X
X

உண்மை சரிபார்ப்பு: 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தின் பழைய புகைப்படங்கள் தெளிவற்ற கூற்றுடன் வைரலாகிறது

அந்த இடுகையுடன் பகிரப்படும் புகைப்படங்கள் சமீபத்திய சம்பவங்கள் அல்ல. அவை 2018 இல் உத்தரபிரதேசத்தின் லக்னோவில் நடந்த ஒரு போராட்டத்தின் பழைய புகைப்படங்கள் தற்போது தெளிவற்ற கூற்றுக்களுடன் பகிரப்பட்டு வருகின்றன என்பதே உண்மையாகும்.

புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). செப்டம்பர் 17, தேசிய வேலையின்மை தினத்தன்று மாணவர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட்டம் செய்துபோது அவர்கள் லத்தியால் தாக்கப்பட்டதாகக் கூறி, காயமடைந்த ஒருவரின் படம் உள்ள ஒரு இடுகை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது முதலில் ட்விட்டரில் பகிரப்பட்டு, பின்னர் பேஸ்புக்கிலும் அதிகமாய் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்த கூற்று தெளிவற்றது என்பதும், உத்தரபிரதேசத்தின் லக்னோவில் 2018 இல் நடந்த ஒரு சம்பவத்தின் பழைய புகைப்படங்கள் இப்போது தவறான கூற்றுக்களுடன் வைரலாகி வருகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

கூற்று

சமூக வலைதளங்களில் காயமடைந்த நபரின் புகைப்படத்துடன் கூடிய ஒரு இடுகை, “17 செப்டம்பர் தேசிய வேலைவாய்ப்பு தினம்: மாணவர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடினால், அவர்களை லத்தியால் தாக்குகிறார்கள். அதேபோல் விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காக போராடினாலும், அவர்களையும் லத்தியால் தாக்குகின்றனர், ” என்று கூறுகிறது. அந்த இடுகையினை இங்கே காணலாம்.

https://twitter.com/ManishasinghSi5/status/1305568418528075776

இதே போன்ற கூற்றுக்களுடன் காயமடைந்த அந்த நபரின் மற்ற புகைப்படங்களும் பல்வேறு சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றது.

விசாரணை

இது குறித்த விசாரணையில் மாணவர்கள் சமீபத்தில் லத்தியால் தாக்கப்பட்டது குறித்த பல செய்தி அறிக்கைகள் எங்களுக்குக் கிடைத்தன.

இதனைத் தெளிவுபடுத்த லக்னோ காவல்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரியைத் தொடர்பு கொண்டோம். இது பற்றி பேசுகையில் “இது பழைய புகைப்படம். நேற்று லக்னோவில் இது போன்ற எந்த சம்பவமும் நடைபெறவில்லை ” என்று கூறினார்.

அந்த காயமடைந்த நபரின் புகைப்படத்தை கூகுளின் பின்னோக்கிய படத் தேடல் கருவியைப் (Google Reverse Image Search Tool) பயன்படுத்தி இணையத்தில் தேடியபோது, இந்தப் புகைப்படம் 2018 முதல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதை எங்களால் அறிந்து கொள்ள முடிந்தது.

இதே புகைப்படங்களை அமர் உஜலா செய்தி இணையதளத்திலும் எங்களால் காண முடிந்தது. 2 நவம்பர் 2018 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், “சட்டசபையைச் சுற்றி கூடிய போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே, 68,500 உதவி ஆசிரியர் பதவிகளை நிரப்புவதில் கட்-ஆப் மதிப்பெண்களைக் குறைப்பது குறித்து பலமுறை மோதல் உருவாகியது. கோபமடைந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களைத் துரத்தி துரத்தி அடித்து, கடுமையாகத் தாக்கினர்,” என்று கூறப்பட்டுள்ளது.

மிரர் நவ் யூடியூப் சேனலிலும் இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு காணொளியை எங்களால் காண முடிந்தது. அதில் “ உத்திர பிரதேசத்தில் ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பில் மோசடி: இதை எதிர்த்து போராடிய போராட்டக்காரர்கள் மாநில சட்டசபைக்கு வெளியே லத்தியால் தாக்கப்பட்டனர். 12,000 க்கும் மேற்பட்ட அரசு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதை ரத்து செய்தும், இந்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கிய உத்தரபிரதேச அரசாங்கத்தின் ஆட்சேர்ப்பின் முரண்பாடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவும் வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் காரணமாகவே போராட்டங்கள் வெடித்துள்ளன,” என்று கூறப்பட்டிருந்தது.

அந்த வைரல் புகைப்படங்களை உன்னிப்பாக கவனித்தபோது, அதில் ​​புகைப்படக்காரரின் பெயரான ‘அசுதோஷ் திரிபாதி’ இருப்பதைக் கண்டறிந்தோம்.

இதனைத் தெளிவுபடுத்த புகைப்பட நிருபரான திரிபாதியை தொடர்பு கொண்டோம். இது குறித்து அவர் பேசுகையில் ” 2018 ஆம் ஆண்டில் லக்னோவில் விதான் சபைக்கு முன்னால் நடந்த போராடத்தின் போது நான் அந்த புகைப்படங்களை எடுத்தேன்,” என்று கூறினார்.

மேலும் அந்தச் சம்பவம் குறித்து ராகுல் காந்தி 3 நவம்பர் 2018 அன்று வெளியிடப்பட்ட ட்வீட்டையும் அவர் நம்மிடத்தில் பகிர்ந்தார்.

தவறான கூற்றுடன் இந்தப் புகைப்டங்களைப் பகிர்ந்துள்ள பல பயனர்களில் ட்விட்டர் பயனர் அலோக் சிவஹரே ஒருவர். அவரது சுயவிவரத்தினை ஆராய்ந்ததில், அவரது கணக்கு ஆகஸ்ட் 2016 முதல் செயலில் உள்ளது என்பதும், அக்கணக்கு 45 பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது. இந்தப் புகைப்படத்துடன் கூடிய இடுகை சுமார் 1.4K முறை மறு ட்வீட் செய்யப்பட்டு, 808 முறை லைக்கிடப்பட்டும் உள்ளது.

निष्कर्ष: அந்த இடுகையுடன் பகிரப்படும் புகைப்படங்கள் சமீபத்திய சம்பவங்கள் அல்ல. அவை 2018 இல் உத்தரபிரதேசத்தின் லக்னோவில் நடந்த ஒரு போராட்டத்தின் பழைய புகைப்படங்கள் தற்போது தெளிவற்ற கூற்றுக்களுடன் பகிரப்பட்டு வருகின்றன என்பதே உண்மையாகும்.

  • Claim Review : வேலையின்மைக்கு எதிராக போராடிய மாணவர்கள் உ.பி. காவல்துறையினரால் தாக்கப்பட்டனர் என்ற கூற்றுடன் கூடிய படங்கள்
  • Claimed By : பேஸ்புக் பயனர் ரூபேஷ் மிஸ்ரா
  • Fact Check : Misleading
Misleading
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later