உண்மைச் சரிபார்ப்பு: மேகன் மார்க்லின் வைரலான படம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கின்போதுள்ளது அல்ல

மேகன் மார்கல் மற்றும் இளவரசி டயானாவின் படம் பற்றி கூறப்பட்டதை விஸ்வாஸ் நியூஸ் விசாரித்தபோது அது தவறானது என நிரூபிக்கப்பட்டது. மக்கள் இப்போது சமூக ஊடகங்களில் தவறாக கூறிக்கொண்டு பகிர்ந்து வருகின்ற மேகன் மார்க்லின் வைரலான அந்தப் படம் 2019 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்..

உண்மைச் சரிபார்ப்பு: மேகன் மார்க்லின் வைரலான படம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கின்போதுள்ளது அல்ல

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): மேகன் மார்க்ல் மற்றும் இளவரசி டயானாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கு மேகன் மார்கல் இளவரசி டயானா போன்று உடையணிந்து வந்ததாக கூறப்படுகிறது.

விஸ்வாஸ் நியூஸ் விசாரணையில் வைரலான கூற்று பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள் இப்போது சமூக ஊடகங்களில் தவறாக கூறிக்கொண்டு பகிர்ந்து வருகின்ற மேகன் மார்க்லின் வைரலான அந்தப் படம் 2019 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்..

உரிமைகோரல்:

ட்விட்டர் பயனர் Ofentse Mwase “நான் “தொந்தரவு கொடுக்கவில்லை என்றால்” என்ற தலைப்புடன் இந்த படத்தைப் பகிர்ந்துள்ளார், மேகன் மார்க்ல் நேற்று இளவரசி டயானாவைப் போல உடை அணிந்திருந்தார்.”

இடுகையின் காப்பக இணைப்பை இங்கே பார்க்கவும்..

விசாரணை:

கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் நாங்கள் அந்த புகைப்படத்தை தேடினோம். வோக் வெளியிட்ட செய்தியில் இந்தப் படத்தை நாங்கள் கண்டோம். இது 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

விசாரணையை மேற்கொண்டு செய்ய, தொடர்புடைய முக்கிய வார்த்தைகளுடன் நாங்கள் கூகுளில் தேட ஆரம்பித்தோம். இந்த படத்தை ஸ்டாக் இமேஜஸ் இணையதளமான அலமியில் கண்டோம். இந்த படம் நவம்பர் 2019 இல் பகிரப்பட்டுள்ளது. தலைப்பின்படி, லண்டனில் அந்த மயானத்தில் உள்ள நினைவு ஞாயிறு நினைவிடத்தில் மேகன் மார்க்ல் கலந்து கொண்டார்.

ஆராய்ச்சியின் போது, ​​2019 ஆம் ஆண்டில் இதே தகவலுடன் ராய்ட்டர்ஸ் புகைப்பட கேலரியில் நாங்கள் இந்தப் படத்தைக் கண்டோம்.

ஷட்டர்ஸ்டாக் வலைதளத்தில் பதிவேற்றப்பட்ட இளவரசி டயானாவின் வைரலான படத்தை நாங்கள் கண்டோம். தலைப்பின்படி, இளவரசி டயானாவின் இந்த படம் நவம்பர் 1991 இல் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படமானது அவர் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள கல்லறையில் தேசிய நினைவுச் சேவையில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்டது ஆகும்.

மேலும் தகவலுக்கு லண்டனைச் சேர்ந்த பத்திரிகையாளர் நவோமி கான்டனை நாங்கள் தொடர்புகொண்டோம். வைரலான புகைப்படம் தவறானது என்று அவர் எங்களிடம் கூறினார். இந்த படம் பல வருடங்கள் பழமையானது மற்றும் நவம்பர் மாதத்தில் எடுக்கப்பட்டது ஆகும், ஏனென்றால் நவம்பர் மாதத்தில் நினைவு நாளில் நாங்கள் அணிவது இந்த விதத்திலான ஆடைதான்.

விசாரணையின் முடிவில், விஸ்வாஸ் நியூஸ் போலியை வெளியிட்ட பயனாளர் Ofentse Mwase-ஐ சமூக ஊடகங்களில் தேடியது. சுயவிவரத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, டிசம்பர் 2009 முதல் இந்த பயனர் Twitter இல் செயலில் உள்ளார். இவரை 111.4K பேர் பின்தொடர்கின்றனர்.

निष्कर्ष: மேகன் மார்கல் மற்றும் இளவரசி டயானாவின் படம் பற்றி கூறப்பட்டதை விஸ்வாஸ் நியூஸ் விசாரித்தபோது அது தவறானது என நிரூபிக்கப்பட்டது. மக்கள் இப்போது சமூக ஊடகங்களில் தவறாக கூறிக்கொண்டு பகிர்ந்து வருகின்ற மேகன் மார்க்லின் வைரலான அந்தப் படம் 2019 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்..

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்