X
X

உண்மை சரிபார்ப்பு: காலிஸ்தான் கேட்கும் சீக்கியர் புகைப்படம் தில்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டது அல்ல

இந்த வைரல் பதிவு தவறானது. 2013 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படமே, தற்போதைய விவசாயிகள் போராட்டத்தின்போது எடுக்கப்பட்டதாக பகிரப்பட்டுள்ளது.

  • By: Ashish Maharishi
  • Published: Dec 5, 2020 at 03:33 PM
  • Updated: Dec 6, 2020 at 07:30 PM

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). காலிஸ்தானைக் கோரும் பதாகையுடன் இருக்கும் ஒரு சீக்கியரின் புகைப்படம் தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தின்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த பழைய புகைப்படம் தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டதின்போது எடுக்கப்பட்டது என்ற தவறான கூற்றுடன் இப்போது வைரலாகியுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான இதுபோன்ற பல தவறான பதிவுகள் குறித்து விஸ்வாஸ் நியூஸ் விசாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூற்று

பேஸ்புக் பயனர் ரஞ்சித்குமார் மாவிலாய் டிசம்பர் 2 அன்று ஒரு நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, “விவசாயிகள் போராட்டம் இப்போ எங்கே போய் நிக்குது பாருங்க , இவர்களுக்கு Funding அதே புது தில்லி சிஎஎ போராட்ட குழுக்களுக்கு பட்டுவாடா பண்ண அதே குள்ளநரி கூட்டம் தான்…” என்று எழுதியுள்ளார்.

மற்றொரு பேஸ்புக் பயனரான ராஜ்தீப் கோஷ் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, “இவரது இயக்கம் விவசாயிகள் இயக்கம் அல்ல. இவர்களின் நோக்கம் காலிஸ்தானை உருவாக்குவதுதான் … ” என்று எழுதியுள்ளார்.

இந்த பேஸ்புக் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம். பல பயனர்களும் இந்த புகைப்படத்தை இதே போன்ற கூற்றுடன் பல சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளனர்.

விசாரணை

இந்த புகைப்படத்தின் மூலத்தைக் கண்டறிய, கூகுள் தலைகீழ் படக் கருவியைப் பயன்படுத்தி, இந்த வைரல் புகைப்படத்தை தேடினோம். அவ்வாறு தேடியதில், இந்த புகைப்படத்தை பல தேசிய மற்றும் சர்வதேச வலைத்தளங்களில் நம்மால் காண முடிந்தது. டைம்லைன் கருவியைப் பயன்படுத்தி இதன் அசல் புகைப்படத்தைத் தேடியதில், அதனை கெட்டி இமேஜஸ் இணையதளத்தில் கண்டறிந்தோம். அதில் கூறப்பட்டிருந்த விளக்கத்தில், “பல்வேறு தீவிர சீக்கிய அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள், சீக்கிய தலைவர் சாண்ட் ஜர்னைல் சிங் பிந்த்ரான்வாலே மற்றும் காலிஸ்தானுக்கு (சுயாதீன சீக்கிய மாநிலம்) ஆதரவாக பதாகைகள் வைத்துள்ளனர். ஜூன் 6, 2013 அன்று அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் உள்ள ஸ்ரீ அகல் தக்தில் ஆபரேஷன் புளூஸ்டாரின் 29 வது ஆண்டுவிழாவான ‘கல்லுகரா திவாஸ்’ நிகழ்ச்சியினையொட்டி நடைபெற்ற வழிபாட்டிற்கு பிறகு, இந்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டம், ஆபரேஷன் ப்ளூஸ்டாரின் 29 வது ஆண்டு நிறைவைக் குறித்தது… ” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கூற்றினைச் சரிபார்க்க நாங்கள் ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டியின் (SGPC) செய்தித் தொடர்பாளர் குல்விந்தர் சிங்கை தொடர்பு கொண்டோம். இது பற்றி நம்மிடத்தில் பேசிய அவர், இந்த வைரல் புகைப்படம் பழையது என்றும், இது தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடையது அல்ல என்றும் நமக்குத் தெளிவுபடுத்தினார்.

இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்து கொண்ட பேஸ்புக் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை பின்பற்றுபவர் என்பதும், பிப்ரவரி 2015 முதல் அவரது கணக்கு செயலில் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. 2013 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படமே, தற்போதைய விவசாயிகள் போராட்டத்தின்போது எடுக்கப்பட்டதாக பகிரப்பட்டுள்ளது.

  • Claim Review : ஒரு நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, “இவரது இயக்கம் விவசாயிகள் இயக்கம் அல்ல. இவர்களின் நோக்கம் காலிஸ்தானை உருவாக்குவதுதான் … ” என்று எழுதியுள்ளார்
  • Claimed By : பேஸ்புக் பயனர் ராஜ்தீப் கோஷ்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later