உண்மை சரிபார்ப்பு: பள்ளி புத்தகங்களுக்கு அரசு வரி விதிக்கவில்லை, இந்த வைரல் கூற்று தவறானது

இந்த வைரல் கூற்று தவறானது. பள்ளிப் புத்தகங்களுக்கு அரசு எந்த வரியும் விதிக்கவில்லை.

உண்மை சரிபார்ப்பு: பள்ளி புத்தகங்களுக்கு அரசு வரி விதிக்கவில்லை, இந்த வைரல் கூற்று தவறானது

புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). பள்ளிப் பாடப்புத்தகங்களுக்கு வரி விதிக்கும் முதல் நாடு இந்தியா என்ற கூற்றுடன், சமூக ஊடகங்களில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது.

இது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்த கூற்று தவறானது என்பதும், பள்ளி புத்தகங்களுக்கு அரசு எந்த வரியும் விதிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

கூற்று

‘ப்ளஃப்மாஸ்டர் மோடி’ என்ற பேஸ்புக் பக்கம் இந்தப் பதிவை (இணைப்பு) பகிர்ந்து, “பள்ளிப் புத்தகங்களுக்கு வரி விதிக்கும் முதல் நாடு இந்தியா …” என்று எழுதியுள்ளது.

5,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த இடுகையை உண்மை என்று கருதி பல்வேறு சமூக ஊடக தளங்களில் இதனைப் பகிர்ந்துள்ளனர்.

https://twitter.com/AshishS17373782/status/1308367481040371713

விசாரணை

நாட்டின் புதிய வரி திட்டத்தின் கீழ் பள்ளிப் புத்தகங்களுக்கு ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) இப்போது விதிக்கப்படுகிறது என்ற கூற்றுடன் சமூக வலைதளங்களில் பல பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இக்கூற்றினைச் சரிபார்க்க இது குறித்த செய்திக் கட்டுரைகளைத் தேடினோம். அவ்வாறு தேடியதில், இது தொடர்பான பல வலைத்தளங்களை எங்களால் காண முடிந்தது. அவற்றில் புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் போன்ற அச்சிடப்படும் பொருட்களுக்கு வரி எதுவும் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்க ஜெனரலின் இணையதளத்தில் தேடிய போது, இதே போன்ற முடிவுகளே நமக்குக் கிடைத்தன. அத்தியாயம் 49 இல் இருந்த வரியில்லா பொருட்களின் பட்டியலில் அச்சு புத்தகங்களும் இருந்ததை நம்மால் காண முடிந்தது.

இது தவிர தி இந்து பிசினஸ்லைனில் 27 ஜனவரி 2018 அன்று வெளியிடப்பட்ட செய்தியிலும் “புத்தகங்கள் ஜிஎஸ்டியின் கீழ் வரி ஏதும் விதிக்கப்படாமலே தொடர்கின்றன” என்று கூறப்பட்டிருந்தது.

இந்தக் கூற்றினைச் சரிபார்க்க, வரி மற்றும் முதலீட்டு நிபுணரும், Apnapaisoa.com இன் தலைமை ஆசிரியருமான பால்வந்த் ஜெயினைத் தொடர்புகொண்டோம். இது குறித்து பேசிய அவர் “ஜிஎஸ்டியில் இருந்து புத்தகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உள்ளீட்டு வரியைப் பொறுத்தவரை, எவற்றிற்கும் அதிலிருந்து எந்த விலக்கும் இல்லை” என்று கூறினார்.

மத்திய நேரடி மற்றும் சுங்கவரி வாரியத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும் இந்தக் கூற்று மறுக்கப்பட்டு, பள்ளிப் புத்தகங்களுக்கு அரசாங்கம் எந்த வரியும் விதிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பக்கத்தை ஆராய்ந்ததில், அது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது என்பதும், மார்ச் 2013 முதல் அது செயலில் உள்ளது என்பதும் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் கூற்று தவறானது. பள்ளிப் புத்தகங்களுக்கு அரசு எந்த வரியும் விதிக்கவில்லை.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்