உண்மை சரிபார்ப்பு: பிரதமர் மோடியுடன் இந்த புகைப்படத்தில் உள்ள பெண் அதானியின் மனைவி அல்ல

இந்த வைரல் பதிவு தவறானது. பிரதமர் மோடியுடன் இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் அதானியின் மனைவி அல்ல. அவர் புதுதில்லியில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி தீபிகா மண்டல் என்பதே உண்மை.

உண்மை சரிபார்ப்பு: பிரதமர் மோடியுடன் இந்த புகைப்படத்தில் உள்ள பெண் அதானியின் மனைவி அல்ல

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). தொழிலதிபர் கௌதம் அதானி பற்றிய பல வதந்திகளுக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி, ஒரு பெண்ணை தன் இருகரம் கூப்பி வணங்கும் ஒரு வைரல் புகைப்படம், அவர் அதானியின் மனைவி என்ற கூற்றுடன் பகிரப்பட்டுள்ளது.

இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்த வைரல் கூற்று தவறானது என்பதும், பிரதமர் மோடியுடன் இந்த புகைப்படத்தில் உள்ள பெண் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் தீபிகா மண்டல் என்பதும் நமக்குத் தெரியவந்துள்ளது.

கூற்று

பேஸ்புக் பயனர் பிரதீப் கசானி, டிசம்பர் 17 அன்று, பிரதமர் மோடி ஒரு பெண்ணை வாழ்த்தும் புகைப்படத்தை பதிவேற்றி, “அதானியின் மனைவி முஹத்ரமா ப்ரீத்தி…” என்று எழுதியுள்ளார். இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

இது குறித்து விசாரிக்க, நாங்கள் முதலில் கூகுள் பின்னோக்கிய படத்தேடல் கருவியைப் பயன்படுத்தி, இந்த வைரல் புகைப்படத்தைத் தேடியதில், இதன் உண்மையான படத்தை விடிவி குஜராத்தின் செய்தி இணையதளத்தில் கண்டறிந்தோம். பிரதமர் மோடியுடன் இந்த புகைப்படத்தில் உள்ள பெண் தீபிகா மண்டல் என்பதையும், 2015 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வின்போது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதையும் அக்கட்டுரை நமக்குத் தெளிவுபடுத்தியது.

தீபிகா மண்டல் மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படம் குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், புதுடில்லியில் உள்ள திவ்யா ஜோதி கலாச்சார அமைப்பு மற்றும் நலச்சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியாக மண்டலை அடையாளம் காட்டும் ஒன்இந்தியாவின் கட்டுரை ஒன்று 9 ஏப்ரல் 2018 அன்று வெளியிடப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்.

இந்த கூற்றினை சரிபார்க்க நாங்கள் தீபிகா மண்டலை தொடர்பு கொண்டோம். இந்த தவறான கூற்றுக்களை மறுத்த அவரது கணவர் சமர் மண்டல், இந்த புகைப்படத்தில் உள்ள பெண் அவரது மனைவி தீபிகா தான் என்று நமக்குத் தெளிவுபடுத்தினார். மேலும் தொடர்ந்த அவர், “இது மிகவும் பழைய மற்றும் பிரபலமான புகைப்படம். இது தவறான கூற்றுக்களுடன் வைரலாகி உள்ளது,” என்று கூறினார்.

இந்த இடுகையை பகிர்ந்த பல பயனர்களுள் ஒருவரான பேஸ்புக் பயனர் பிரதீப் கசானியின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் முந்தைய காலங்களில் கூட இதுபோன்ற நிறைய வைரல் பதிவுகளை பகிர்ந்துள்ளார் என்பது நமக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. பிரதமர் மோடியுடன் இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் அதானியின் மனைவி அல்ல. அவர் புதுதில்லியில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி தீபிகா மண்டல் என்பதே உண்மை.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்