X
X

உண்மைச் சரிபார்ப்பு: இந்தோனேசியாவில் உள்ள பேருந்து விபத்தை பற்றிய காணொளியானது தவறான கூற்றுடன் பகிரப்பட்டது

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேகாலயாவில் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. விஸ்வாஸ் நியூஸ் இந்த வைரலான காணொளியை விசாரித்து, அந்த காணொளியுடன் இணைக்கப்பட்ட கூற்று தவறானது எனக் கண்டறிந்தது. விசாரணையின் போது, அந்த காணொளி மேகாலயாவைச் சேர்ந்தது இல்லை என்றும், இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் நடந்த பேருந்து விபத்து பற்றியது என்றும் நாங்கள் கண்டறிந்தோம். இந்த விபத்து மே 7 ஆம் தேதி நடந்தது, இப்போது இது தவறான கூற்றுடன் பகிரப்படுகிறது.

வைரலாவது என்ன?

சமூக ஊடகப் பயனர் (காப்பக இணைப்பு) ‘ஸ்ரீ பத்ரிநாத் இவா கேதார்நாத் தாம் ஸ்நர்’ வைரலான காணொளியைப் பகிர்ந்துகொண்டு, “மேகாலயா: டிரைவர் தேநீர் அருந்தச் சென்றார், பேருந்தின் என்ஜின் ஆன் ஆக இருந்தது, ஹேண்ட்பிரேக்கைப் பயன்படுத்த மறந்துவிட்டார், பிறகு என்ன?” பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது” என்று எழுதினார். பல மற்ற பயனர்களும் கூட இதே காணொளியை இதே கூற்றுடன் பகிர்ந்துள்ளனர். பல பயனர்கள் இந்த காணொளியை ட்விட்டர் உள்ளிட்ட பிற தளங்களில் மேகாலயாவில் நடந்த ஒரு சம்பவம் என்று கூறி பகிர்ந்துள்ளனர்.

விஸ்வாஸ் நியூஸ் விசாரணை:

இந்த விபத்து குறித்து விஸ்வாஸ் நியூஸ் தேடியபோதும், மேகாலயாவில் சமீபத்தில் நடந்த எந்த ஒரு பேருந்து விபத்தையும் குறிப்பிடும் எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இன்விட் கருவியின் உதவியுடன் இந்த காணொளியின் கீஃப்ரேம்களைத் நாங்கள் தலைகீழாகத் தேடினோம், மே 7 அன்று palembang.tribunnews.com இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையைக் கண்டறிந்தோம், அதில் பயன்படுத்தப்பட்ட படம் வைரலூன காணொளியின் காட்சிகளுடன் பொருந்துகிறதாக காணப்பட்டது.

மே 7 ஆம் தேதி palembang.tribunnews.com இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த விபத்து நடந்த இடம் இந்தோனேசியா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேசிய மொழியில் எழுதப்பட்ட இந்த அறிக்கையை நாங்கள் கூகுள் ட்ரான்ஸ்லேட்டின் உதவியுடன் மொழிபெயர்த்தோம். அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, இந்தோனேசியாவின் போஜோங் மாவட்டத்தில் சுற்றுலா பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் மே 7ஆம் தேதி நடந்துள்ளது. இந்த சம்பவம் மத்திய ஜாவா மாகாணத்தில் நடந்துள்ளது. அறிக்கை இந்தோனேசியாவுடன் தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்திய புல்லட்டின் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இந்தோனேசியாவுடன் தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்திய புல்லட்டின் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அந்த தேடலில், இந்தோனேசியாவில் நடந்த பேருந்து விபத்தின் காணொளி என்று குறிப்பிடப்பட்ட அதே காணொளியானது ‘tvOneNews’ என்ற யூடியூப் சேனலில் பதிவேட்டப்பட்டுள்ளது என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். இந்தோனேசியாவில் பேருந்து விபத்து என மற்றொரு யூடியூப் சேனலிலும்  கூட இந்த காணொளி பகிரப்பட்டுள்ளது. இந்த பேருந்து விபத்து தொடர்பான காணொளிக்கும் மேகாலயாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது எங்கள் விசாரணையில் தெளிவாகத் தெரிகிறது.

கூடுதல் உறுதிப்படுத்தலுக்காக, நாங்கள் இந்தோனேசிய உண்மைச் சரிபார்ப்பு நிறுவனமான CEK Facta.com-ஐத் தொடர்புகொண்டோம். உண்மை சரிபார்ப்பாளர் ஆதி சியாஃபித்ரா, “பஸ் விபத்தின் இந்த காணொளி சமீபத்தில் இந்தோனேசியாவில் நடந்த சம்பவத்தில் இருந்து எடுக்கப்பட்டது” என்று கூறினார்.

தவறான கூற்றுடன் வைரல் வீடியோவைப் பகிர்ந்த இந்த பயனரை முகநூலில் சுமார் 12 லட்சம் மக்கள் பின்தொடர்கின்றனர்.

முடிவுரை: இந்தோனேசியாவில் பேருந்து விபத்துக்குள்ளான காணொளி ஒன்று, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவைச் சேர்ந்தது என்ற தவறான கூற்றுடன் பகிரப்படுகிறது.

  • Claim Review : பேருந்து விபத்து பற்றிய காணொளி மேகாலயாவில் இருந்து எடுக்கப்பட்டது
  • Claimed By : பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் தாம்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later