உண்மைச் சரிபார்ப்பு: சமீபத்தில் பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட உணவு பற்றாகுறைக்கும், புல் சாப்பிடும் குழந்தை பற்றிய வீடியோவுக்கும் எந்த தொடர்பும் இல்லை

விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்று கண்டறிந்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் உண்டான உணவு பற்றாக்குறைக்கும் வைரலான இந்தக் காணொளிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த காணொளி பிப்ரவரி 2022 முதல் இணையத்தில் உள்ளது

உண்மைச் சரிபார்ப்பு: சமீபத்தில் பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட உணவு பற்றாகுறைக்கும், புல் சாப்பிடும் குழந்தை பற்றிய வீடியோவுக்கும் எந்த தொடர்பும் இல்லை

புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). ஒரு குழந்தை புல் சாப்பிடுவதாக காணப்படுகிற ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையான உணவு பற்றாக்குறையை உருவாக்கிய பாகிஸ்தானில் இருந்து இந்த காணொளி வந்ததாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்று கண்டறிந்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் உண்டான உணவு பற்றாக்குறைக்கும் வைரலான இந்தக் காணொளிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த காணொளி பிப்ரவரி 2022 முதல் இணையத்தில் உள்ளது.

வைரலான பதிவில் என்ன இருக்கிறது?

இக்பால் அஃப்ரிடி என்ற பயனர் இந்த வீடியோவை #FloodsInPakistan2022 என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பதிவிட்டுள்ளார்.

இடுகையின் காப்பக இணைப்பை இங்கே பார்க்கவும்..

விசாரணை:

இந்த இடுகையின் விசாரணையைத் தொடங்க, Yandex Reverse Image இல் வைரலான வீடியோவின் ஸ்கிரீன்கிராப்களை நாங்கள் தேடினோம். இந்த காணொளி சிரியாவைச் சேர்ந்தது என்று கூறி டெல்லி எக்ஸ்பிரெஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றபட்டுள்ளதை நாங்கள் கண்டோம். இந்த காணொளி மார்ச் 2022 இல் பதிவேற்றபட்டுள்ளது. அதனுடன் “சிரிய சிறுவன் ரொட்டிக்கு பதிலாக புல் சாப்பிடுகிறான் # உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் கடவுள் கருணை காட்ட வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது.

மார்ச் 2022 இல் தாரிக் ரஃபி என்ற ட்விட்டர் பக்கத்தில் இந்த காணொளியும் சிரியாவிலிருந்து வந்த அதே விளக்கத்துடன் இருப்பதையும் நாங்கள் கண்டோம்.

இங்கிருந்து துப்புகளை எடுத்துக்கொண்டு, இந்த காணொளியை மீண்டும் யாண்டெக்ஸ் ரிவர்ஸ் இமேஜில் ‘சிரியா’ என்ற முக்கிய சொல்லுடன் தேடினோம். இந்த காணொளியை 25 பிப்ரவரி 2022 அன்று அதிஃப் மக்பூல் என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம். அதனுடன் “சிரியாவில் உணவுப் பற்றாக்குறையால் புல் சாப்பிடும் குழந்தை: மனிதநேயம் எங்கே? – அதிஃப் மக்பூல்” என்று எழுதப்பட்டிருந்தது.

நயாப் نایاب மற்றும் பிபி-ஹவா என்ற பெயர்கள் உள்ள யூடியூப் சேனல்களில் பிப்ரவரி 2022 இல் பதிவேற்றப்பட்டிருப்பதுடன் இந்த காணொளி சிரியாவைச் சேர்ந்தது என்ற உரிமை கோரலையும் நாங்கள் கண்டறிந்தோம்.

இருப்பினும், சில இடங்களில், உக்ரைனில் இருந்து வந்ததாகக் கூறி பதிவேற்றப்பட்ட காணொளியைக் நாங்கள் கண்டோம்.

இது தொடர்பாக பாகிஸ்தானின் 24 நியூஸ் எச்டி செய்தி சேனலில் பணிபுரியும் பத்திரிக்கையாளர் முகமது கம்ரானை நாங்கள் தொடர்பு கொண்டோம். “வெள்ளத்தால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையில் பாகிஸ்தான் தற்போது சிக்கித் தவிக்கிறது என்பது உண்மைதான், ஆனால் வைரலான வீடியோ பாகிஸ்தானிலுள்ளது அல்ல. இது நீண்ட காலமாக இணையத்தில் உள்ளது. இதற்கும் பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று அவர் கூறினார்.

கடந்த சில நாட்களாகவே கனமழை மற்றும் வெள்ளத்தின் நெருக்கடியினால் பாகிஸ்தான் போராடி வருகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறை குறித்து பல செய்திகள் வெளியாகி வருகின்றன thehindu.com இன் செப்டம்பர் 12 செய்தியின்படி, “வறுமையான நாட்டின் விவசாயப் பகுதியை நீருக்கடியில் விட்டுச் சென்ற கொடிய வெள்ளத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் உணவுப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கிறது. உணவு, கூடாரங்கள் மற்றும் பிற பொருட்களை வழங்குவதற்கான முயற்சிகளை திங்களன்று அதிகாரிகள் அதிகரித்ததாக, பிரதமர் துருக்கிய ஜனாதிபதியிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.”

theprint.in-இன் செய்தியின்படி, “பாகிஸ்தானில் விவசாய நிலங்களில் பாரிய வெள்ளம், பயிர்கள் அழிவு மற்றும் கால்நடைகளின் இழப்பு ஆகியவை நாட்டின் உணவுப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன, குறிப்பாக குளிர்காலம் நெருங்கி வருவதால்……. பாக்கிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ-சர்தாரி, இந்த வார தொடக்கத்தில் CGTN உடனான ஒரு நேர்காணலில், “நாட்டின் பயிர்களில் 80 முதல் 90 சதவிகிதம் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன” என்று கூறி இன்னும் ஒரு தெளிவான பார்வையை வழங்கினார்.

ஒரு குழந்தை புல் சாப்பிடும் வீடியோ எங்கிருந்து எப்போது வந்தது என்பதை விஸ்வாஸ் நியூஸ் சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை, ஆனால் பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் உணவு பற்றாக்குறையும் இந்த காணொளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது. இந்த காணொளி பிப்ரவரி 2022 முதல் இணையத்தில் உள்ளது..

இந்த வைரலான காணொளியை இக்பால் அஃப்ரிடி என்ற பயனர் தவறான கூற்றுடன் பகிர்ந்துள்ளார். சுயவிவரத்தின்படி, இந்த பயனர் பாகிஸ்தானின் பெஷாவரில் வசிப்பவர்.

निष्कर्ष: விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்று கண்டறிந்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் உண்டான உணவு பற்றாக்குறைக்கும் வைரலான இந்தக் காணொளிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த காணொளி பிப்ரவரி 2022 முதல் இணையத்தில் உள்ளது

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்