X
X

உண்மை சரிபார்ப்பு: சிவில் சர்வீஸ் தேர்வின் அதிகபட்ச வயது வரம்பை 26 ஆக யுபிஎஸ்சி குறைக்கவில்லை

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பை 32 வயதிலிருந்து 26 ஆண்டுகளாக யுபிஎஸ்சி குறைக்கவில்லை.

புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்) தோன்றுவதற்கான அதிகபட்ச வயது வரம்பை 32 லிருந்து 26 ஆண்டுகளாக குறைத்ததாக வாட்ஸ்அப்பில் பகிரப்படும் ஒரு செய்தித்தாளின் புகைப்படம் கூறுகிறது.

விஸ்வாஸ் நியூஸின் உண்மை சரிபார்ப்பு வாட்ஸ்அப் சாட்பாட் (+91 95992 99372) வழியாக உண்மை சரிபார்ப்பிற்காக இந்த கூற்று நம்மிடையே வந்தடைந்தது. இது குறித்த விசாரணையில் இந்த கூற்று தவறானது என்பதும், சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பை யூபிஎஸ்சி ஆணையம் குறைக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

கூற்று

ஒரு செய்தித்தாளின் வைரல் புகைப்படம், “ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 26 வயதுக்குப் பிறகு இனி விண்ணப்பிக்க முடியாது,” என்று கூறுகிறது.

விசாரணை

முதலில் அந்த புகைப்படத்தில் இருந்த செய்தியை நாங்கள் படித்ததில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் அதிகபட்ச வயது வரம்பை 32 வயதிலிருந்து 26 வயதாக குறைப்பது குறித்து யு.பி.எஸ்.சி இன்னும் முடிவு செய்யவில்லை என்று முதல் பத்தியில் குறிப்படப்பட்டிருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். வயது வரம்பினைக் குறைப்பதற்கான ஒரு உறுதியான முடிவைப் பற்றி அந்தக் கட்டுரையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

கூகுள் தலைகீழ் படத் தேடல் கருவியைப் பயன்படுத்தி இந்த வைரல் புகைப்படத்தைத் தேடியதில், இந்த இடுகை 2016 முதல் வைரலாக இருப்பதைக் கண்டறிந்தோம். இது குறித்த வார்த்தைகளை இணையத்தில் தேடியபோது, ​​ஆகஸ்ட் 2016 இல் வெளியிடப்பட்ட பல ஊடக அறிக்கைகள் அதிகபட்ச வயது வரம்பைக் குறைக்க பரிந்துரைத்து இருப்பதையும், ஆனால் அது குறித்து யூபிஎஸ்சி ஆணையம் இன்னும் இந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.

இது குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள சிவில் சர்வீஸ் தேர்வு 2019 அறிவிப்பு அதிகபட்ச வயது வரம்பில் குறைப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

இது குறித்து விசாரிக்க டெல்லியைச் சேர்ந்த எலைட் ஐ.ஏ.எஸ் அகாடமியைச் சேர்ந்த ரோஹித் வர்மாவை விஸ்வாஸ் நியூஸ் தொடர்பு கொண்டோம். இது குறித்து நம்மிடையே பேசிய அவர், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளில் தோன்றுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு பொது வகைக்கு 32 ஆண்டுகள் என்றும், ஓ.பி.சி.க்கு 35 ஆண்டுகள் என்றும், எஸ்.சி / எஸ்.டிக்கு 37 ஆண்டுகள் என்றும் குறிப்பிட்டார். “இந்த வைரல் பதிவு தவறானது. யுபிஎஸ்சி வயது வரம்பை 26 ஆண்டுகளாக குறைக்கவில்லை,” என்று வர்மா கூறினார்.

निष्कर्ष: சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பை 32 வயதிலிருந்து 26 ஆண்டுகளாக யுபிஎஸ்சி குறைக்கவில்லை.

  • Claim Review : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்) தோன்றுவதற்கான அதிகபட்ச வயது வரம்பை 32 லிருந்து 26 ஆண்டுகளாக குறைத்ததாக வாட்ஸ்அப்பில் பகிரப்படும் ஒரு செய்தித்தாளின் புகைப்படம் கூறுகிறது.
  • Claimed By : வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட செய்தி
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later