உண்மை சரிபார்ப்பு: புர்கா அணிந்த கல்லூரி மாணவிகளின் புகைப்படம் கேரள காவல்துறை பெண் அதிகாரிகள் என்ற தவறான கூற்றுடன் வைரலாகிறது

இந்த புகைப்படத்தில் காணப்படும் பெண்கள் கல்லூரி மாணவிகளே தவிர, காவல்துறை அதிகாரிகள் அல்லர். கேரளாவின் காசராகோடு மாவட்டத்தில் உள்ள ஒரு அரபு கல்லூரியில் 2017 இல் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்பதே உண்மை.

உண்மை சரிபார்ப்பு: புர்கா அணிந்த கல்லூரி மாணவிகளின்  புகைப்படம் கேரள காவல்துறை பெண் அதிகாரிகள் என்ற தவறான கூற்றுடன் வைரலாகிறது

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம் சில பெண்கள் புர்கா அணிந்து ஒரு காவல்துறை அதிகாரியைச் சுற்றி நிற்பதைக் காட்டுகிறது. இந்த புகைப்படம் இவர்கள் கேரள காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் என்று கூற்றுடன் வைரலாகிறது.

நமது வாட்ஸ்அப் சாட்பாட் (+919599299372) வழியே உண்மை சரிபார்ப்பிற்காக இந்த கூற்று நம்மிடம் வந்தடைந்தது. இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்தக் கூற்று தவறானது என்று தெரியவந்துள்ளது. இந்த வைரல் புகைப்படத்தில் காணப்படும் பெண்கள் கல்லூரி மாணவிகளே. 2017 ஆம் ஆண்டு கேரளாவின் காசராகோடு மாவட்டத்தில் உள்ள ஒரு அரபு கல்லூரியில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்பதே உண்மை.

கூற்று

சமூக ஊடக பயனரான ‘சுரேஷ் மஞ்சி ஃபடக்’ என்பவர் இந்த வைரல் புகைப்படத்தை பகிர்ந்து, “அதிர்ச்சியடைய வேண்டாம், இந்த புகைப்படம் சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்டது அல்ல, இவர்கள் கேரள காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள்,” என்று எழுதியுள்ளார். இந்த இடுகையை இங்கே காணலாம்.

விசாரணை

இது குறித்து விசாரிக்க, கூகுள் தலைகீழ் பட கருவியைப் பயன்படுத்தி இந்த புகைப்படத்தை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், அக்டோபர் 24, 2017 அன்று வெளியிடப்பட்ட தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் செய்தி அறிக்கையில் இந்த புகைப்படத்தைக் கண்டோம். அந்த செய்தி அறிக்கையின்படி, அந்த புகைப்படத்தில் இருக்கும் காவல்துறை அதிகாரி காசர்கோடு மாவட்டத்தின் அன்றைய காவல்துறை ஆய்வாளரான KG சைமன் ஆவார். புகைப்படத்தில் காணப்படும் பெண்கள் கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு அரபு கல்லூரியின் மாணவிகள் ஆவர்.

இந்த கூற்றினை மேலும் உறுதிப்படுத்த காவல்துறை அதிகாரியான கே.ஜி. சைமனை நாங்கள் தொடர்பு கொண்டோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், தான் 2017 ஆம் ஆண்டில் காசர்கோடு நகரில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்வில் விருந்தினராக கலந்துகொண்டபோது எடுக்கப்பட்டதே இந்த புகைப்படம் என்று நமக்கு உறுதிப்படுத்தினார். மேலும் அவர் கூறுகையில், “புகைப்படத்தில் காணப்படும் பெண்கள் கல்லூரி மாணவிகளே, அவர்கள் காவல்துறை அதிகாரிகள் அல்லர். அந்த மாணவிகள் உள்ளூர் காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்த ‘நிர்பயா’ என்ற தற்காப்புப் பட்டறையில் கலந்து கொண்டனர்,” என்று கூறினார்.

निष्कर्ष: இந்த புகைப்படத்தில் காணப்படும் பெண்கள் கல்லூரி மாணவிகளே தவிர, காவல்துறை அதிகாரிகள் அல்லர். கேரளாவின் காசராகோடு மாவட்டத்தில் உள்ள ஒரு அரபு கல்லூரியில் 2017 இல் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்பதே உண்மை.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்