X
X

உண்மைச் சரிபார்ப்பு: பீகார் சட்டசபையில் பாஜகவைத் தாக்கும் தேஜஸ்வி யாதவின் காணொளி தவறான கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): பீகார் புலம்பெயர்ந்தோர் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறுவது போன்ற போலி காணொளிகளை பரப்பிய யூடியூபர் கைது செய்யப்பட்ட பிறகு, முதல்வர் பதவிக்கான தனது கோரிக்கையை தேஜஸ்வி யாதவ் கைவிட முடிவு செய்தார் என்ற கூற்றுடனான பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் காணொளி காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. வைரலான வீடியோ கிளிப்பில் ஆர்ஜேடி தலைவர் மேற்படி கூறுவதைக் கேட்கலாம். இருப்பினும், விஸ்வாஸ் நியூஸ் விசாரணையில் யாதவின் அறிக்கையின் சூழல் வேறுபட்டது என்பது அம்பலமாகியுள்ளது.

தேஜஸ்வி யாதவின் குடும்பத்தினருக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ நடத்திய சோதனைகளுக்குப் பிறகு பீகார் சட்டமன்றத்தில் அவர் பேசிய வீடியோ கிளிப் வைரலாகி வருகிறது. அவர் பீகார் முதலமைச்சர் ஆகவோ, நிதீஷ் குமார் நாட்டின் பிரதமர் ஆகவோ விரும்பவில்லை என்று யாதவ் கூறியிருந்தார். இந்த உரையில், “நிதீஷ் குமார் தலைமையில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவர் கூறியிருந்தார். மணீஷ் காஷ்யப் வழக்கை இணைத்து இந்த பேச்சின் வீடியோ கிளிப் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

உரிமைகோரல்:

“மனிஷ் காஷ்யப்பிற்கு #தேஜஸ்வி யாதவ் பயந்து #தேஜஸ்வி யாதவ் முதல்வர் ஆகும் கனவை #தேஜஸ்வி #யாதவ் வெளிப்படுத்தினார் என்ற தலைப்புடன் முகநூல் பயனர் ‘என்டிடிவி பாரத்’ வைரலான இந்த காணொளியைப் பகிர்ந்துள்ளார்.”

இதே காணொளியை மற்ற பல பயனர்கள் இதே கூற்றுகளுடன் பகிர்ந்துள்ளனர்.

விசாரணை:

பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) தேஜஸ்வி யாதவ் தமிழ்நாடு விவகாரம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளால் அவரது குடும்பத்தினருக்கு எதிராக நடத்திய சோதனைகள் தொடர்பாக தாக்கி பேசும் வைரல் வீடியோ கிளிப் சுமார் ஐந்து நிமிடங்கள் ஆகும். நிதிஷ் குமார் தலைமையில் பணிபுரிவதில் தான் மகிழ்ச்சியடைவதாகவும், அவர் முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்றும், நிதீஷ் குமார் அவர்களுக்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசையும் இல்லை என்றும் யாதவ் கூறியிருந்தார். மாறாக மக்களுக்காக உழைத்து அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதையே நாங்கள் குறிக்கிறோம்” என்றார்.

அவரது அறிக்கை பல செய்தி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பீகார் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, சாலை கட்டுமான பட்ஜெட் மீதான விவாதத்தில் யாதவ் பேச எழுந்தபோது, இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில் ஆர்ஜேடி தலைவர் மீது பாஜக எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டுகளை கூறி வெளிநடப்பு செய்தனர்.

அந்த அறிக்கையின்படி, “இதற்குப் பிறகு, தேஜஸ்வி யாதவ், இவர்களுக்கு வேலை இல்லை என்று பாஜகவைத் தாக்கி பேசினார். அவர்கள் நாள் முழுவதும் நிதிஷ் குமாரையும் என் மீதும் அவதூறுகளை மட்டுமே வீசுகிறார்கள். சபை நடவடிக்கைகளின் போது, அமலாக்க இயக்குநரகம்-மத்திய புலனாய்வுச் செயலகம் சோதனைகள் தொடர்பாக தேஜஸ்வி யாதவ் பாஜகவை கடுமையாக தாக்கினார். மத்திய புலனாய்வுச் செயலகம் மற்றும் அமலாக்க இயக்குநரகம் நடவடிக்கைகள் தீவிரமடையும் என்று பூர்ணியாவில் நடந்த பேரணியின் போது நாங்கள் கணித்திருந்தோம், அதுதான் நடந்தது என்றார். அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் டெல்லியில் உள்ள எங்கள் வீட்டிற்கு வந்து மணிக்கணக்கில் அமர்ந்தனர். அவர்கள் வெளியேறத் தொடங்கியதும், கைப்பற்றியுள்ள பட்டியலைக் காட்டும்படி அவர்களிடம் கேட்டோம், ஆனால் அவர்கள் அப்படி எதுவும் காட்டவில்லை.”

இந்த அமர்வின் காணொளி பீகார் சட்டப் பேரவையின் இணையதளத்தில் ணையதளத்தில் உள்ளது. கொடுக்கப்பட்ட தகவல்களின்படி, இந்த உரை மகா கூட்டணி குறித்து நடந்து வரும் ஊகங்களை நிராகரித்து தேஜஸ்வி யாதவ் அறிக்கை வெளியிட்டபோது பீகார் சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நடைபெற்ற விவாதம் தொடர்பானது.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைக் கூற்றுடன் போலியான மற்றும் தவறான காணொளியைப் பகிர்ந்ததற்காக யூடியூபர் மணீஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டார். பீகாரில் நடத்தப்பட்ட விசாரணையுடன், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்காக தமிழக காவல்துறை தங்களுடன் அவரையும் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

வைரலான வீடியோ கிளிப்புக்கும் மனிஷ் காஷ்யப் கைது வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது எங்கள் விசாரணையில் தெளிவாகிறது. வைரலான வீடியோ கிளிப் தொடர்பாக பாட்னாவின் டைனிக் ஜாக்ரன் செய்தி ஆசிரியர் அஷ்னினி சிங்கைத் தொடர்புகொண்டோம். பீகார் சட்டசபை கூட்டத்தொடரின் போது, துறை ரீதியான பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, விசாரணை அமைப்புகள் குறித்து தேஜஸ்வி யாதவ் பாஜகவை குறிவைத்தபோது மற்றும் தமிழக விவகாரம் தொடர்பாக நடந்த விவாதத்தின் கிளிப் இது என்று அவர் கூறினார்.

முகநூலில் வைரலான வீடியோ கிளிப்பைப் பகிர்ந்த பயனரை 37,000-க்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். தமிழ்நாடு விவகாரம் தொடர்பான விஸ்வாஸ் செய்தியின் அனைத்து உண்மை சரிபார்ப்பு அறிக்கைகளையும் இங்கே படிக்கலாம்.

முடிவுரை: பீகார் சட்டசபை கூட்டத்தொடரின் போது சாலை கட்டுமானத் துறையின் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது மற்றும் தமிழக நெருக்கடி குறித்து பாஜகவை குறிவைத்து பேசினார். அதே உரையாற்றலின் வீடியோ கிளிப் தவறான கூற்றுடன் பகிரப்பட்டுள்ளது.

  • Claim Review : யூடியூபர் கைது செய்யப்பட்ட பிறகு தேஜஸ்வி யாதவ் பீகார் முதல்வர் பதவிக்கான தனது கோரிக்கையை கைவிட்டார்
  • Claimed By : முகநூல் பயனர்: NDTV பாரத்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later