Fact Check: வங்கதேசத்தில் ஹாஸ்டலில் தீ வைக்கப்படுவதாகக் காட்டும் வீடியோ பழையது

விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில், இந்த வைரல் கூற்று தவறாக வழிநடத்துவதை கண்டறிந்தது. இந்தக் வீடியோ வங்கதேசத்தைச் சேர்ந்தது, ஐந்து மாதமத்திற்கு முந்தைய  இந்த வீடியோவில் ஒரு வணிக கட்டிடம் தீப்பிடிப்பதைக் காண முடிகிறது. இந்த பழைய வீடியோவை வங்கதேசத்தின் தற்போதைய நிலவரத்துடன் தொடர்புபடுத்தி பொய்யாக பரப்பி வருகின்றனர்.

Fact Check: வங்கதேசத்தில் ஹாஸ்டலில் தீ வைக்கப்படுவதாகக் காட்டும் வீடியோ பழையது

புது தில்லி விஷ்வாஸ் செய்தி – கட்டிடம் தீப்பிடித்து எரிவதைக் காட்டும் வீடியோ ஒன்று  சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பங்களாதேஷில் போராட்டம் நடத்திய மாணவர்களின் விடுதி எரிக்கப்படுவதை சித்தரிப்பதாக, அதை பங்களாதேஷின் தற்போதைய சூழ்நிலையுடன் தொடர்புபடுத்தி வீடியோ பகிரப்படுகிறது.

விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில், இந்த வைரல் கூற்று தவறாக வழிநடத்துவதை கண்டறிந்தது. இந்தக் வீடியோ வங்கதேசத்தைச் சேர்ந்தது, ஐந்து மாதமத்திற்கு முந்தைய  இந்த வீடியோவில் ஒரு வணிக கட்டிடம் தீப்பிடிப்பதைக் காண முடிகிறது. இந்த பழைய வீடியோவை வங்கதேசத்தின் தற்போதைய நிலவரத்துடன் தொடர்புபடுத்தி பொய்யாக பரப்பி வருகின்றனர்.

வைரலான பதிவில் என்ன இருக்கிறது?

வைரலான வீடியோவைப் பகிர்ந்து, பேஸ்புக் பயனர் ஒருவர் இவ்வாறு எழுதியுள்ளார், “டாக்கா: ஹசீனா வாஜித்தின் குண்டர்கள் இப்போது மாணவர்களை உயிருடன் எரித்து வருகின்றனர். பெங்காலி போலீசார் மாணவர்களின் விடுதிகளை எரிக்கத் தொடங்கியுள்ளனர்.” போஸ்ட்டின் ஆர்க்கைவ் பதிப்பை இங்கே பார்க்கவும்.

புலனாய்வு:

கூகுள் லென்ஸ் மூலம் வைரலான வீடியோவின் கீஃப்ரேம்களைத் தேடி எங்கள் புலனாய்வைத் தொடங்கினோம். தேடலில், இந்த வீடியோ பல செய்தி இணையதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டோம். ‘ஆன் டிமாண்ட் நியூஸ்’ என்ற சரிபார்க்கப்பட்ட யூடியூப் சேனலில் மார்ச் 1, 2024 அன்று பதிவேற்றப்பட்ட வீடியோவுடன் வழங்கப்பட்ட தகவலின்படி, இந்த வீடியோ பங்களாதேஷின் டாக்காவில் ஆறு மாடி கட்டிடம் தீப்பிடித்த சம்பவத்தைச் சேர்ந்ததாகும். 

இந்தத் தகவலின் அடிப்படையில், நாங்கள் வீடியோவைத் தேடத் தொடங்கினோம், மேலும் இது தொடர்பான செய்திகள் பிப்ரவரி 29, 2024 அன்று டாக்கா போஸ்டின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதைக் கண்டோம். வழங்கப்பட்ட தகவலின்படி, டாக்காவின் பெய்லி சாலையில் அமைந்துள்ள குச்சிபாய் உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணியாளர்கள் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியில் வைரலான வீடியோவைப் போன்ற ஒரு வீடியோ உள்ளது.

இதே விஷயத்தில் டாக்கா ட்ரிப்யூனின் அறிக்கை, பெய்லி சாலையில் அமைந்துள்ள ஏழு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குச்சிபாய் உணவகத்தின் இரண்டு ஊழியர்கள் இறந்ததாகக் கூறியுள்ளது. உணவக மேலாளர் ஜேசன் கூறுகையில், தீ விபத்து ஏற்பட்ட போது 25 ஊழியர்கள் பணியில் இருந்ததாகவும், அவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும் கூறினார். மேலும் அவர், சாமோக் என்ற டீக்கடையில் இருந்து தீப்பிடிக்கத் தொடங்கியது என்றும் கூறினார். முழு செய்தியையும் இங்கே படிக்கலாம்.

மார்ச் 1 2024 அன்றைய அல் ஜசீரா செய்தியின்படி, இந்த கட்டிட விபத்தில் 45 பேர் இறந்திருக்கிறார்கள். வைரலான வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, வங்கதேசத்தின் வதந்திகள் ஸ்கேனரின் ஃபேக்ட் செக்கரான சஜ்ஜத் ஹுசைன் சவுத்ரியைத் தொடர்புகொண்டு, வைரலான வீடியோவை அவருடன் பகிர்ந்துகொண்டோம். அவர் கூறுகையில், “இந்த வீடியோ டாக்காவில் இருந்து ஒரு பழைய கேஸ், அங்கு ஒரு கட்டிடம் தீப்பிடித்தது.” என்று உறுதிப்படுத்தினார்

தவறான பதிவைப் பகிர்ந்த பயனரின் ஃபேஸ்புக்கை ஸ்கேன் செய்தபோது, அந்த பயனர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது.

முடிவு: விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில், வைரல் கூற்று தவறானது என்று கண்டறிந்தது. இந்த வீடியோ பங்களாதேஷை சேர்ந்த்து, இது ஐந்து மாதங்களுக்கு முன்பு வணிக கட்டிடம் தீப்பிடித்தது குறித்தானது. வங்கதேசத்தின் தற்போதைய நிலவரத்தை தொடர்புபடுத்தி பழைய வீடியோ பரப்பப்படுகிறது.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்