X
X

Fact Check: 2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம் தவறான கூற்றுகளுடன் வைரலாகி வருகிறது

  • By: Pallavi Mishra
  • Published: Sep 21, 2023 at 05:11 PM
  • Updated: Sep 30, 2023 at 03:48 PM

புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்)। சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு பதிவில், தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் நடந்ததாக ஒரு கதை சொல்லப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பறவைக் கூட்டில் அடைத்து வைக்கப்பட்ட குஞ்சுகளைக் காப்பாற்ற கிராமம் முழுவதும் 35 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின்சாரம் இல்லாமல் தவித்ததாக கூறப்படுகிறது.

விஷ்வாஸ் நியூஸ் செய்த விசாரணையில் இந்த கூற்று தவறானது என்று கண்டறியப்பட்டது. 2020-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொதக்குடி கிராமத்தில் தெருவிளக்கு மின்சார வாரிய கட்டுப்பாட்டுப் பெட்டியில் ஓரியண்டல் மாக்பி ராபின் என்ற பெண் பறவை கூடு கட்டி முட்டையிட்டிருந்தது. தெருவிளக்கு சுவிட்சுகள் எரிவதால் வெப்பம் அதிகரித்து, முட்டைகள் கெட்டுவிடுமோ என்ற அச்சம் நிலவியதால், கிராம மக்கள் தாங்களாகவே முன்வந்து கிராமத்தில் உள்ள தெருவிளக்குகளை 35 நாட்களாக அணைத்தனர். 

கிராமத்தில் உள்ள 35 தெருவிளக்குகளை இயக்கும் அதன் கட்டுப்பாட்டு சுவிட்ச்  மட்டும் அணைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் 35 நாட்கள் முழுவதுமாக மின்வெட்டு என்று கூறப்படுவது பொய்யான தகவல்.

எது வைரலாகிறது

செப்டம்பர் 1 ஆம் தேதி, ‘ஓல்டு ஹிந்தி சாங் – பியார் கே கீத் எவம் தப்லா வாதன்’ என்ற ஃபேஸ்புக் பேஜில் பறவைக் கூடு படம் ஒன்று பகிரப்பட்டு, கூற்று பின்வரும் கூற்று முன்வைக்கப்பட்டது: “தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு கருப்புப் பறவை, கிராமத்தின் மெயின் மின்சார சுவிட்ச் போர்டுக்கு அருகில் கூடு கட்டி 3 முட்டைகளை இட்டது… மின்சாரத்தின் வெப்பத்தால் முட்டைகள் வெடித்து விடுமோ என்று கிராம மக்கள் பயந்ததால், கிராம மக்கள் முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளியே வரக்கூடிய காலம் வரை மின்சாரம் பயன்படுத்தாமல் சுமார் 35 நாட்கள் வைத்திருந்தனர் இதனால் 35 நாட்கள் கிராமம் இருளில் மூழ்கியது. இப்படிப்பட்ட மனித நேயத்திற்கு தலை வணங்குவோம்.”

அந்த வீடியோவை தவறாக புரிந்துகொண்டு மற்ற பயனர்களும் அதை வைரலாக்கி வருகின்றனர். போஸ்ட்டின் ஆர்ச்சிவ் பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

விஷ்வாஸ் நியூஸ், வைரலான பதிவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க கூகுள் கீவேர்டு சேர்ச் மூலம் முதலில் தேடியது. முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடும்போது, ​​ wionews.com இல் ஜூலை 2020–ன் ஒரு செய்தி கிடைத்தது. பறவைகளின் கூடு மெயின் சுவிட்சுக்கு மிக அருகில் இருந்ததால், பறவைக் கூட்டில் முட்டையிடுவதைத் தவிர்க்க, கிராமத்தின் 35 தெரு விளக்குகளை அணைக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராமம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என செய்தியின் எந்தப் பகுதியிலும் குறிப்பிடப்படவில்லை.

ஜூலை 2020 இல் newindianexpress.com மற்றும் thehindu.com இல் இந்த விஷயத்தைப் பற்றிய செய்திகள் வெளியியாகியிருப்பதைக் கண்டோம். இந்த இரண்டின் அறிக்கைகளின்படி, கிராமத்தின் தெரு விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளன என்பது தெரியவருகிறது. இந்தச் செய்திகளிலும் கூட, கிராமம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

இது குறித்து மேலும் உறுதிப்படுத்துவதற்காக, தி இந்து நாளிதழில் இந்தச் செய்திக் குறிப்பை எழுதிய பத்திரிகையாளர் அகிலா கண்ணதாசனிடம் பேசினோம். 2020 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில், கிராமத்தின் 35 தெரு விளக்குகள் அணைக்கப்பட்டதாக அகிலா உறுதிப்படுத்தியதோடு, முழு கிராமத்தின் விளக்குகளை அணைத்து வைத்ததாக கூறுவது தவறானது என்றார்.

விசாரணையின் இறுதியாக, ‘ஓல்டு ஹிந்தி சாங் – பியார் கே கீத் ஏவம் தபலா வாதன்’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தின் அக்கவுண்ட் பரிசோதிக்கப்பட்டது. இந்தப் பக்கத்துக்கு சுமார் 2 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

முடிவு: விஷ்வாஸ் நியூஸ் விசாரணையில் வைரலான பதிவு தவறானது என்று கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் 2020ஆம் ஆண்டு நடந்தது, மேலும் கிராமத்தின் 35 தெரு விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளன, முழு கிராமத்தின் விளக்குகளை அணைத்து வைத்ததாக கூறுவது தவறானது.

  • Claim Review : தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில், பறவைக் கூட்டில் அடைக்கப்பட்ட குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக, கிராமம் முழுவதும் 35 நாட்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
  • Claimed By : FB பேஜ் “ஓல்டு ஹிந்தி சாங் - ப்யார் கே கீத் ஏவம் தபலா வாதன்”
  • Fact Check : Misleading
Misleading
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later