகளை கிரேட்டர் சென்னை போக்குவரத்து காவல் நிறுவியுள்ளது. இதில், வாகனங்களின் வேகம் பலகையில் (போர்டில்) தெரியும். டிரைவரின் முகம், அபராதத் தொகை, காரணம் ஆகியவை காட்சிப் பலகையில் (டிஸ்ப்ளே போர்டில்) தெரிவதில்லை. சமூக ஊடகங்களில் வைரலான காணொளி எஃபெக்ட்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்படும் கூற்று பொய்யானது.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்