உண்மை சரிபார்ப்பு: பாஜக தனது கட்சியை இலங்கையில் தொடங்கவில்லை

இந்த வைரல் பதிவு தவறானது. இந்தியாவின் பாஜக தனது கட்சியை இலங்கையில் தொடங்கவில்லை.

உண்மை சரிபார்ப்பு: பாஜக தனது கட்சியை இலங்கையில் தொடங்கவில்லை

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). சமூக ஊடகங்களில் பரவிவரும் ஒரு வைரல் பதிவு, பாரதிய ஜனதா கட்சி இந்தியாவின் அண்டை நாடுகளில் தனது கட்சியை விரிவுபடுத்துகிறது, அதன் ஒரு பகுதியாக இலங்கையில் இலங்கை பாரதிய ஜனதா கட்சியாக தொடங்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது.

இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணை

ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு வைரல் பதிவில், “பாஜக அண்டை நாடுகளுக்கு தனது கட்சியை விரிவுபடுத்துகிறது. இலங்கையில் ‘இலங்கை பாரதிய ஜனதா கட்சி’ என்ற பெயரில் ஒரு புதிய கட்சி உருவாக்கி உள்ளது” என்று கூறுகிறது. இந்த ட்வீட்டின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

இதே போன்ற கூற்று பேஸ்புக்கிலும் பகிரப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

விசாரணை

இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சி (BJP) இலங்கையில தனது கட்சியைத் தொடங்க திட்டமிட்டுள்ளது என்ற செய்தியினை இலங்கையின் தேர்தல் ஆணையத் தலைவர் நிமல் புஞ்சீவா கடந்த திங்கள்கிழமை மறுத்துவிட்டார், இலங்கை நாட்டின் தேர்தல் சட்டம் அது போன்ற எதையும் அனுமதிக்காது என்று அவர் கூறியதாக இந்தியா டுடேயில் 16 பிப்ரவரி அன்று வெளியிடப்பட்ட ஒரு செய்தி கட்டுரை கூறுகிறது.

இலங்கையில் பாஜக கட்சி தொடங்குவது குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், கல்வி மற்றும் விளையாட்டில் கவனம் செலுத்துவதற்காக ‘இலங்கை பாரதிய ஜனதா கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று சனிக்கிழமையன்று இலங்கையில் தொடங்கப்பட்டுள்ளது என்ற செய்தி குறித்த பல அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கைகள் நமக்குக் கிடைத்தன.

இந்தியாவின் பாஜகவிற்கும் இந்தக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தப் புதிய கட்சித் தலைவர்கள் தெளிவுபடுத்தியிருப்பதை பல கட்டுரைகளில் நம்மால் காண முடிந்தது.

ஒரு பேஸ்புக் காணொலியில் பாஜக தலைவர் V.முத்துசாமி, “நாங்கள் தமிழ் மக்களுக்கு விளையாட்டு மற்றும் கல்வியைத் தரப்படுத்தத் தொடங்கியுள்ளோம். இந்தியாவின் பாஜகவிற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை,” என்று கூறுவதை நம்மால் காண முடிகிறது.

இது குறித்த உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் டைனிக் ஜாக்ரானின் தேசிய பணியகத் தலைவர் அசுதோஷ் ஜாவைத் தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், “இந்த வைரல் கூற்று தவறானது. இலங்கையில் பாஜக பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் கட்சிக்கும், இந்தியாவின் பாஜகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை,” என்று கூறினார்.

இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த ட்விட்டர் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவருக்கு 1000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருப்பதும், அக்டோபர் 2015 முதல் அவர் கொல்கத்தாவிலிருந்து செயல்பட்டு வருவதும் எங்களுக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. இந்தியாவின் பாஜக தனது கட்சியை இலங்கையில் தொடங்கவில்லை.

Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்