உண்மை சரிபார்ப்பு: கையில் கம்புடன் நிற்கும் இந்த பெண்ணின் புகைப்படம் தற்போது நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தில் எடுக்கப்பட்டது அல்ல

இந்த வைரல் பதிவு தவறானது. இந்த புகைப்படம் 2016 ஆம் ஆண்டு முதலே வெவ்வேறு கூற்றுகளுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதே உண்மை.

உண்மை சரிபார்ப்பு: கையில் கம்புடன் நிற்கும் இந்த பெண்ணின் புகைப்படம் தற்போது நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தில் எடுக்கப்பட்டது அல்ல

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி).தில்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு இடையே, ஒரு பெண் தனது கையில் மர கம்புடன், கோபத்தோடு காவல்துறையினரின் முன் நிற்கும் ஒரு புகைப்படம், தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தின்போது இது எடுக்கப்பட்டது என்ற கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த கூற்று தவறானது என்பதும், இந்த வைரல் புகைப்படம் 2016 ஆம் ஆண்டு முதலே இணையத்தில் பல வைரல் கூற்றுகளுடன் பகிரப்பட்டு வருவதும் எங்களுக்குத் தெரியவந்தது.

கூற்று

ஹமாரா இந்துஸ்தான் பியாரா சா இந்துஸ்தான் என்ற ஃபேஸ்புக் பக்கம், ஒரு பெண் தன் கையில் மர கம்புடன் காவல்துறையினருக்கு முன்னால் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, விவசாயிகளின் போராட்டத்தில் இவர் பங்கேற்கிறார் என்று எழுதியுள்ளது.
இந்த பேஸ்புக் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

இது குறித்து விசாரிக்க, கூகுள் தலைகீழ் படக் கருவியைப் பயன்படுத்தி இந்த புகைப்படத்தை இணையத்தில் தேடியதில், இந்த புகைப்படம் 10 செப்டம்பர் 2016 அன்று ஹைதராபாத் ஃபன்னி கிளப் என்கிற பேஸ்புக் பக்கத்தில் எந்த விளக்கமும் இல்லாமல் பதிவேற்றப்பட்டு இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

இது தவிர, டிஜு தங்கச்சன் (@TijuThankacham) என்பவர், 4 அக்டோபர் 2018 அன்று வெளியிட்ட ட்வீட்டிலும், விவசாயிகளின் போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது என்ற கூற்றுடன், இந்தப் புகைப்படம் பதிவேற்றப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

இந்த கூற்றினை சரிபார்க்க நாங்கள் டிஜு தங்கச்சனை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடத்தில் இது பற்றி பேசிய அவர், “எனக்கு சரியாக நினைவில் இல்லை, ஆனால் வாட்ஸ்அப் மூலம் கிடைத்த பபடத்தைத்தான் நான் என் ட்விட்டரில் பகிர்ந்தேன். இந்த புகைப்படத்தை நான் எடுக்கவில்லை என்றாலும், இந்த புகைப்படம் பழையது மற்றும் எந்தவொரு சமீபத்திய போராட்டத்தின்போதும் எடுக்கப்படவில்லை என்பதை நான் நிச்சயமாக சொல்ல முடியும்,” என்று கூறினார்.

இந்த புகைப்படம் குறித்த எந்தத் தகவலும் இல்லாததால், இந்த புகைப்படத்தின் மூலத்தை எங்களால் அடையாளம் காண முடியவில்லை என்றாலும், இந்த புகைப்படம் தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது அல்ல என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது.

இந்த வைரல் கூற்றினை பகிர்ந்து கொண்ட பேஸ்புக் பக்கத்தினை ஆராய்ந்ததில், அப்பக்கத்திற்கு 62,223 பின்தொடர்பவர்கள் இருப்பது எங்களுக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. இந்த புகைப்படம் 2016 ஆம் ஆண்டு முதலே வெவ்வேறு கூற்றுகளுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதே உண்மை.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்