X
X

உண்மை சரிபார்ப்பு: இந்த படம் தமிழக தேர்தலுடன் தொடர்புடையது அல்ல, தாய்லாந்தின் பழைய புகைப்படம் தவறான கூற்றுடன் வைரலாகிறது

தாய்லாந்தில் வழங்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்களின் பழைய புகைப்படம் தற்போது தவறான கூற்றுடன் வைரலாகியுள்ளது.

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 30 கோடி மதிப்புள்ள மதுபானங்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக சமூக ஊடகங்களில் ஒரு வைரல் பதிவு கூறுகிறது.

இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தாய்லாந்தில் வெள்ள நிவாரணப் பொருட்களாக வழங்கப்பட்டவையின் பழைய புகைப்படமே தவறான கூற்றுடன் வைரலாகி இருப்பது நமக்குத் தெரியவந்தது.

கூற்று

பேஸ்புக் பயனர் புகழேந்தி புகழ் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, “இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற திமுக வேட்பாளராக போட்டியிடும் காதர்பாட்சா முத்துராமலிங்க தேவர்  என்பவர் தொகுதி ஆண் வாக்காளர்களுக்காக மதுவிருந்து சப்ளை செய்வதற்காக சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்,வாட்டர்பாட்டில் ஸ்னாக்ஸ் போன்றவையே கொடுப்பதற்காக தயாராக வழுதூர்  உள்ள ஒரு கிட்டங்ககியில்  இருந்தது.! அதை பறிமுதல் செய்தனர் தேர்தல் அதிகாரிகள் ! இராமநாதபுரம் மாவட்ட மக்கள் இன்னும் திமுகவுக்கும் மதுவுக்கு அடிமை……சிந்திப்பீர் செயல்படுவீர் வாக்களிப்பீர் நல்லாட்சி தரக்கூடிய நல்லாட்சிக்கு,” என்று எழுதியுள்ளார்.

திருமங்கலம் தொகுதியின் அதிமுக வேட்பாளர் உதயகுமார் பெயரிலும் இதேபோன்ற கூற்றுகள் பகிரப்பட்டு இருப்பதையும் நாங்கள் கண்டோம்.

விசாரணை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதியும், மே 2 ஆம் தேதி அதன் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று டைனிக் ஜாக்ரானின் ஒரு கட்டுரை கூறுகிறது.

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும்  தேர்தலில் திமுகவின் சார்பில் காதர்பாட்சாவும் மற்றும் அதிமுகவின் உதயகுமாரும் வேட்புமனுத்தாக்கல் செய்தது குறித்த செய்திகளை நாங்கள் கண்டறிந்தாலும், இந்த வைரல் கூற்றை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் எங்களால்  கண்டுபிடிக்க இயலவில்லை.

இதன் உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் ராமநாதபுரம் தொகுதி துணை ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர், “இந்த தவறான இடுகை நேற்று முதல் வைரலாக உள்ளது,” என்று கூறினார்.

கூகுள் பின்னோகிய படத் தேடலைப் பயன்படுத்தி, இந்தப் புகைப்படத்தை இணையத்தில் தேடியதில், இப்புகைப்படம் ‘தாய் டிவி சோசியல்’ என்ற பேஸ்புக் பக்கத்தில், 22 செப்டம்பர் 2019 அன்று ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பைகள்’ என்று தலைப்பில் பதிவேற்றப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம்.

தாய்லாந்தைச் சேர்ந்த செய்தி வலைதளம் ஒன்றிலும், ஒரு நபர் மற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் மதுபானங்களையும் விநியோகிக்கும் பல புகைப்படங்களை நாங்கள் கண்டோம்.

கடந்த அக்டோபரில் நடைபெற்ற பீகார் தேர்தலின்போதும், இந்த புகைப்படம் குறித்த தவறான கூற்றுக்களை நாங்கள் வெளியிட்டோம்.

இந்த இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், பேஸ்புக்கில் அவருக்கு 3,490 நண்பர்கள் இருப்பதும் நமக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: தாய்லாந்தில் வழங்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்களின் பழைய புகைப்படம் தற்போது தவறான கூற்றுடன் வைரலாகியுள்ளது.

  • Claim Review : இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற திமுக வேட்பாளராக போட்டியிடும் காதர்பாட்சா முத்துராமலிங்க தேவர் என்பவர் தொகுதி ஆண் வாக்காளர்களுக்காக மதுவிருந்து சப்ளை செய்வதற்காக சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்,வாட்டர்பாட்டில் ஸ்னாக்ஸ் போன்றவையே கொடுப்பதற்காக தயாராக வழுதூர் உள்ள ஒரு கிட்டங்ககியில் இருந்தது.! அதை பறிமுதல் செய்தனர் தேர்தல் அதிகாரிகள் ! இராமநாதபுரம் மாவட்ட மக்கள் இன்னும் திமுகவுக்கும் மதுவுக்கு அடிமை......சிந்திப்பீர் செயல்படுவீர் வாக்களிப்பீர் நல்லாட்சி தரக்கூடிய நல்லாட்சிக்கு
  • Claimed By : பேஸ்புக் பயனர்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later