X
X

உண்மை சரிபார்ப்பு: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தள்ளிய யானை கொல்லப்பட்டதாகக் கூறும் இந்த இடுகை தவறானது

இந்த வைரல் பதிவு தவறானது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தள்ளிய காவேரி யானை கொல்லப்படவில்லை. இச்சம்பவம் நடந்து பல மாதங்களுக்கு பிறகு, உடல்நலக் கோளாறுகள் காரணமாக இறந்தது.

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை யானை தள்ளுவது போன்ற ஒரு புகைப்படத்தையும், ஒரு யானையின் சடலத்தைக் காட்டும் மற்றொரு புகைப்படத்தையும் கொண்டுள்ள படத்தொகுப்பு ஒன்று, முதல்வரைத் தாக்கிய யானை ஒரு வாரத்திற்குள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டு, சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. முதுமலை புலிகள் சரணாலயத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இந்தக் கூற்றுக்களை மறுத்துள்ளார்.

கூற்று

மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கூட்டத்தில் யானையுடன் நிற்கும் ஒரு புகைப்படமும், ஒரு இறந்த யானையின் சவத்தைக் காட்டும் மற்றொரு புகைப்படமும், “ஒரு வாயில்லா ஜீவன், அதுக்கு 5 அறிவு தான். ஏதோ தெரியாம ஜெயலலிதா மேல மோதிடுச்சி. அந்த ஒரே காரணத்துக்காக அடுத்த ஒரே வாரத்துல அந்த யானை காவேரி கொல்லப்பட்டது…” என்ற கூற்றுடன், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வைரல் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

நாங்கள் இது குறித்த செய்திக்காக இணையத்தில் தேடியதில், 31 ஜூலை 2013 அன்று வெளியிடப்பட்ட காணொலியுடன் கூடிய NDTV கட்டுரை ஒன்று எங்களுக்குக் கிடைத்தது. அதில் “தமிழக முதல்வர் ஜெயலலிதா, முதுமலையில் உள்ள யானை முகாமில் ஒரு யானைக்குட்டிக்கு பழங்களை அளிக்க முயன்றபோது அதிர்ச்சியான நிகழ்வு ஒன்று நடைபெற்றது… இரண்டு வயதே உடைய அந்தக் குட்டியானை முதலமைச்சரை கடினமாக தள்ளியது,” என்று கூறப்பட்டிருந்தது.

இது தவிர, காவிரி யானை கொல்லப்பட்டது தொடர்பாக எந்த உண்மையான அறிக்கையும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.

இதன் உண்மை சரிபார்ப்புக்காக தமிழகத்தில் மீட்கப்படும் யானைகளின் பராமரிப்பாளரான முதுமலை புலிகள் சரணாலயத்தை (MTR) தொடர்பு கொண்டு பேசினோம். “இந்த வைரல் பதிவு தவறானது. மறைந்த முதலமைச்சர் தொடர்பான இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்களுக்குப் பிறகு காவேரி (யானை) வியாதிகளால் இறந்தது. மேலும், இந்த வைரல் இடுகையில் உள்ள புகைப்படம், இறந்த காவேரி யானையின் புகைப்படம் அல்ல. தர்மபுரியிலிருந்து நாங்கள் மீட்ட மற்றொரு யானை,” என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி கூறினார்.

அந்த நேரத்தில் காவேரி யானைக்கு சிகிச்சையளித்த திரிசூரை சேர்ந்த கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் PB கிரிதாஸையும் நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். “இந்த யானைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் பெயர் சூட்டினார். இந்த வைரல் கூற்று தவறானது. எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது, காவேரி (யானை) நோய்வாய்ப்பட்டது, பின்பு அதற்கு தண்ணீர் படுக்கையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது… பின்பு ஏதோ ஒரு தொற்றுநோயால் இறந்தது,” என்று கூறினார்.

இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பக்கத்தினை ஆராய்ந்ததில், பேஸ்புக்கில் அவருக்கு 1,17,689 பின்தொடர்பவர்கள் இருப்பது நமக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தள்ளிய காவேரி யானை கொல்லப்படவில்லை. இச்சம்பவம் நடந்து பல மாதங்களுக்கு பிறகு, உடல்நலக் கோளாறுகள் காரணமாக இறந்தது.

  • Claim Review : மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கூட்டத்தில் யானையுடன் நிற்கும் ஒரு புகைப்படமும், ஒரு இறந்த யானையின் சவத்தைக் காட்டும் மற்றொரு புகைப்படமும்,
  • Claimed By : FB User
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later