X
X

உண்மை சரிபார்ப்பு: நீலகிரி மலை ரயில் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை, வைரல் கூற்று தவறானது

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நீலகிரி மலை ரயில் குறித்து கருத்து தெரிவித்ததாகக் கூறும் இந்தப் புகைப்படம் தவறானது. புதியதலைமுறை இணைய குழு இந்த கூற்றுக்களை மறுத்துள்ளது.

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). தமிழ் மொழியில் இயங்கிவரும் செய்தி சேனலான புதிய தலைமுறையின் பெயரில் பகிரப்படும் ஒரு புகைப்படம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊட்டி ரயில் சர்வதேச தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்ய 3,000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாதவர்கள், ஊட்டி செல்ல ஏன் ஆசைப்படவேண்டும், என்று கூறியதாகக் குறிப்பிடுகிறது.

இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற எந்தச் செய்தியையும் தாங்கள் வெளியிடவில்லை என்று கூறி புதிய தலைமுறையின் இணைய குழு இந்த கூற்றினை மறுத்துள்ளனர்.

கூற்று

தமிழ் மொழியில் இயங்கிவரும் செய்தி சேனலான புதிய தலைமுறையின் பெயரில் பகிரப்படும் ஒரு புகைப்படம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஊட்டி ரயில் சர்வதேச தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்ய 3,000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாதவர்கள், ஊட்டி செல்ல ஏன் ஆசைப்படவேண்டும்,” என்று கூறியதாகக் குறிப்பிடுகிறது. இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

நீலகிரி மலை ரயில்வே (NMR) தனியார்மயமாக்கப்பட்டதாகக் கூறப்படும் வதந்தியை நம்ப வேண்டாம் என விஸ்வாஸ் செய்தி சமீபத்தில் கட்டுரை வெளியிட்டிருந்த நிலையில், நிதியமைச்சரின் இந்த கருத்துகள் குறித்த செய்திகளை நாங்கள் இணையத்தில் தேடினோம்.

அவ்வாறு தேடியதில், இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையையும் எங்களால் காண முடியவில்லை.

மேலும் இது குறித்த தேடலில், இந்த வைரல் புகைப்படத்தில் உள்ள தகவல்கள் தவறானவை என்று புதியதலைமுறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டு இருப்பதை நாங்கள் கண்டோம்.

இதன் உண்மை சரிபார்ப்பிற்காக, புதிய தலைமுறையின் இணைய குழுவின் பொறுப்பாளர் மனோஜ் பிரபாகரை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், “இந்த புகைப்படம் திருத்தப்பட்டு, தவறான கூற்றுடன் பகிரப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டதாகக் கூறி இதுபோன்ற எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை,” என்று கூறினார்.

இந்த வைரல் கூற்றைப் பகிர்ந்து கொண்ட பேஸ்புக் பயனர் திலகராஜின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் தமிழ்நாட்டில் உள்ள சென்னையைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு பேஸ்புக்கில் 4,057 நண்பர்களும், 570 பின்தொடர்பவர்களும் உள்ளனர் என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நீலகிரி மலை ரயில் குறித்து கருத்து தெரிவித்ததாகக் கூறும் இந்தப் புகைப்படம் தவறானது. புதியதலைமுறை இணைய குழு இந்த கூற்றுக்களை மறுத்துள்ளது.

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later