உண்மை சரிபார்ப்பு: அசாம் வாக்காளரின் பழைய புகைப்படம் தவறான கூற்றுடன் வைரலாகிறது

இந்த வைரல் பதிவு தவறானது. ஆறு ஆண்டுகளுக்கு முன் அசாமில் எடுக்கப்பட்ட ஒரு வாக்காளரின் புகைப்படம் தற்போது பீகாரில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் ஒல்லியான மனிதர் ஒருவரின் புகைப்படம் பீகாரைச் தேர்தலின்போது எடுக்கப்பட்டது என்ற கூற்றுடன் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த கூற்று தவறானது என்பதும், இந்த வைரல் புகைப்படம் 2014 இல் அசாமில் எடுக்கப்பட்டது என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.

கூற்று

பேஸ்புக் பயனரான ரிஷாப் திரிவேதி என்பவர் அக்டோபர் 29 அன்று India Against Hate & Violence என்ற பேஸ்புக் குழுவில் வாக்குச்சாவடியில் ஒல்லியான மனிதர் வாக்களிக்கும் புகைப்படத்தை பதிவேற்றி, தனது குழந்தைகள் இப்படி பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் தான் அவர் வாக்களிக்க வந்திருப்பதாகக் கூறி, நிதீஷின் 15 ஆண்டுகால ஆட்சியின் கீழ் பீகாரில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை விமர்சித்துள்ளார். இந்த பேஸ்புக் இடுகையை இங்கே காணலாம்.

விசாரணை

இது குறித்து விசாரிக்க கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி இணையத்தில் இந்த புகைப்படத்தின் உண்மையான மூலத்தைத் தேடினோம். அவ்வாறு தேடியதில் இந்த புகைப்படம் 19 நவம்பர் 2019 அன்று janjwar.com வெளியிட்ட ஒரு கட்டுரையில் இருப்பதை கண்டறிந்தோம். அக்கட்டுரை வைரல் புகைப்படத்தில் உள்ள மனிதரை பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக அடையாளம் காட்டியது.

தி இந்து 13 ஏப்ரல் 2014 அன்று வெளியிட்ட கட்டுரையிலும் இதே புகைப்படத்தை எங்களால் காண முடிந்தது. அக்கட்டுரை அந்த நபரை அசாமில் உள்ள கர்பி அங்லாங் மாவட்டத்தின் திவா பழங்குடிகளை சேர்ந்தவர் என்று அடையாளம் காட்டியது. அக்கட்டுரையின் கீழ் கொடுக்கப்பட்டிருந்த புகைப்படம் எடுத்தவரின் பெயரில் ரிதுராஜ் கன்வார் என்ற பெயர் குறிப்படப்பட்டிருந்ததை நாங்கள் கவனித்தோம்.

இந்த கூற்றினை சரிபார்க்க ரிதுராஜ் கன்வாரை நாங்கள் தொடர்பு கொண்டோம். தான் ஒருபோதும் பீகார் சென்றதில்லை என்றபோதிலும், தனது பழைய புகைப்படத்தை மக்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.

இந்த வைரல் இடுகை பகிரப்பட்ட பேஸ்புக் குழுவினை ஆராய்ந்ததில், அக்குழுவில் 719 உறுப்பினர்கள் இருப்பது எங்களுக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. ஆறு ஆண்டுகளுக்கு முன் அசாமில் எடுக்கப்பட்ட ஒரு வாக்காளரின் புகைப்படம் தற்போது பீகாரில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்