உண்மை சரிபார்ப்பு: இந்த புகைப்படம் இந்தியாவில் நடைபெற்ற ஃபோட்டோஷூட்டில் எடுக்கப்பட்டது, வைரல் கூற்று தவறானது

இந்த வைரல் பதிவு தவறானது. இந்த புகைப்படம் இந்தியாவில் நடைபெற்ற ஒரு போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படமே தவிர இலங்கையில் அதிக நேரம் பணிபுரியும் கொரோனா பணியாளர்களின் புகைப்படம் அல்ல.

உண்மை சரிபார்ப்பு: இந்த புகைப்படம் இந்தியாவில் நடைபெற்ற ஃபோட்டோஷூட்டில் எடுக்கப்பட்டது, வைரல் கூற்று தவறானது

புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாத சுகாதார ஊழியர்களைக் காட்டுகிறது. இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியான சிங்கள மொழியில் பகிரப்பட்ட கூற்று, தற்போது அதிக நேரம் பணிபுரியும் கொரோனா பணியாளர்கள் இவர்கள் என்று கூறுகிறது.

இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்த வைரல் பதிவு தவறானது என்பதைக் கண்டறிந்தோம். இந்தியாவின் கேரளாவில் நடைபெற்ற ஒரு போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகிறது.

கூற்று

சமூக ஊடகங்களில் சிங்கள மொழியில் பகிரப்படும் இந்த வைரல் இடுகையில், “நான் நிறைய பேசும் புகைப்படங்களை பார்த்திருக்கிறேன் .. ஆனால் உண்மையாகவே ஒரு பேசும் புகைப்படத்தை இப்போது தான் நான் பார்க்கிறேன் .. இந்த புகைப்படத்தை எடுத்த நபர் உண்மையில் இந்த சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய கருத்தை உணர்த்தியிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது… இதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளாதீர்கள்… சுகாதாரத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் செய்யும் தியாகங்களைப் பற்றி நன்கு சிந்தியுங்கள்,” என்று கூறப்பட்டுள்ளது. இந்த இடுகையை இங்கே காணலாம்.

விசாரணை

இந்த இடுகையின் மொழி, இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியான சிங்களம் என்பதை நாங்கள் கவனித்தோம். இந்த இடுகை புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்தைக் குறிப்பிடவில்லை என்றாலும், அந்த இடுகையில் இருந்த கருத்துகள், புகைப்படத்தில் இருப்பவர்கள் இலங்கையில் சுகாதார ஊழியர்கள் என குறிப்பிட்டன.

இந்த புகைப்படத்தை உன்னிப்பாக ஆராய்ந்தபோது, ​​அதில் Bino_Adam_73 என குறிப்படப்பட்டிருந்த சின்னத்தைக் கண்டோம்.

இந்த பெயரினை இணையத்தில் தேடியதில், இதே புகைப்படத்தை பினோ ஆடம் என்கிற இன்ஸ்டாகிராம் பயனரின் பக்கத்தில் நம்மால் காண முடிந்தது. பினோ ஆடம் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் ஆவார். அவர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, “அது அப்போதுதான் எங்கள் கவனத்திற்கு வந்தது. இங்கே இரண்டு பார்வைகள் உள்ளன… பெருநோயை எதிர்த்துப் போராடும் இந்த போராட்டத்தில்
மூளை சோர்வடைந்தாலும் கூட இன்னும் போராட மனது ஆர்வமாக துள்ளியெழுகிறது…மற்றொரு பார்வையாக… உலகம் முழுவதையும் பாழாக்கும் இதயமற்றவர்களின் மறுபக்கம்… ” என்று எழுதியுள்ளார்.

இந்த வைரல் இடுகை குறித்து விசாரிக்க நாங்கள் பினோ ஆடமைத் தொடர்பு கொண்டோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், கோவிட் -19 நோய்த்தொற்று காலத்தில் அயராது பணியாற்றிய களப் பணியாளர்களின் போராட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இதன்மூலம் இந்த புகைப்படம் கேரளாவில் எடுக்கப்பட்டது என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிந்தது.

இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், ​​ருச்சிகா மகம்மனா என்று பெயர் கொண்ட இவர், இலங்கையின் கொழும்பைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்தோம்.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. இந்த புகைப்படம் இந்தியாவில் நடைபெற்ற ஒரு போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படமே தவிர இலங்கையில் அதிக நேரம் பணிபுரியும் கொரோனா பணியாளர்களின் புகைப்படம் அல்ல.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்