உண்மை சரிபார்ப்பு: இந்த புகைப்படத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, வைரல் பதிவு தவறானது

இந்த வைரல் பதிவு தவறானது. மருத்துவமனையில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தைக் காட்டும் இந்தப் புகைப்படம் பழையது, இதற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதே உண்மை.

உண்மை சரிபார்ப்பு: இந்த புகைப்படத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, வைரல் பதிவு தவறானது

புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம், ஒரு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு வன்முறைச் சம்பவம் நிகழ்வது தொடர்பான ஒரு தொலைக்காட்சி அறிக்கையைக் காட்டுகிறது.

விஸ்வாஸ் செய்தி இந்த இடுகையை விசாரித்தபோது, அது தவறானது என்று கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் வன்முறைச் சம்பவம் நிகழ்வதைக் காட்டும் இந்தப் புகைப்படம் பழையது என்பதும், இது கொரோனா தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுமே உண்மையாகும்.

கூற்று

பேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு புகைப்படம் ஒரு முக்கியச் செய்தி அறிக்கையின் ஸ்கிரீன் ஷாட்டைக் காண்பிக்கிறது. அதில் உள்ள உரை, “முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நோயாளிகள் மற்ற நோயாளிகளை சாப்பிட தொடங்கியதால், மருத்துவமனைகள் பூட்டப்பட்டுள்ளன,” என்று கூறுகிறது. இந்த இடுகையில் உள்ள தலைப்பு, “2021 மிகவும் கடுமையானதாகத் தெரிகிறது,” என்று கூறுகிறது.

இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

நாங்கள் இந்த வைரல் புகைப்படத்தை கூகுள் பின்னோக்கிய படத் தேடலை நிகழ்த்தி தேடியதில், 14 பிப்ரவரி 2019 அன்று நியூயார்க் டைம்ஸில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் இதே புகைப்படத்தைக் கண்டறிந்தோம்.

அந்த அறிக்கை ஒரு பகுதியில் “டெம்பிள் பல்கலைக்கழக மருத்துவமனை கடந்த ஆண்டு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வந்த 481 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தது, அதில் 97 பேர் இறந்தனர். இது நம் நாட்டின் ஒரு நகரத்தில் ஒரு வட்டாரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் நிகழ்ந்த பலியின் எண்ணிக்கையாகும். இதுபோன்று 2017 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் துப்பாக்கிகளால் கிட்டத்தட்ட 40,000 உயிர்களை நாம் இழந்துள்ளோம். என்ன நடக்கிறது என்பதைக் காண்பிப்பதற்காக இந்த புகைப்படங்கள் இங்கே உள்ளன,” என்று கூறுகிறது. மேலும் புகைப்படத்துடன் கூடிய தலைப்பில் “டெம்பிள் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உயிரினை காப்பாற்றும் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்த பின்னர் ஏற்பட்ட கோர நிலை,” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், வைரல் இடுகையில் கூறப்படும் தேதிகளில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவில்லை. பிப்ரவரி 2020 பின்னரே கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.

மேலும் இந்தப் புகைப்படத்தை ஒரு நகைச்சுவை வலைத்தளத்திலும் வைரல் கூற்றை ஒத்த மற்றொரு கூற்றுடன் கண்டோம்.

இது குறித்த நாங்கள் மற்ற செய்தி அறிக்கைகளை தேடியபோதும், எங்களால் எந்த அதிகாரப்பூர்வ ஆதாரத்தையோ, கொரோனா தடுப்பூசி தொடர்பான எந்தவொரு அறிக்கையையோ கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்த வைரல் பதிவு குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் டாக்டர் நிகிலிடம் பேசினோம். இது பற்றி நம்மிடத்தில் பேசிய அவர், “கொரோனா தடுப்பூசி இந்த இடுகையில் கூறப்பட்ட எந்தவொரு பக்க விளைவையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. வைரல் இடுகை கொரோனா தடுப்பூசி தொடர்பானதாகத் தெரியவில்லை,” என்று கூறினார்.

இந்த இடுகையை பேஸ்புக்கில் ஸ்டிஃப்லர் மெக்-ஹண்டர் அகபாவோ பாலிசி என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இந்தப் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், இந்தப் பயனருக்கு 434 பின்தொடர்பவர்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. மருத்துவமனையில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தைக் காட்டும் இந்தப் புகைப்படம் பழையது, இதற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதே உண்மை.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்