X
X

உண்மை சரிபார்ப்பு: டென்மார்க் கோவிட் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது என்கிற வைரல் போஸ்ட் தவறானது.

டென்மார்க்கில் தடுப்பூசித் திட்டம் நிறுத்தப்பட்டதாகக் கூறும் வைரல் பதிவுகள் தவறானவை. திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதே தவிர முழுமையாக நிறுத்தப்படவில்லை.

நியூ டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): விஷ்வாஸ் நியூஸ், டென்மார்க் கோவிட்-19 தடுப்பூசியை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட்டதாக க்ளைம் செய்யும் பல போஸ்ட்களை சமூக ஊடகத்தில் கண்டது. டேனிஷ் மக்களுக்கான வேக்சின் கவறேஜுக்காக அந்நாடு தன்னுடைய தடுப்பு மருந்து திட்டத்தை இடைநிறுத்தி வைத்துள்ளது என்பதை விஷ்வாஸ் நியூஸ் தன்னுடைய புலனாய்வில் கண்டுபிடித்து.

க்ளைம்:

மெலிண்டா ரிச்சர்ட்ஸ் (Melinda Richards @goodfoodgal) என்பவரால் செய்யப்பட ஒரு போஸ்டை விஷ்வாஸ் நியூஸ் கண்டது. அதில் இவ்வாறு இருந்தது: டென்மார்க் தன்னுடைய கோவிட் வேக்சினேஷன் திட்டத்தை முற்றிலும் நிறுத்திவிட்டது.

இந்த போஸ்ட் மற்றும் இதன் ஆர்சிவ்வை இங்கு காணவும். இதே க்ளைமை பிற ட்விட்டர் பயனர்களும் பகிர்ந்துள்ளார்கள்.

புலனாய்வு:

விஷ்வாஸ் நியூஸ் கீ வோர்ட் தேடல் மூலம் தன்னுடைய புலனாய்வை துவக்கியது.

பின்வரும் தலைப்பில் சி.என்.பி.சி. யிலிருந்து வரும் ஒரு செய்தி தகவலை நாம் கண்டோம்: கோவிட் வேக்சினேஷன் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திய முதல் நாடாக டென்மார்க் ஆகியுள்ளது.

அதில் டென்மார்க் இந்த திட்டத்தை தற்காலிகமாகத் தான் நிறுத்தியுள்ளது என்பதும் முற்றிலும் நிறுத்தவில்லை என்பதும் தெளிவாக உள்ளது.

அந்த கட்டுரையில் மேலும் இவ்வாறுள்ளது: எவ்வாறாயினும், அது தனது தடுப்பூசி திட்டத்தை முற்றிலுமாக அகற்றுவதற்குப் பதிலாக, இலையுதிர்காலத்தில் மீண்டும் கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை போட வேண்டிய அவசியம் இருக்கும் என்று டேனிஷ் சுகாதார மற்றும் மருந்துகள் ஆணையம் கூறியது.

இங்கு படிக்கவும்.

மேலும் ஆராய்ந்ததில், விஸ்வாஸ் நியூஸ் தடுப்பூசி திட்டத்தின் இணைப்பைக் கண்டறிந்தது. அந்த இணையதளத்தில் இவ்வாறு இருந்தது: டென்மார்க்கில் பொது கோவிட்-தடுப்பூசி திட்டம் தற்போதைக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவது இன்னும் சாத்தியமானதாகவே உள்ளது.

இங்கு படிக்கவும்.

புலனாய்வின் கடைசி கட்டத்தில் விஸ்வாஸ் நியூஸ் ட்விட்டரில் டேனிஷ் பத்திரிகையாளர்களை அணுகியது, அவர் தடுப்பூசி திட்டத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் எங்களை அனுப்பினார்.

தடுப்பூசி திட்டம் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், நிறுத்தப்படவில்லை என்றும் அதிகாரப்பூர்வ ஹேன்டிலிலிருந்து விஸ்வாஸ் நியூஸுக்கு பதில் கிடைத்தது.

புலனாய்வின் கடைசி கட்டத்தில், விஸ்வாஸ் நியூஸ் ட்விட்டர் பயனரான மெலிண்டா ரிச்சர்ட்ஸின் சமூகப் பின்னணியைச் சரிபார்த்தது. ட்விட்டரில் அவருக்கு 31.4K பின்தொடர்பவர்கள் உள்ளனர், அவர் 2015 -ல் அதில் இணைந்திருக்கிறார்.

निष्कर्ष: டென்மார்க்கில் தடுப்பூசித் திட்டம் நிறுத்தப்பட்டதாகக் கூறும் வைரல் பதிவுகள் தவறானவை. திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதே தவிர முழுமையாக நிறுத்தப்படவில்லை.

  • Claim Review :  டென்மார்க் தனது முழு COViD தடுப்பூசி திட்டத்தையும் நிறுத்திவிட்டது.
  • Claimed By : மெலிண்டா ரிச்சர்ட்ஸ்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later