X
X

உண்மை சரிபார்ப்பு: நாடு முழுவதும் 46 நாட்கள் ஊரடங்கினை அமல்படுத்தக் கோரி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அரசிற்கு பரிந்துரை செய்யவில்லை

ஊரடங்கு நீட்டிப்பது குறித்த அந்தக் கடிதம் தவறானது. செப்டம்பர் 25 முதல் 46 நாட்களுக்கு தேசிய அளவிலான ஊரடங்கினை மீண்டும் விதிக்கக் கோரி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை.

புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்) கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் செப்டம்பர் 25 முதல் நாடு முழுவதும் 46 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கக் கோரி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) மத்திய அரசினை வலியுறுத்துவதாக சமூக வலைதளங்களில் ஒரு கடிதம் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து விஸ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்று தெரியவந்தது. மேலும் செப்டம்பர் 25 முதல் தேசிய அளவிலான ஊரடங்கினைச் செயல்படுத்த மத்திய அரசு இதுபோன்ற எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

கூற்று

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டதாக கூறப்படும் இந்தக் கடிதம், செப்டம்பர் 25 முதல் 46 நாட்கள் நாடு முழுவதும் தளர்வில்லா ஊரடங்கினை மீண்டும் விதிக்குமாறு உள்துறை அமைச்சகத்தையும், பிரதமர் அலுவலகத்தையும் அறிவுறுத்துகிறது. அந்தக் கடிதத்தை கீழே காணலாம்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்த கோருவதாக வைரலாக பகிரப்படும் கடிதம்

விசாரணை

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடமிருந்து இந்தக் கடிதம் வந்ததாகக் கூறப்பட்டதால், அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது குறித்து தேடினோம். அவ்வாறு தேடியதில் அந்த இணையதளத்தின் ஆலோசனை பிரிவில், மே 4 க்குப் பிறகு இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கினை நீட்டிப்பதற்கான வழிகாட்டுதல்கள் கொண்ட உத்தரவின் நகல் மே 1, 2020 தேதியிடப்பட்டு இருப்பதை நம்மால் காண முடிந்தது. அதனின் சொற்கள் சிலவை மாற்றம் செய்யப்பட்டே இந்தப் போலி கடிதம் அச்சடிக்கப்பட்டிருப்பதை இதன் மூலம் நம்மால் உறுதி செய்ய முடிந்தது. இருப்பினும், ஊரடங்கினை நீட்டிப்பது குறித்த எந்த செய்திக்குறிப்பையும் அந்த இணையதளத்தில் நம்மால் காண இயலவில்லை.

இது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இயக்குநர் (PR & AG) பூபிந்தர் சிங்கை தொடர்பு கொண்டு பேசிய பொழுது, அந்தக் கடிதம் அவர்களால் எழுதப்படவில்லை என்பதையும், அவர்கள் தரப்பிலிருந்து ஊரடங்கு விதிக்கப்படுவது குறித்தோ, நீட்டிப்பது குறித்தோ அரசாங்கத்திற்கு எந்த ஆலோசனையும் வழங்கப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும் இணையத்தில் தேடியதில் இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு குறித்து எந்த செய்தியையும் எங்களால் கண்டறிய இயலவில்லை. இது தவிர மூன்று வாரங்களுக்கு மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கினை கடைபிடிக்க இஸ்ரேலிய அரசாங்கம் முடிவு செய்திருப்பது குறித்த அறிக்கைகள் மட்டுமே எங்களுக்குக் கிடைத்தன.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட செய்தி

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றினைத் தடுப்பதற்கும், அதனால் ஏற்படும் இறப்புகளைக் குறைப்பதற்கும் செப்டம்பர் 25, 2020 நள்ளிரவு முதல் அடுத்த 46 நாட்களுக்கு கடுமையான நாடு தழுவிய ஊரடங்கு தேவை என்று அந்தக் கடிதம் கூறுகிறது.
சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நோய்த்தொற்றில் குணமடைந்தோர் விகிதம் 78.27 சதவீதமாக அதிகரித்துள்ளது. மொத்த நோயாளிகளில் அறுபது சதவீதம் பேர் ஐந்து மாநிலங்களில் மட்டுமே உள்ளனர் என்ற போதிலும் அந்த மாநிலங்களிலும் குணமடைந்தோர் விகிதம் 60 சதவீதமாக உள்ளது.

கோவிட் -19 இந்தியா டிராக்கரின் கூற்றுப்படி, (செப்டம்பர் 15, காலை 8 மணி வரை) இந்தியாவில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 49 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இதுவரை 80,776 பேர் இறந்துள்ளனர்.

https://twitter.com/COVIDNewsByMIB/status/1305742370877530113

निष्कर्ष: ஊரடங்கு நீட்டிப்பது குறித்த அந்தக் கடிதம் தவறானது. செப்டம்பர் 25 முதல் 46 நாட்களுக்கு தேசிய அளவிலான ஊரடங்கினை மீண்டும் விதிக்கக் கோரி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை.

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later