Fact Check: மசூதியில் உள்ள பெண்களின் ஆட்சேபகரமான படம் உண்மையானது அல்ல , இது ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டது , இது மதப்பிரச்சார நோக்கத்துடன் பகிரப்படுகிறது

Fact Check: மசூதியில் உள்ள பெண்களின் ஆட்சேபகரமான படம் உண்மையானது அல்ல , இது ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டது , இது மதப்பிரச்சார நோக்கத்துடன் பகிரப்படுகிறது

புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்). நாடு மற்றும் உலகம் முழுவதும் இஸ்லாமியர்களின் புனிதமான ரம்ஜான் மாத காலத்தில் சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

வைரல் படத்தில்  மசூதிக்குள் இரண்டு பெண்கள் ஹிஜாப் மற்றும் பிகினி அணிந்திருப்பதாகவும் முத்தமிட்டுக் கொள்வதைப் போலவும் காணப்படுவதாகத் தெரிகிறது. அதே நேரத்தில், இந்த படத்தில் பிற பெண்கள் பலர் சுற்றிலும் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. ரம்ஜானுடன் இணைத்து வைரலான புகைப்படத்தைப் பகிர்ந்து பயனர்கள் ஆட்சேபகரமான கூற்றுகளை முன்வைக்கின்றனர்.

விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் வைரலான படம் உண்மையானது அல்ல, மாறாக இது ஒரு ஏஐ உருவாக்கப் படம் என்று கண்டறிந்துள்ளது, அதாவது இந்தப் படம், ஆர்ட்டிஃபீஷியல் இன்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் பிரச்சார நோக்கத்தில் போலியான கூற்றுகளுடன் பரப்பப்படுகிறது.

வைரல் போஸ்ட்டில் இருப்பது என்ன?

வைரல் போஸ்ட்டை பகிர்ந்த X பயனர், ”ஆமீன் &*#$ ரோஜே கி அஃப்தாரி ஷுபா மே ஷாஹ்ரி ஹோகி“ (”ஆமீன் &*#$ நோன்பின் இப்தார் காலையில் முறிக்கப்படும்”) என்று எழுதியிருக்கிறார்.

போஸ்ட்டின் ஆர்க்கைவ் பதிப்பை இங்கே காணவும்

விசாரணை

எங்கள் விசாரணையின் தொடக்கமாக, நாங்கள் செய்த முதல் விஷயம் என்னவென்றால் படத்தை கவனமாகப் பார்ப்பதுதான்.

படத்தில், எங்களுக்கு முன்னால் காணப்படும் இரண்டு பெண்களுக்கும் தலா மூன்று கால்கள் இருப்பதாகப் பார்க்க முடிகிறது. அதே போல, பின்னால் அமர்ந்திருக்கும் பெண்கள் எவருக்கும் முகத்தில் மூக்கு இல்லை, இதனுடன் கைகளில் விரல்களும் குட்டையாக உள்ளன.  கைகள் மற்றும் உடலின் அமைப்பும் தெளிவானதாக இல்லை. இது தவிர மசூதியின் சுவரில் எழுதப்பட்ட அரபு எழுத்துக்களும் முழுமையானதாக இல்லை.

ஆரம்ப விசாரணை படம் ஏஐ என சந்தேகிக்க வழிவகுத்தது. அதன் அடிப்படையில் நாங்கள் விசாரணையைக் கொண்டு சென்றோம், மேலும் இந்த புகைப்படம் ஏஐ உதவியுடன் செய்யப்பட்ட புகைப்படங்களை சரிபார்ப்பதற்கான ஒரு கருவி மூலம் சரிபார்க்கப்பட்டது. ஹைவ் மாடரேஷனின் (Hive Moderation) படி, ஏஐ-ஆல் இந்த படத்தை உருவாக்குவதற்கான நிகழ்தகவு சுமார் 99.7 சதவீதம் ஆகும்.

அங்கே,  இந்தப் படத்தை இன்னொரு ஏஐ கருவியிலும் பதிவேற்றம் செய்து பார்த்தோம். அதில் காணப்பட்ட முடிவுகளின்படி, 92.70 சதவீதம் ஏஐ கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகக் காட்டியது.

படம் தொடர்பாக ஏஐ நிபுணர் அமர் சின்ஹாவை தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், ”இந்த படம் ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டது. ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட படம் முற்றிலும் உண்மையானதாகத் தோற்றம் அளிக்கிறது என்றபோதும் இதில் சில குறைபாடுகள் உள்ளன என்பது இது குறித்த உண்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது. எந்தவொரு பொதுவான AI கருவியிலும் இத்தகைய படங்களை எளிதாக உருவாக்க முடியும்.” என்றார்.

போலி போஸ்ட்டை பகிர்ந்த எக்ஸ் ஹேண்டிலை சோஷியல் ஸ்கேனிங் செய்ததில் அந்தப் பயனரை 53 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்வதைக் கண்டறிந்தோம்.

முடிவு: விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் வைரலான படம் உண்மையானது அல்ல, மாறாக இது ஏஐ உருவாக்கிய படம், அதாவது ஆர்ட்டிஃபீஷியல் இண்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டது. இந்தப் படம் பிரச்சார நோக்கில் போலியான கூற்றுகளுடன் பரப்பப்படுகிறது.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்