X
X

மறுமலர்ச்சி திமுக தலைவர் வைகோ தனது மைத்துனர் மகனின் மறைவுக்கு அழுதார்; இந்த வைரல் வீடியோ கூற்று தவறானது

முடிவுரை பெரியார் சிலையை இழிவுபடுத்தியதற்காக மறுமலர்ச்சி திமுக தலைவர் வைகோ கதறி அழுவததாக கூறும் வீடியோ தவறானது. அது அவரது மைத்துனர் மகனின் மறைவுக்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பின் பழைய வீடியோ.

மறுமலர்ச்சி திமுக தலைவர் வைகோ, பெரியார் சிலை இழிவுபடுத்தியதில் வருத்தமடைந்து கதறி அழுவதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ கூறுகிறது. 5,000 பார்வையாளர்களைக் கொண்ட இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாக உள்ளது. விஸ்வாஸ் செய்தி விசாரணையில் கூற்று பொய் என தெரியவந்துள்ளது. அந்த வீடியோ, ஆகஸ்ட் 2018ல், அவரது மைத்துனர் மகன் மறைவுக்கு மனமுடைந்து பத்திரிகையாளர் சந்திப்பில் அழும் வீடியோ என கண்டறிந்தோம்.

கூற்று

மறுமலர்ச்சி திமுக தலைவர் வைகோ ஒரு வீடியோவில் அழுவதைக் காணலாம். “பெரியார் சிலை அவமதிப்பை கண்டு கண்ணீர் விட்டு அழுதார் வைகோ.. கடவுள் மறுப்பு கொள்கை தோற்றுப்போனது என கண்கலங்கினார்,” என சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ கூறுகிறது. வீடியோவை இங்கே அணுகலாம்.

விசாரணை

நாங்கள் இணையத்தில் தேடியபோது, ​​சிலை அவமதிப்பு செயலைக் கண்டிக்கும் வைகோவின் செய்தி கட்டுரைகளை மட்டுமே காண முடிந்தது.

தி இந்துவின் செய்தி, “மறுமலர்ச்சி திமுக தலைவர் வைகோ, கோயம்புத்தூரில் உள்ள சுந்தரபுரத்தில், பெரியார் சிலையை வண்ணப்பூச்சு ஊற்றி அவமதித்த சில குற்றவாளிகளின் செயலை கடுமையாக கண்டித்தார்,” எனக் கூறுகிறது.

குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வைகோ கோரினார்.

திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தைப் பூசி சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்துள்ளன என்கிற செய்தி கேட்டு துடிதுடித்துப்போனேன். நேற்று நள்ளிரவில், திருட்டுத்தனமாக சதிகாரர்கள் கொடும் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த அநியாயச் செயலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று மதிமுக தலைவர் வைகோ வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்ததாக ஒன்இந்தியா செய்தி கூறுகிறது.

அவுட்லுக்கில் ஒரு கட்டுரை, “தமிழ்நாட்டில் பெரியாரின் சிலைகளை தொடர்ந்து குறிவைத்ததை எதிர்த்து வைகோ கண்டனம் தெரிவித்தார்,” என்கிறது.

இருப்பினும், அவர் ஊடகங்கள் முன் அழுததாக எந்த செய்தியும் இல்லை.

வீடியோவில் உள்ளவர்கள் எவரும் முகக்கவசம் அணியவில்லை என்பதையும் நாம் காணலாம்.

விஸ்வாஸ் செய்தி, வைகோவின் செயலாளர் P அருணகிரியை தொடர்புகொண்டபோது, அந்த வீடியோ பழையது என்றும், சமீபத்திய நிகழ்வு எதுவுமில்லை என்று உறுதிப்படுத்தினார். “வைகோ அவர்கள் சமீபத்தில் எந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் பங்கெடுக்கவில்லை. அந்த வீடியோ 2018ல் மதுரையில் நிகழ்ந்தது,” என்று அருணகிரி கூறினார்.

மதுரையில் வைகோவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு வீடியோவை நாங்கள் தேடியபோது, ​​ஆகஸ்ட் 2018 இல் வெளியிடப்பட்ட வீடியோவை காண முடிந்தது.

வைகோ தனது மைத்துனர் மகன் சரவண சுரேஷின் மறைவுக்கு வருத்தப்பட்டு அழுததைக் காணலாம்.

निष्कर्ष: முடிவுரை பெரியார் சிலையை இழிவுபடுத்தியதற்காக மறுமலர்ச்சி திமுக தலைவர் வைகோ கதறி அழுவததாக கூறும் வீடியோ தவறானது. அது அவரது மைத்துனர் மகனின் மறைவுக்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பின் பழைய வீடியோ.

  • Claim Review : மறுமலர்ச்சி திமுக தலைவர் வைகோ, பெரியார் சிலை இழிவுபடுத்தியதில் வருத்தமடைந்து அழுதார்
  • Claimed By : Tamilan Raghuram Maran
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later