உண்மை சரிபார்ப்பு: கொரோனா வைரஸ் குறித்த இந்தபழைய காணொலி உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பெயரில் தவறாகப் பகிரப்படுகிறது

புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) ஆகியவை கொரோனா வைரஸ் பரவல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காணொலி ஒன்று கூறுகிறது. கொரோனா வைரஸின் மூன்றாம் கட்ட பரவல் இந்தியாவில் துவங்கப்போவதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் எச்சரிக்கின்றன என்றும், இதனைக் கட்டுப்படுத்த இந்தியா தயாராகவிட்டால், இந்தியாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மார்ச் மாதத்திற்குள் 50,000த்தை எட்டக்கூடும் என்றும் அது கூறுகிறது. இந்த காணொலி நியூஸ் 24 ஆன்லைனின் சின்னத்தைக் கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்த ​​வைரல் காணொலி தவறானது என்று தெரியவந்துள்ளது. நியூஸ் 24 ஆன்லைனின் தவறான சின்னத்தைக் கொண்டுள்ள இந்த காணொலி, 2020 பிப்ரவரி முதல் புழக்கத்தில் உள்ளது. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2 டிசம்பர் நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,28,644 ஆகவும் மற்றும் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கை 1,38,122 ஆகவும் உள்ளது. உலக சுகாதார அமைப்பின்படி, 28 மார்ச் வரை, வைரல் காணொலியின் கணிப்புகளிலிருந்து, இந்தியாவின் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 909 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டும், 19 நபர்கள் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தும் உள்ளனர்.

2020 மார்ச் மாதத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸின் மூன்றாம் கட்ட பரவல் தொடங்கும் என்றும், 2020 மார்ச் மாதத்திற்குள் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை 50,000 எட்டும் என்றும், உலக சுகாதார அமைப்போ அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமோ தெரிவிக்கவில்லை என்பதே உண்மையாகும்.

நாங்கள் எங்கள் வாட்ஸ்அப் சாட்பாட் (+919599299372) வழியே உண்மை சரிபார்ப்பிற்காக 1 டிசம்பர் அன்று இந்த காணொலியைப் பெற்றோம்.

கூற்று

உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) ஆகியவை கொரேனா வைரஸ் பரவல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக எங்கள் வாட்ஸ்அப் சாட்பாட்டின் வழியே எங்களை வந்தடைந்த காணொலி கூறுகிறது. கொரோனா வைரஸின் மூன்றாம் கட்ட பரவல் இந்தியாவில் தொடங்க இருப்பதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் எச்சரிக்கின்றன என்றும், அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்தமால் இருந்தால், இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்படும் மொத்த இறப்பு எண்ணிக்கை மார்ச் மாதத்திற்குள் 50,000த்தை எட்டக்கூடும் என்றும் அது கூறுகிறது. மேலும் இந்த காணொலியில் நியூஸ் 24 ஆன்லைனின் சின்னம் இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

விசாரணை

இது குறித்த விசாரணையில், 2020 டிசம்பரில் வாட்ஸ்அப் சாட்பாட்டின் வழியாக எங்களுக்குக் கிடைத்த இந்த காணொலி, 2020 பிப்ரவரி முதலே பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவி வருவது எங்களுக்கு தெரியவந்தது.

பிப்ரவரி 2020 இல், உலக சுகாதார அமைப்பு அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், இந்த வைரல் இடுகையில் கூறப்பட்டுள்ளபடி, ஏதேனும் அறிக்கையை வெளியிட்டுள்ளனவா என்பதை நாங்கள் ஆராய்ந்தோம்.

இது பற்றிய தேடலில், லைவ்மின்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையை நாங்கள் கண்டறிந்தோம். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சமீபத்தில் இந்தியாவில் சமூக பரவல் நடக்க வாய்ப்புள்ளது என்று வெளியிட்டுள்ளது. ஆனால், இதன்மூலம் ஏற்படும் கொரோனா தொற்றினை கண்டறிய இருபது நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகலாம்.

இது தவிர, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மூன்றாம் கட்டத்திற்குள் நுழைவதால், 2020 மார்ச் மாதத்தில் 50,000 பேர் இறந்துவிடுவார்கள் என்று எங்கும் கூறப்படவில்லை.

மேலும், வைரல் இடுகையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உலக சுகாதார அமைப்பால் வெளியிடப்பட்ட எந்த அறிக்கையையும் எங்களால் காண முடியவில்லை.

இந்த வைரல் பதிவு குறித்து விசாரிக்க WHO SEARO இன் சுகாதார அவசரநிலைகளின் தொழில்நுட்ப அதிகாரியிடம் நாங்கள் பேசினோம். நம்மிடத்தில் பேசிய அவர், “இந்த காணொலி நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ளது. உலக சுகாதார அமைப்பு அத்தகைய அறிக்கையை பிப்ரவரி அல்லது மார்ச் 2020 இல் வெளியிடவில்லை,” என்று கூறினார்.

உலக சுகாதார அமைப்பால் வெளியிடப்பட்ட தரவை நாங்கள் மேலும் ஆராய்ந்தோம். இந்த தரவுகளின்படி, 28 மார்ச் நிலவரப்படி, இந்தியாவின் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 909 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டும், மேலும் 19 நபர்கள் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தும் உள்ளனர்.

இந்த வைரஸ் இடுகையில் கூறப்பட்டுள்ளபடி, 2020 மார்ச் மாதத்தில் இந்தியாவில் 50,000 இறப்புகள் இல்லை.

மேலும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2 டிசம்பர் ஆம் தேதியின் நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,28,644 ஆகவும் மற்றும் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கை 1,38,122 ஆகவும் உள்ளது.

இந்த வைரல் காணொலியையும், அதில் ஒலிக்கும் பிண்ணனி குரலையும் கவனிக்கையில், ​​அது தவறானது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிந்தது. மேலும் இந்த காணொலியின் தரத்தில் பல்வேறு குறைபாடுகளும், பிண்ணனியில் ஒலிக்கும் குரலில் இடைவெளிகளும் இருந்தன. இவை தவிர, அந்த காணொலியில் தோன்றும் சின்னம் தவறாக பொருத்தப்பட்டு இருப்பதையும் நம்மால் காண முடிகிறது.

முடிவு:2020 மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் மூலம் மொத்த இறப்பு எண்ணிக்கை 50,000த்தை எட்டக்கூடும் என்று உலக சுகாதார அமைப்போ அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமோ, 2020 பிப்ரவரியின்போது எச்சரிக்கவில்லை. இந்த காணொலி பழையது மற்றும் தவறானது.

பொறுப்புத்துறப்பு: CoronavirusFacts எனும் தரவுத்தளம் கோவிட்-19 பரவலின் தொடக்கத்திலிருந்து வெளிவரும் தகவல்களின் உண்மை-சரிபார்ப்புகளை பதிவு செய்து வருகிறது. கொரோனா தொற்றுநோயும் அதன் விளைவுகளும் தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே வருவதோடு மட்டுமல்லாது, சில வாரங்கள் அல்லது சில நாட்களுக்கு முன்பு துல்லியமாக இருந்த தரவுகளே கூட மாறிபோகக்கூடிய சூழ்நிலையும் தற்போது உள்ளது. அதனால் ஓர் செய்தியை நீங்கள் பகிர்வதற்கு முன்பு, அச்செய்தி எந்த நாளில் உண்மைச் சரிபார்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து, அதற்கு பின்னரே பகிரவும்.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்