உண்மை சரிபார்ப்பு: ஹரியானா அரசு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கவில்லை

இந்த வைரல் செய்தி புகைப்படம் பழையது. ஹரியானா அரசு வார இறுதி ஊரடங்கு எதுவும் அறிவிக்கவில்லை.

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). ஹரியானாவின் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட்டைக் கொண்டுள்ள வைரல் செய்தி புகைப்படம் ஒன்று, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதாகக் கூறுகிறது.

இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த கூற்று தவறானது மற்றும் இந்த செய்தி புகைப்படம் பழையது என்பது நமக்குத் தெரியவந்தது. மாநிலம் முழுவதும் ஊரடங்கு என்ற இந்த வைரல் கூற்றினை சுகாதாரத்துறை அமைச்சர் மறுத்துவிட்டார்.

கூற்று

அனில் விஜ் ட்வீட்டின் புகைப்படத்துடன் கூடிய இந்தியா நியூஸின் வைரல் செய்தி புகைப்படம் ஒன்று, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று ஹரியானாவின் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்து உள்ளார் என்று கூறுகிறது. பேஸ்புக் பயனர் ரவி கௌதம் சமீபத்திய அறிவிப்பு என்று கூறி நேற்று இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

சமீபத்திய செய்தி அறிக்கையின்படி, கடந்த வெள்ளி அன்று ஹரியானாவில் 872 புதிய கொரோனா தொற்று பாதிப்புகளும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,380 ஆகவும் உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும், முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படவில்லை என்று ஹரியானா அரசு கூறியுள்ளது.  அதிகமாகி வரும் கொரோனா தொற்று தொடர்பாக மாநில உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ், அனைத்து துணை ஆணையர்கள், தலைமை மருத்துவர்கள் மற்றும் மாநில உயர்நிலை காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பிற்கு பின்னர், பேட்டியளித்த அமைச்சர் ஹரியானா மாநிலத்தில் எந்த விதமான முழு ஊரடங்கோ, இரவு ஊரடங்கோ அமல்படுத்தப்பட போவதில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளதாக செய்தி கட்டுரை ஒன்று தெரிவிக்கின்றது.

இதே செய்தி புகைப்படம் 22 ஆகஸ்ட் 2020 அன்று ஒரு பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

இந்த வைரல் செய்தி புகைப்படம் பழையது என்பதை நம்மால் உறுதிப்படுத்த முடிந்தது என்றாலும், அண்மையில் ஏதேனும் இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதா என்பதை அறிய நாங்கள் ஹரியானாவின் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜை தொடர்பு கொண்டு பேசினோம்.  நம்மிடம் பேசிய அவர், “ இந்த வைரல் கூற்று தவறானது.  இதுபோன்ற ஊரடங்கு எதுவும் அமலில் இல்லை,” என்று கூறினார்.

இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பக்கத்தினை ஆராய்ந்ததில், அப்பக்கதிற்கு 5,042 லைக்குகள் இருப்பது நமக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் செய்தி புகைப்படம் பழையது. ஹரியானா அரசு வார இறுதி ஊரடங்கு எதுவும் அறிவிக்கவில்லை.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்