உண்மை சரிபார்ப்பு: காதி மூன்று முக கவசங்களை ரூ. 999ற்கு விற்பதாக பரவும் வைரல் இடுகை தவறானது

காதி மூன்று முக கவசங்களை ரூ. 999ற்கு விற்கவில்லை. மகாத்மா காந்தியின் படத்தை பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் மாற்றவுமில்லை.

சமூக ஊடகங்களில் ஒரு வைரல் பதிவு, காதி அதீத விலையில் முக கவசங்களை விற்பனை செய்வதாகவும், மகாத்மா காந்தியின் படத்தை பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் மாற்றியுள்ளதாகவும் கூறுகிறது. இதனைமுதலில் ட்விட்டர் பக்கத்தில் கண்டோம். இதே போன்ற கூற்றுடன் சில படங்கள் பேஸ்புக்கில் வைரலாகிவிட்டதைக் கண்டோம். விஸ்வாஸ் செய்தி விசாரணையில் இந்த கூற்றுக்கள் தவறானவை என்பது தெரியவந்துள்ளது. காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் (KVIC) தவறான செய்திகளை பரப்புவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதாக தெளிவுபடுத்தினர். மகாத்மா காந்தியின் படத்தை மாற்றவில்லை என்று அவர்கள் கூறினர்.

கூற்று

சமூக ஊடகங்களில் பல பதிவுகள், மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் காதி இந்தியா மூன்று முக கவசங்களை ரூ. 999ற்கு விற்பதாக கூறுகிறது. மேலும் காதி, மகாத்மா காந்தியின் படத்தை பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் மாற்றியுள்ளதாக கூறுகிறது. காப்பகப்படுத்தப்பட்ட இடுகையை இங்கே அணுகலாம்.

விசாரணை

கொரோனா தொற்றுநோய் காலத்தில், மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. காதி அதிக விலைக்கு முக கவசங்களை விற்பனை செய்வது குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும், காதியின் முக கவசங்களை அறிமுகப்படுத்திய பல செய்திகளை நாங்கள் கண்டோம்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முக கவசம் அணிவது முதல் கவணச்செயலாக இருப்பதால், காதி இந்தியா ஒரு தனித்துவமான மூன்று அடுக்கு முக கவசங்களை தயாரித்துள்ளது என்று ANI செய்தி கூறுகிறது.


காதி முக கவசங்களை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ட்வீட் செய்திருந்தார்.

இந்திய அரசாங்கத்தின் கீழ் காதி தயாரித்த முக கவசங்கள் கூற்றில் உள்ள முக கவசங்கள் போல் இல்லை. இரண்டும் பார்ப்பதற்கு வெவ்வேறாக இருந்தன.

கூற்றுகளை சரிபார்க்க விஸ்வாஸ் செய்தி KVICஐ தொடர்ப்பு கொண்டோம்.

“இவை காதி தயாரித்த முக கவசங்கள் அல்ல. இந்த கவசங்களின் உற்பத்தியாளர்கள் காதி என்ற பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள்… எங்கள் முக கவசங்கள் ரூ. 30லிருந்து தொடங்குகிறது,” என்று KVIC, பேஸ்புக் மெசஞ்சர் பயன்பாட்டில் எங்களுக்கு பதில் அளித்தனர்.

இந்த வைரல் கூற்று தவறானது என்று காதி மற்றும் கிராமிய கைத்தொழில் ஆணைய தலைவர் வினய் குமார் சக்சேனா ட்வீட் செய்துள்ளார்.

துணை தலைமை நிர்வாக அதிகாரி G. குருப்பிரசன்னா கூறுகையில், “நாங்கள் அதைப் பற்றி விசாரித்து வருகிறோம், தவறானது என்று கண்டறிந்தால், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுப்போம்,” என்றார்.

निष्कर्ष: காதி மூன்று முக கவசங்களை ரூ. 999ற்கு விற்கவில்லை. மகாத்மா காந்தியின் படத்தை பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் மாற்றவுமில்லை.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்