X
X

உண்மை சரிபார்ப்பு: மூளையை கட்டுப்படுத்தும் சிப் கோவிட் தடுப்பூசிக்குள் இருக்கும் என்று கூறுபவர் இந்தியர் அல்ல

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). கொரோனா வைரஸ் தடுப்பூசியில் சிப் இருப்பதாக ஒரு நபர் பேசும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தத் தடுப்பூசி மூலம் மனிதர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள் என்று அவர் அந்த காணொலியில் கூறுகிறார்.

இந்தக் காணொலியில் இருப்பவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று கூறி காணொலியை சமூக ஊடகங்களில் மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்பது தெரியவந்துள்ளது. இந்தக் காணொலியில் இருப்பவர் பாகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் கௌகாப் நூரானி.

கூற்று

சமூக வலைத்தளங்களில் வைரல் காணொலி ஒன்றில் தோன்றும் ஒரு நபர் “இது தான் உற்பத்தியில் உள்ள தடுப்பூசி… உங்கள் மூளையைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தை இதில் வைக்க அவர்கள் விரும்புகிறார்கள். இது உங்கள் செயல்களைக் கட்டுப்படுத்தும். இதில் அவர்கள் ஒரு சின்னச் சிப்பை வைக்க விரும்புகிறார்கள்,” என்று கூறுகிறார்.

இந்த இடுகையின் விளக்கத்தில், “இவை இஸ்லாமிய மொழியில் உள்ள இந்தியாவின் முன்னா பாய் தடுப்பூசி நிபுணர்களின் விளக்கம், இந்தத் தடுப்பூசிக்குள் ஒரு சிப் உள்ளது, இது அனைவரையும் கட்டுப்படுத்தும்,” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

நாங்கள் இன்விட் கருவியைப் பயன்படுத்தி வீடியோவின் ஸ்கிரீன்கிராப்களைப் பிரித்தெடுத்து, அவற்றை கூகுள் பின்னோக்கிய படத் தேடல் கொண்டு தேடினோம். அவ்வாறு தேடியதில், urdu.siasat.pk என்ற வலைதளத்தில் ஜூன் 2, 2020 அன்று வெளியான ஒரு அறிக்கையை நாங்கள் கண்டறிந்தோம். Urdu.siasat.pk என்பது ஒரு பாகிஸ்தான் செய்தி வலைத்தளமாகும். இதில் வைரல் காணொலியுடன் கூடிய செய்தி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில், அந்த நபர் பாகிஸ்தானின் இஸ்லாமிய அறிஞர் கௌகாப் நூரானி என்று கூறப்பட்டிருந்தது. கராச்சியில் உள்ள ஒரு மசூதியில் மக்களிடம் அவர் உரையாற்றும் போது (வைரல் காணொலியைப் போல) கௌகாப் நூரானி இதைச் சொன்னதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ‘Islamic Lectures Official’ என்ற யூடியூப் சேனலில் மே 29, 2020 அன்று பதிவேற்றப்பட்ட இதன் முழு காணொலியையும் நம்மால் காண முடிந்தது. இந்தக் காணொலியிலும் இந்த நபர் பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் கௌகாப் நூரானி என்று குறிப்படப்பட்டிருந்தது.

https://www.youtube.com/watch?v=ihi7tBS1myg

இந்த வைரல் பதிவில் உள்ள நபர் குறித்து விசாரிக்க டெல்லி அகில இந்திய டான்சிம் உலமா-இ-இஸ்லாம் பொதுச் செயலாளர் சாகிர் அகமதுவிடம் பேசினோம். நம்மிடத்தில் பேசிய அவர், “இவர் இஸ்லாமிய அறிஞர் கௌகாப் நூரானி. அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் தவிர இந்தியர் அல்ல ” என்று கூறினார்.

இந்த இடுகையை ‘ஆகாஷி கிதாப்’ என்ற பக்கம் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது. இப்பக்கத்தை ஆராய்ந்ததில், இப்பக்கதிற்கு 38,744 பின்தொடர்பவர்கள் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

இந்த வைரல் கூற்று தவறானது. இந்த காணொலியில் இருப்பவர் பாகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் கௌகாப் நூரானி.

  • Claim Review : சமூக வலைத்தளங்களில் வைரல் காணொலி ஒன்றில் தோன்றும் ஒரு நபர் “இது தான் உற்பத்தியில் உள்ள தடுப்பூசி... உங்கள் மூளையைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தை இதில் வைக்க அவர்கள் விரும்புகிறார்கள். இது உங்கள் செயல்களைக் கட்டுப்படுத்தும். இதில் அவர்கள் ஒரு சின்னச் சிப்பை வைக்க விரும்புகிறார்கள்,
  • Claimed By : பேஸ்புக் பயனர்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later