Fact Check: ஈபிள் டவரில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதைக் காட்டும் வைரல் புகைப்படம் ஒரு ஏஐ உருவாக்கம்

Fact Check: ஈபிள் டவரில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதைக் காட்டும் வைரல் புகைப்படம் ஒரு ஏஐ உருவாக்கம்

புதுடெல்லி/விஷ்வாஸ் நியூஸ்: பிரான்சில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு மத்தியில், ஈபிள் டவர் முன் வைக்கோல் மூட்டைகள் மற்றும் டிராக்டர்களை சித்தரிக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. பிரான்சில் விவசாயிகள் போராட்டத்தின் தற்போதைய சூழ்நிலையை துல்லியமாக சித்தரிப்பதாக நம்பும் பல பயனர்கள் இந்தப் படத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், விஷ்வாஸ் நியூஸ், தனது விசாரணையில், இந்த கூற்று தவறானது என்பதைக் கண்டறிந்துள்ளது. வைரல் படம் உண்மையானது அல்ல, மாறாக செயற்கையாக, ஏ.ஐ.-ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு செயற்கையான உருவாக்கமாக இருந்தபோதிலும், பயனர்கள் இது உண்மையான நிகழ்வுகளை சித்தரிக்கிறது என்ற தவறான நம்பிக்கையில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

வைரலாவது என்ன?

சமூக ஊடக பயனர் (ஆர்க்கைவ் லின்க்) ‘தாகூர் சிங் சந்து சாப்’ வைரலான படத்தைப் பகிர்ந்து பஞ்சாபியில் எழுதியுள்ளார். அதன் மொழிபெயர்ப்பில் கூறப்பட்டுள்ளது: “பஞ்சாபின் ஜாட் குலம் தனது ஜாட் குலம் உலகில் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருக்கிறது. இல்லையேல் அனைத்து மக்களும் முதலில் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்திருக்க மாட்டார்கள்.”

பஞ்சாபில் உள்ள ஜாட் சமூகத்தினர் தங்கள் உலகளாவிய சகாக்களுக்கு போராட்ட முறைகளை கற்றுக் கொடுத்துள்ளனர் என்று தலைப்பு தெரிவிக்கிறது. அரசாங்கத்திற்கு எதிரான இந்த ஒற்றுமை இதற்கு முன்னர் சாத்தியமில்லை என்பது இதன் உட்பொருள். பாரிஸில் (பிரான்ஸ்) ஜாட் சமூகத்தினர் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதாக படம் பொய்யாகச் சித்தரிக்கிறது. பல பயனர்களும் இந்தப் படத்தை ஒரே மாதிரியான கூற்றுகளுடன் பகிர்ந்துள்ளனர்.

விஷ்வாஸ் நியூஸ் விசாரணை:

வைரல் படத்தின் தோற்றம் பற்றி அறிய கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலைப் பயன்படுத்தினோம். எங்கள் விசாரணையில், பல இடங்களில் வைரலான படம் எங்களுக்குக் கிடைத்தது. பிப்ரவரி 4, 2024 அன்று, சமூக ஊடகங்களில் பரவும் படம் ஏ.ஐ. கருவியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதா இல்லையா என்பதை தெளிவுபடுத்தும் ஒரு செய்தியை  ஃபோர்ப்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது .

மேலும், எங்கள் தேடலின் போது, பிப்ரவரி 3, 2024 அன்று ரஷியன் மார்க்கெட் என்ற X (எக்ஸ்) (முன்னர் ட்விட்டர்) பயனரால் பகிரப்பட்ட ஒரு வைரல் படத்தைப் பார்த்தோம், இதுவும் ஏ.ஐ. உருவாக்கம் என்பது அடையாளம் காணப்பட்டது. ஏஐ-உருவாக்கப் படங்களைப் பகிர்வதற்காக அறியப்பட்ட தளமான ifonly.ai க்கு புகைப்படம் கிரெடிட் செய்யப்பட்டுள்ளது.

ifonly.ai இன் இன்ஸ்டாகிராம் பற்றிய எங்கள் ஆய்வு, தளத்தால் பகிரப்பட்ட பல AI-உருவாக்கப் படங்களை வெளிக்கொணர்ந்தது. ifonly.ai (ஆர்க்கைவ் லின்க்) ஐ இன்னும் ஆழமாக ஆராய்ச்சி செய்ததில், அதன் கலை இயக்குனர் வின்சென்ட் ஸ்மாட்ஜா என்பதைக் கண்டுபிடித்தோம். வின்சென்ட், தனது (லிங்க்டின்) LinkedIn இடுகையில் ஆதாரமாக, கேள்விக்குரிய படம் AI கருவியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார், பகிரும்போது அது ஏஐ உருவாக்கம் என்பதைக் குறிப்பிடுமாறு பயனர்களை வலியுறுத்தியிருக்கிறார்.

எங்கள் விசாரணையின் அடுத்த கட்டமாக, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படங்களைச் சரிபார்க்க ஒரு கருவியைப் பயன்படுத்தினோம். Isitai இன் படி, கேள்விக்குரிய படம் ஏஐ-உருவாக்கம் என்பதற்கான சாத்தியம் தோராயமாக 66.22 சதவீதம் ஆகும்.

ஏஐ நிபுணர் அமர் சின்ஹாவையும் நாங்கள் தொடர்புகொண்டோம், அவர் படம் உண்மையில் ஏஐ-உருவாக்கம் என்பதை உறுதிப்படுத்தினார். ஏஐ –உருவாக்கப் படங்கள் உண்மையானதாகத் தோன்றினாலும், அவை பெரும்பாலும் அவற்றின் செயற்கை தோற்றத்தைக் காட்டிக் கொடுத்து விடக்கூடிய குறைபாடுகளைக் கொண்டிருக்கும். இறுதியாக, இடுகையைப் பகிர்ந்த பயனரின் சுயவிவரத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். பயனருக்கு 4,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்கள் உள்ளனர் என்பதோடு அவரது சுயவிவர விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர் துபாயில் வசிப்பவர்.

முடிவு: ஈபிள் கோபுரத்திற்கு அருகில் டிராக்டர்கள் மற்றும் வைக்கோல்களுடன் கூடிய ஆர்ப்பாட்டத்தை சித்தரிக்கும் வைரல் படம் உண்மையானது அல்ல; இது செயற்கை நுண்ணறிவை (ஏ.ஐ.) பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்