Fact Check: தமிழ்நாடு விநாயகர் சிலைகளைத் தடை செய்யவில்லை; வைரல் கூற்று தவறாக வழிநடத்துகிறது

விசாரணையில், விஷ்வாஸ் நியூஸ் இந்த கூற்றுகள் தவறாக வழிநடத்துவதாகக் கண்டறிந்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான வைரல் வீடியோ, கரூர் மாவட்ட ஆட்சியர் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (பிஓபி) சிலைகளுக்கு தடை விதித்ததைக் காட்டுகிறது. கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக பிஓபி  சிலைகள் விற்பனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை பின்னர் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 

Fact Check:  தமிழ்நாடு விநாயகர் சிலைகளைத் தடை செய்யவில்லை; வைரல் கூற்று தவறாக வழிநடத்துகிறது

புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்) : சமூக ஊடகங்களில் பரவி வரும் வைரல் வீடியோவில், பெண்கள் மற்றும் குழந்தைகள், காவல்துறை மற்றும் பிறரிடம் இந்தி அல்லாத மொழியில் கெஞ்சுவதைக் காட்டுகிறது. தமிழகத்தில் ஏழை கைவினைஞர்களால் விநாயகர் சிலைகள் செய்யப்பட்ட கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டு, விற்பனையை முடக்கியதான கூற்றுகளுடனும், தமிழக அரசு இந்துக்களுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

விசாரணையில், விஷ்வாஸ் நியூஸ் இந்த கூற்றுகள் தவறாக வழிநடத்துவதாகக் கண்டறிந்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான வைரல் வீடியோ, கரூர் மாவட்ட ஆட்சியர் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (பிஓபி) சிலைகளுக்கு தடை விதித்ததைக் காட்டுகிறது. கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக பிஓபி  சிலைகள் விற்பனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை பின்னர் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 

வைரலான பதிவு என்ன?

X பயனர் @DrEramElizabeth (ஆர்க்கைவ் இணைப்பு) ஜூலை 27, 2024 அன்று வீடியோவை போஸ்ட் செய்து, இந்தியில் பின்வருமாறு எழுதியுள்ளார், “தமிழ்நாட்டில் கடவுள் சிலைகளை உருவாக்கும் ஏழை மார்வாடிகளின் சேரி கிடங்கிற்கு சீல் வைக்கப்பட்டு, விற்க வேண்டாம் என்று அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இப்போது விநாயக சதுர்த்திக்கு ஆர்டர் செய்த சிலைகளை அவர்களால் வழங்க இயலாது. இந்து கலாச்சாரத்தை ஒழிக்க புதிய வழியை தமிழ்நாட்டின் ஐ.என்.டி.ஐ.ஏ. முதல்வர் அறிவித்துள்ளார்”

ஃபேஸ்புக் பயனர் தேவா நந்த் தேவ்ராஜ் ( ஆர்க்கைவ் இணைப்பு ) இதேபோன்ற கூற்றுடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

விசாரணை

வைரல் கூற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, விஷ்வாஸ் நியூஸ் வீடியோவை கவனமாக மீளாய்வு செய்து, அதில் பாலிமர் நியூஸின் லோகோ இருப்பதைக் கண்டறிந்தது. பாலிமர் நியூஸின் யூடியூப் சேனலை ஸ்கேன் செய்தபோது, செப்டம்பர் 17, 2023 அன்று பதிவேற்றிய அதே வீடியோ, “ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கெமிக்கல் விநாயகர் சிலை கூடத்திற்கு சீல், கடும் நிபந்தனைகளுடன் சீல் அகற்றம்” என்ற தலைப்புடன் பதிவேற்றப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் மதிப்பிலான விநாயகர் சிலைகளை ரசாயனப் பொருட்களால் செய்ததற்காக கூடத்திற்கு சீல் வைத்தபோது உத்தரபிரதேச மக்கள் கதறி அழுததாவும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் கடுமையான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டவுடன் சீல் அகற்றப்படும் என்றும் அதில் விளக்கம் எழுதப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15, 2023 அன்று, தமிழ்நாடு, கரூர் மாவட்ட ஆட்சியர் , @LegalLro என்ற பயனரின் இடுகைக்கு பதிலளிக்கும் போது, இந்த செய்தி முழுமையற்ற கூற்று மற்றும் திரிபுபடுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். அவர், “விநாயக சதுர்த்திக்கு செய்யப்படும் சிலைகள் முற்றிலும் மக்கும் பொருட்களால் செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு மாண்புமிகு உயர்நீதிமன்றங்கள், NGT (தேசிய பசுமை தீர்ப்பாயம்) மற்றும் CPCB (மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்) பலமுறை உத்தரவிட்டுள்ளது. POP போன்ற பொருட்களைப் பயன்படுத்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.” என்று எழுதியுள்ளார்.

மேலும் அவர், “இந்நிலையில், சிலர் பிஓபி விநாயகர் சிலைகளை உருவாக்குவதாக பாரம்பரிய குயவர்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 25 செப்டம்பர் 2023 அன்று, சிலைகள் அவற்றை உருவாக்கியவர்களிடம் பாதுகாப்பாக திருப்பித் தரப்படும்.” என்றும் எழுதியுள்ளார். நீர்நிலைகளை மாசுபடுத்தும் ரசாயனங்கள் கொண்டு சிலைகள் தயாரிப்பதை தடை செய்த சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் என்ஜிடியின் உத்தரவுகளின் நகலையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, விநாயக சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் பிஓபியால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து விநாயகர் சிலை கைவினைஞர்களின் மனுவை இந்தியத் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. பிஓபியை விட இயற்கையான களிமண்ணிலிருந்து சிலைகளை செய்யலாம் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.

தமிழகத்தைச் சேர்ந்த உள்ளூர் பத்திரிகையாளர் சுரேஷ் மூர்த்தி கூறுகையில், இந்த உத்தரவு ரசாயனப் பொருட்களால் செய்யப்பட்ட சிலைகள் குறித்தானது. பிஓபி கொண்டு சிலைகள் தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவை ஏற்படுத்தும் மாசு காரணமாக, பிஓபியால் செய்யப்பட்ட சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தவறான கூற்றுகளுடன் வீடியோவைப் பகிர்ந்த பயனரின் சுயவிவரத்தை ஸ்கேன் செய்தோம். பயனருக்கு 1690 பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

முடிவுரை: தமிழகத்தில் ரசாயன பொருட்களால் தயாரிக்கப்படும் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றமும், என்ஜிடியும் இத்தகைய சிலைகளுக்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில், கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிஓபி விநாயகர் சிலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வீடியோ வகுப்புவாத க்ளைம்களுடன் பகிரப்பட்டு வருகிறது.

Misleading
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்