உண்மைச் சரிபார்ப்பு: காது வலியையும் தலைவலியையும் குறைக்க வெள்ளைப்பூண்டைப் பயன்படுத்த வேண்டாம்; வைரலான பதிவு தவறானது

உண்மைச் சரிபார்ப்பு: காது வலியையும் தலைவலியையும் குறைக்க வெள்ளைப்பூண்டைப் பயன்படுத்த வேண்டாம்; வைரலான பதிவு தவறானது

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): காதுவலிக்கும் தலைவலிக்கும் சிகிச்சையளிப்பது குறித்த பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அதில் வெள்ளைப்பூண்டை காதில் வைப்பதால் காது வலி, காது தொற்று மற்றும் தலைவலி விரைவில் குணமாகும் என்று கூறப்பட்டு வருகிறது. விஸ்வாஸ் நியூஸ் இந்தப் பதிவின் உண்மையை சரிபார்த்து அந்த பதிவில் உள்ள கூற்று தவறானது என்று கண்டறியப்பட்டது. இந்த வைரலான கூற்றை நிராகரித்த நிபுணர்களிடம் நாங்கள் பேசியதுடன், அவ்வாறு அந்தப் பதிவை நிராகரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினோம்.

வைரலான பதிவில் இருப்பது என்ன ?

இந்த இடுகை டிசம்பர் 19 அன்று “Pointer C Antonio” என்ற பெயரிலுள்ள முகநூல் பக்கத்தால் பகிரப்பட்டது. வைரலான பதிவின் தலைப்பு கூறுகிறது, “உங்களுக்கு தெரியுமா? காதுவலி, காது தொற்று மற்றும் தலைவலியை விரைவாகவும் திறம்படவும் போக்க வெள்ளைப்பூண்டு உதவுகிறது. உங்கள் காதில் ஒரு சுத்தமான வெள்ளைப்பூண்டு பல்லினை வைக்கவும் – நீங்கள் நிம்மதி அடைந்தீர்கள் என்று உணரும் வரை அது உங்கள் காதில் ஒரு இயர்ப்லக் போல இறுக்கமாக பொருந்துகிறது.”

சமூக ஊடகங்களில் பல பயனர்கள் இதே போன்ற கூற்றுகளுடன் இந்த இடுகையைப் பகிர்ந்துள்ளனர். இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே அணுகலாம்.

விசாரணை:

வைரலான கூற்றை விசாரிக்க, முதலில் அதை முக்கிய வார்த்தைகளுடன் தேடினோம். காது வலிக்கு பூண்டு பயன்படுத்துவது பற்றிய முழுமையான தகவல்களை pristinecare.com. என்ற இணையதளத்தில் கண்டோம். அக்டோபர் 19, 2020 அன்று வெளியிடப்பட்ட கட்டுரையில், காது வலிக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் மூலிகைகளில் வெள்ளைப்பூண்டும் ஒன்று என்று கூறியுள்ளது. வெள்ளைப்பூண்டு அல்லது வெள்ளைப்பூண்டு எண்ணெய் சாற்றில், தொற்றுநோயைத் தடுக்க உதவும் வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. காது வலியைக் குறைக்க வெள்ளைப்பூண்டு பல்லினை பயன்படுத்தவும் இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

கொடுக்கப்பட்ட தகவலின்படி, “ஒரு பல் பூண்டு தோலுரிக்கப்பட்டு, அதன் ஒரு முனை வெட்டப்பட்டு, சூடான துணியால் சுற்றப்பட்டு, காதுக்கு மேல் வைக்கப்படுகிறது. பூண்டு பல் உங்கள் காதுக்குள் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது தோல் எரிச்சலை ஏற்படுத்துகிற, கடுமையான சேர்மங்களை உருவாக்குகிற, பூண்டின் பக்க விளைவுகள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 8, 2019 அன்று அமெரிக்க சுகாதாரத் தகவல் இணையதளமான ஹெல்த்லைனில் வெளியிடப்பட்ட கட்டுரையின்படி, “பூண்டு அல்லது பூண்டு சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துவதால் தோல் எரிச்சல் அல்லது ரசாயன தீக்காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த வீட்டு வைத்தியத்தை மற்ற பாகங்களில் பயன்படுத்துவதற்கு முன், தோலின் ஒரு சிறிய (உள் கை போன்ற) பகுதியில் போட்டு சோதித்து பார்க்கவும். அதைப் பயன்படுத்துபவர் எரிச்சல் அல்லது நலமின்மையை உணர்ந்தால் அல்லது எண்ணெய் தடவிய இடத்தில் சிவந்திருப்பதைக் கண்டால், அந்த இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் நன்கு கழுவுவதுடன், அதைப் பயன்படுத்தவும் வேண்டாம். உங்கள் காதில் பூண்டு எண்ணெய் அல்லது வேறு ஏதேனும் மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகவும்”.

மேலும் தகவலுக்கு, நாங்கள் நொய்டாவில் உள்ள அங்கூரி தேவி கிளினிக்கில் உள்ள ENT (காது, மூக்கு மற்றும் தொண்டை) நிபுணர் மருத்துவர் அனில் சௌஹானைத் தொடர்பு கொண்டோம். வைரலான கூற்று தவறானது என்று அவர் கூறினார். பூண்டு பற்களை காதுக்குள் வைப்பது ஆபத்தானது, என்று கூறினார். இந்த வைரலானது குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் ENT நிபுணர் டாக்டர் கல்பனா நாக்பாலையும் நாங்கள் தொடர்பு கொண்டோம். அவரும் அந்தக் கூற்று தவறானது என்று கூறினார், மேலும் அவ்வாறு யாரும் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

உத்தரபிரதேசத்தின் கட்டௌலி பிளாக்கின் மருத்துவ அதிகாரி இன்சார்ஜ் டாக்டர் அவ்னிஷ் குமார் சிங்கிடமும் நாங்கள் பேசினோம், அவர் கூறுகையில் “பூண்டு உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன, ஆனால் காதைப் பொருத்தவரையில் அதை நேரடியாக காதில் போடக்கூடாது. ஒரு ENT நிபுணரிடம் கட்டாயம் ஆலோசனை பெறுவதுடன், தொற்றுநோயை மிகவும் மோசமாக்கும் அபாயம் இருப்பதால் உங்கள் காதுகளில் ஒரு போதும் எதையும் போட வேண்டாம். அவரும் அந்தக் கூற்று தவறானது என்று கூறினார்

விஸ்வாஸ் நியூஸ், மகாராஜா அக்ரசென் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணரான டாக்டர் அபிஷேக் ஜுனேஜாவைத் தொடர்பு கொண்டு, வைரலான இந்தக் கூற்றை அவருடன் பகிர்ந்து கொண்டது. அவர், “ஒரு பல் பூண்டு காது குழாயில் போடப்பட்டால், அது ஒரு தொற்றுநோயை ஏற்படுத்தும், இது பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பூண்டுப் பற்களை காதில் வைக்காதே, அது ஆபத்தாக முடியும்” என்று கூறினார்.

வைரலான கூற்று குறித்து, போபாலின் ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானி கூறுகையில் “இந்தக் கூற்று தவறானது. இது மிகவும் ஆபத்தானது என்பதை நிரூபிக்க முடியும், ஆதலால் யாரும் இதை செய்யக்கூடாது. பூண்டுப் பற்களை காதில் வைத்தால் காது தொற்றும் தலைவலியும் குணமாகாது. இந்தக் கூற்று தவறானது, மாறாக அது உங்கள் காது குழாயில் சிக்கிக்கொண்டால், நீங்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்” என்று கூறினார்.

விசாரணையின் முடிவில், இந்த இடுகையைப் பகிர்ந்த பயனரை பற்றிய சமூக ஆய்வை நாங்கள் மேற்கொண்டோம். அந்தத் தேடலில், பயனாளர் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவில் வசிப்பவர் என்பதும், முகநூலில் அவருக்கு 2,000க்கும் மேற்பட்ட நண்பர்கள் இருப்பதும் தெரியவந்தது.

முடிவு: விஸ்வாஸ் செய்தி குழு, விசாரணைக்குப் பிறகு, வைரலான இந்த கூற்று என்று கண்டறிந்தது. ஒரு பல் பூண்டு காதில் வைப்பது ஆபத்தானது. இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்