உண்மை சரிபார்ப்பு: இந்தக் காணொளியில் இந்தியப் பயணிகளோடு பேசுவது புடின் அல்ல, ருமேனியாவிற்கான இந்தியத் தூதர், ராகுல் ஸ்ரீவாஸ்தவா.

இந்தக் க்ளைம் பொய் என்று தனது புலன் விசாரணையில் விஷ்வாஸ் நியூஸ் கண்டு பிடித்தது. இந்த வைரல் காணொளியில், இந்தியப் பயணிகளிடம் பேசிக்கொண்டிருப்பவர் புடின் அல்ல, ருமேனியாவிற்கான இந்தியத் தூதர், ராகுல் ஸ்ரீவாஸ்தவா.

உண்மை சரிபார்ப்பு: இந்தக் காணொளியில் இந்தியப் பயணிகளோடு பேசுவது புடின் அல்ல, ருமேனியாவிற்கான இந்தியத் தூதர், ராகுல் ஸ்ரீவாஸ்தவா.

விஷ்வாஸ் நியூஸ் (புது டெல்லி): உக்ரைய்ன்-ரஷ்யா போருக்கு நடுவே, ஒரு நபர் இன்டர்காம் போனை உபயோகித்து விமானத்துக்குள் இருக்கும் மக்களிடம் பேசுவது போன்ற ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. அந்த நபர் ரஷ்யாவின் அதிபர் புடின் என்றும் அவர் இந்தியர்களிடம் பேசுவதற்காக ஏர் இந்தியா (ஏஐ)வின் விமானத்துக்குள் வந்தார் என்றும் இந்தப் பதிவில் க்ளைம் செய்யப்படுகிறது. இந்தக் க்ளைம் பொய் என்று தன புலன் விசாரணையில் விஷ்வாஸ் நியூஸ் கண்டுபிடித்தது. இந்த வைரல் காணொளியில், இந்தியப் பயணிகளிடம் பேசிக்கொண்டிருப்பவர் புடின் அல்ல, ருமேனியாவிற்கான இந்தியத் தூதர், ராகுல் ஸ்ரீவாஸ்தவா.

இந்த வைரல் பதிவில் இருப்பது என்ன?

ஃபேஸ்புக் பயனர் துரை ராஜ் கே தன ஃபேஸ்புக் தற்குறிப்பில் இந்தக் காணொளியைப் பதிவிட்டு இவ்வாறு தலைப்புக் கொடுத்தார் “ரஷ்ய அதிபர் புடின் இந்தியர்களை நம்ப வைப்பதற்காக தானே நேரடியாக ஏர் இந்தியா (ஏஐ) விமானத்துக்குச் சென்றார். இந்தியாவுக்கு என்ன ஒரு மரியாதை. இந்தியனாய் இருப்பதில் பெருமைப்படுங்கள்.”

புலன் விசாரணை

எங்கள் விசாரணையைத் துவக்குவதற்காக, நாங்கள் இந்தக் காணொளியை சரியாகப் பார்த்தோம். இந்தக் காணொளியின் துவக்கத்தில், “காலை வணக்கம் நண்பர்களே, என் பெயர் ராகுல் ஸ்ரீவாஸ்தவா நான் ருமேனியாவிற்கான இந்தியத் தூதர்.” என்று ஒருவர் சொல்வது கேட்கிறது. மேலும், இந்தக் காணொளியின் கீழே ET Now-இன் லோகோவைப் பார்க்க முடிகிறது.

இங்கிருந்து இந்தக் குறிப்பை எடுத்துக் கொண்டு, சில முக்கிய வாரத்தைகளை உபயோகித்து இந்தக் காணொளியின் ஸ்க்ரீன்ஷாட்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜில் தேடினோம். இந்தக் காணொளி ET Now-இன் ட்விட்டர் ஹேண்டிலில் 25 பிப்ரவரி 2022 அன்று அப்லோட் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு பிடித்தோம். அதன் விவரிப்பு இவ்வாறு இருந்தது “வாழ்வில் எப்போதெல்லாம் கஷ்டங்களை சந்திக்கிறீர்களோ, இந்த நாளை நினைவு கூறுங்கள் & அனைத்தும் சரியாகி விடும்” – #ருமேனியாவிற்கான இந்தியத் தூதர் ராகுல் ஸ்ரீவாஸ்தவாவின் விமானத்தில் உள்ள இந்திய பிரஜைகளுக்கான தனிப்பட்ட செய்தியைக் கேளுங்கள்

இந்தக் காணொளியில் உள்ளவர் ருமேனியாவிற்கான இந்தியத் தூதர் என்ற அதே விவரிப்போடு கூடிய இந்தக் காணொளியை பியுஷ் கோயலின் ட்விட்டர் ஹேண்டிலிலும் கண்டுபிடித்தோம்.

https://twitter.com/PiyushGoyal/status/1497538368447856640

இதைக் குறித்து ருமேனியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் துணை நிர்வாக அதிகாரியோடு தொடர்பு கொண்டோம். அவரிடமிருந்து பதில் வந்தவுடனே இதைப் பற்றி மேல் விவரங்களைத் தெரிவிக்கிறோம்.

விஷ்வாஸ் நியூஸ் இந்த வைரல் காணொளியைப் பகிர்ந்த பயனரின் சமூகப் பின்னணியை பரிசீலனை செய்தது. துரை ராஜ் கே தமிழ் நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர்.

निष्कर्ष: இந்தக் க்ளைம் பொய் என்று தனது புலன் விசாரணையில் விஷ்வாஸ் நியூஸ் கண்டு பிடித்தது. இந்த வைரல் காணொளியில், இந்தியப் பயணிகளிடம் பேசிக்கொண்டிருப்பவர் புடின் அல்ல, ருமேனியாவிற்கான இந்தியத் தூதர், ராகுல் ஸ்ரீவாஸ்தவா.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்