உண்மை சரிபார்ப்பு: சிலைகளை உடைக்கும் நிகழ்ச்சி பாஹ்ரைனின் நடந்தது, கேரளாவில் அல்ல.

இரண்டு வருட பழைய பாஹ்ரைனில் இருந்து வந்த ஒரு காணொளி கேரளாவிலிருந்து வந்ததாக சமூக ஊடகத் தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் அந்தப் பெண் மீது பாஹ்ரைன் காவல்துறை சட்ட நடடிக்கை எடுத்து விட்டார்கள்.

உண்மை சரிபார்ப்பு: சிலைகளை உடைக்கும் நிகழ்ச்சி பாஹ்ரைனின் நடந்தது, கேரளாவில் அல்ல.

புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): ஒரு நிமிடம் பதினைந்து வினாடி நீளமுள்ள ஒரு காணொளி சமூக ஊடகங்களில் உலா வருகிறது. இந்தக் காணொளியில் புர்க்கா அணிந்த ஒரு பெண் லார்ட் கணேஷாவின் சிலைகளை ஒரு சூப்பர்மார்க்கெட்டில் உடைத்து நொறுக்கிறார். பயனர்கள் இந்த வைரல் காணொளி கேரளாவிலிருந்து வந்தது என்று க்ளைம் செய்கிறார்கள். இந்த வைரல் காணொளி கேரளாவிலிருந்து அல்ல, பாஹ்ரைனில் இருந்து வந்தது அன்று விஷ்வாஸ் நியூஸ் தன புலன் விசாரணையில் கண்டுபிடித்தது. இது ஆகஸ்ட் 2020-இல் நடந்தது, குற்றம் சாட்டப் பட்டவர் மீது காவல்துறை சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து விட்டது.

க்ளைம்:

ஃபேஸ்புக் பயனர் அபூர்வா ரஸ்தோகி (ஆங்கில மொழிபெயர்ப்பு) இந்தக் காணொளியை ஜூலை 19 அன்று பதிவிட்டு எழுதினார். கேரளாவிலிருந்து வந்த இந்தக் காணொளியை பாருங்கள் மேலும் உங்களால் முடிந்த வரை இதை சுற்றுக்கு அனுப்புங்கள். இன்று நீங்கள் அமைதியாக இருந்தீர்கள் என்றால், நமக்குத்தான் நஷ்டம்.. ஏனென்றால் 6 மாதங்களுக்குப் பிறகு இதைத் தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை…

இந்தப் பதிவின் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே க்ளிக் செய்வதன் மூலம் பார்க்கலாம்

புலன் விசாரணை:

சில முக்கிய வார்த்தைகளை வைத்து கூகுளில் நாங்கள் தேடினோம். இந்தக் க்ளைமுடன் தொடர்பு கொண்ட ஒரு அறிக்கையை நாங்கள் ஆஜ் தக்-இல் கண்டுபிடித்தோம். அது ஆகஸ்ட் 17, 2022 அன்று ஆஜ் தககினால் பதிப்பிக்கப் பட்டிருந்தது. அந்த வைரல் காணொளியின் சில கீஃபிரேம்களை இந்த அறிக்கையில் காணலாம்.

இந்த செய்தியின்படி, பாஹ்ரைனில் ஒரு சூப்பர் மார்க்கட்டில் ஒரு பெண் லார்ட் கணேஷாவின் உருவச் சிலைகளை நாசப்படுத்தினார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தலைநகர் காவல் ஒரு மதத்தையும் அதன் பாரம்பரியங்களையும் அவமதித்ததிற்காக அந்தப் பெண் மேல் நடவடிக்கை எடுத்தது.

ஆகஸ்ட் 16, 2020 அன்று இந்தியா டுடே-வும் இதே தகவலைக் கொண்ட செய்தியை அறிக்கையிட்டிருந்தது. அந்தச் செய்தியின்படி புர்க்கா அணிந்த ஒரு பெண் பாஹ்ரைனில் உள்ள ஒரு ஒரு சூப்பர் மார்க்கட்டில் லார்ட் கணேஷாவின் உருவச்சிலையை முதலில் உடைத்தார். பிறகு பணியாளர்களிடம் அராபிய மொழியில் சப்தமாக பேச ஆரம்பித்தார்.

கல்ஃப் நியூஸ்-உம் இந்த நிகழ்ச்சியை வெளியிட்டிருந்தது. ஒரு அறிக்கையின்படி, கடையில் ஹிந்து மத உருவச் சிலைகளை நாசப் படுத்தியதற்காக குற்றம் சாட்டப்பட்ட பெண் மீது காவல் நடடிக்கை எடுத்து விட்டது.

ஒரு மூத்த பாஹ்ரைன் அதிகாரி இந்த நிகழ்ச்சிக்கு எதிர் வினை ஆற்றும்போது இந்தச் செயலை ஒரு “வெறுப்புக் குற்றம்” என்று கண்டித்தார். இந்த விஷயத்தைப் பற்றி தகவலை ஆகஸ்ட் 16, 2020 அன்று பாஹ்ரைன் உள்துறை அமைச்சு ட்வீட் செய்தது. அதில் குறிப்பிடப்பட்டது, “ஜுஃப்பேர்-இல் உள்ள ஒரு கடையில் சேதம் விளைவித்ததற்காகவும், ஒரு மதப்பிரிவையும் அதன் சடங்குகளையும் அவமதித்ததற்காகவும், தலைநகர் காவல் 54 வயதுள்ள ஒரு பெண்ணின் மீது குற்ற வழக்கு தொடர்வதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது.

மேல் விவரங்களுக்காக, நாங்கள் கேரளா காவல்துறையின் துணை டைரக்டர் ஜெனரல் (சட்டம் மற்றும் ஒழுங்கு) -உடன் தொடர்பு கொண்டோம். இந்த வைரல் காணொளியை வாட்ஸ்அப்பில் அவரிடம் பகிர்ந்து கொண்டோம். “கேரளாவில் அது போன்ற எந்த வழக்கும் வரவில்லை. இந்த செய்தி பொய்.” என்று அவர் கூறினார்.

தவறான க்ளைமுடன் இந்தப் பழைய காணொளியை ஃபேஸ்புக் பயனர் ‘அபூர்வா ரஸ்தோகி’யின் தற்குறிப்பை நாங்கள் ஸ்கேன் செய்தோம். அந்தத் தற்குறிப்பின்படி, அவர் டெல்லியில் வசிக்கிறார். அவர் ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டுத் தத்துவத் தாக்கத்தில் உள்ளார்.

निष्कर्ष: இரண்டு வருட பழைய பாஹ்ரைனில் இருந்து வந்த ஒரு காணொளி கேரளாவிலிருந்து வந்ததாக சமூக ஊடகத் தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் அந்தப் பெண் மீது பாஹ்ரைன் காவல்துறை சட்ட நடடிக்கை எடுத்து விட்டார்கள்.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்