X
X

உண்மைச் சரிபார்ப்பு: மல்யுத்த வீரர்களான வினேஷ் மற்றும் சங்கீதா போகட்டின் வைரல் படம் செயற்கை நுண்ணறிவி (AI) செயலியை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்டு, தவறான கூற்றுடன் பகிரப்பட்டது

  • By: Jyoti Kumari
  • Published: Jun 7, 2023 at 05:00 PM
  • Updated: Jul 7, 2023 at 05:14 PM

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): பிரதமர் நரேந்திர மோடி மே 28 அன்று புதிய பாராளுமன்றத்தை திறந்துவைத்தபோது, மல்யுத்த வீரர்கள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி தேசிய தலைநகரில் மாபெரும் போராட்டத்தை நடத்தினர்.

வினேஷ் போகட், சங்கீதா போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட பல முக்கிய மல்யுத்த வீரர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இருந்து புதிய நாடாளுமன்றத்திற்கு பேரணியாக செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

அதே வேளையில், வினேஷ் போகட் மற்றும் சங்கீதா போகட் ஆகியோர் பேருந்தின் உள்ளே அமர்ந்துக் கொண்டு போலீசாரைப் பார்த்து புன்னகைப்பதைக் காணக்கூடிய ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

விஸ்வாஸ் நியூஸ் விசாரணை நடத்தியதில், கைது செய்யப்பட்ட பெண் மல்யுத்த வீராங்கனையின் படம் எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. ஃபேஸ் ஆப் மூலம் எடிட்டிங் செய்து வைரலான படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கூற்று:

முகநூல் பயனர் ‘அர்ஜுன் பண்டிட் ஷெர்டா’ மே 28 அன்று பதிவை (காப்பகப்படுத்தப்பட்ட இணைப்பு) பகிர்ந்து, “சாலைகளில் இன்றைய நாடகத்திற்குப் பிறகு, இது அவர்களின் உண்மையான முகம். அவர்கள் நம் நாட்டை பிரிக்க வேலை செய்கிற கருவித்தொகுப்பின் ஒரு பகுதியாக மாறிவிட்டனர்.

இதேபோல், மற்றொரு பயனரான ‘கணேஷ் சுதர்’ என்பவரும் இந்தப் படத்தைப் பகிர்ந்துகொண்டு, “சாலையில் ஆடிய நாடகத்திற்குப் பிந்தைய அவர்களின் உண்மையான முகம் இதுதான்! நாட்டை பிரிக்க செயல்படும் கருவித்தொகுப்பின் ஒரு அங்கமாகிவிட்டார்கள்! நாட்டின் பெருமை இன்று வீழ்ச்சியில் உள்ளது! என்று தலைப்பில் எழுதி இருந்தார்.

விசாரணை:

வைரலான புகைப்படத்தை மூத்த பத்திரிகையாளர் ஹர்ஷ்வர்தன் திரிபாதி தனது சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் மே 28 அன்று பகிர்ந்துள்ளார். இருப்பினும், பின்னர் தனது தவறை ஒப்புக்கொண்ட அவர், அசல் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

மே 28 அன்று மற்றொரு ட்வீட்டில், அசல் மற்றும் வைரல் படத்தின் படத்தொகுப்பைப் பகிர்ந்துகொண்டு அவர் எழுதியதாவது, “நான் மல்யுத்த வீரர்களின் படத்தை ட்வீட் செய்தேன். அப்போது அந்த படங்களை புன்னகைக்க வைக்க செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் அவை எடிட் செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும், அசல் படத்தை நான் உடனடியாக ட்வீட் செய்தேன். பொய்யைப் பரப்பிவிட்டு ஓடிவிட வேண்டும் என்றால் அதை நீக்கிவிட்டு வெளியேறியிருப்பேன், ஆனால் அன்றிலிருந்து அந்தக் கும்பல் எனது குடும்பத்தினருக்கு ஆபாசமான துஷ்பிரயோகங்கள் மற்றும் அச்சுறுத்தல்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதைப் பகிர்வதன் மூலம் எந்த குழப்பமும் ஏற்படாது.”

https://twitter.com/MediaHarshVT/status/1662790432483586049
https://twitter.com/MediaHarshVT/status/1662875075841003520

வைரலான படத்தைப் பற்றி ஆராய, அதனுடன் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளுடன் நாங்கள் அதை கூகுளில் தேடினோம். இதன் போது நாங்கள் ‘சாக்ஷி போஸ்ட்’  இணையதளத்தில் அந்த அசல் படத்தைக் கண்டோம். மே 28, 2023 அன்று வெளியிடப்பட்ட ஒரு செய்தி குறிப்பில் இந்த படம் பயன்படுத்தப்பட்டிருந்தது. கொடுக்கப்பட்ட தகவலின்படி, “இந்திய மல்யுத்த வீரர்கள் – சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் மற்றும் சங்கீதா போகட் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அன்று ஜந்தர் மந்தரில் வைத்து டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள், தங்கள் ஆதரவாளர்களுடன், போலீஸ் தடுப்புகளை உடைக்க முயற்சித்ததுடன், புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.”

தேடுதலின் போது, இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவின் ட்விட்டர் பக்கத்தில் வைரலான படத்தையும் நாங்கள் கண்டோம். மே 28, 2023 தேதி பதிவிட்ட ட்வீட்டில், அசல் மற்றும் எடிட் செய்யப்பட்ட படங்களைப் பகிர்ந்துகொண்டு, “தகவல் தொழில்நுட்ப பிரிவு நபர்கள் இந்த தவறான படத்தைப் பரப்புகிறார்கள். இந்த போலியான படத்தை வெளியிடுபவர்கள் மீது புகார் அளிக்கப்படும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்” என்று எழுதப்பட்டிருந்தது.

https://twitter.com/BajrangPunia/status/1662820142454312968

அசல் மற்றும் எடிட் செய்யப்பட்ட படங்களின் படத்தொகுப்பு ‘DU ஜாட் மாணவர்கள் யூனியன் ‘ என்ற சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டு வந்துள்ளது. அந்த படத்தில் உள்ள தலைப்பில், “பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயற்கை நுண்ணறிவி மென்பொருளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. ஒலிம்பிக் சாம்பியனை இழிவுபடுத்தும்படியான அவர்களின் மோசமான தந்திரங்களைப் பாருங்கள். முதல் புகைப்படம் உண்மையானது! மற்றொன்று போலியானது” என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த ட்விட்டர் பக்கத்தில், மே 29 தேதியிட்ட மற்றொரு இடுகையை நாங்கள் கண்டோம், அந்த வைரலான படம் செயற்கை நுண்ணறிவி செயலியின் உதவியுடன் உருவாக்கப்பட்டது என்று அது கூறுகிறது.

மேலும், நாங்கள் வினேஷ் போகட் மற்றும் சங்கீதா போகட்டின் புன்னகைக்கும்  வைரல் படத்தை அவர்களின் சமூக ஊடக பக்கங்களில். இருக்கும் படங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். வைரலான புகைப்படத்தில் காணப்படுவது போல் வினேஷ் மற்றும் சங்கீதா போகத் இருவரின் முகத்திலும் குழிகள் இல்லை என்பதை அப்போது நாங்கள் கண்டறிந்தோம். வைரலான இந்த படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகிறது.

மேலும் விவரங்களுக்கு போராட்டத்தைப் பற்றிய செய்தி வெளியிட்ட டெல்லி டைனிக் ஜாக்ரனின் துணை தலைமை நிருபர் ஷானி ஷர்மாவை நாங்கள் தொடர்பு கொண்டோம். அவர் எங்களிடம் கூறியதாவது, “வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது மற்றும் அந்த கூற்று தவறானது.”
டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் மல்யுத்த வீரர்களின் இயக்கம் குறித்து தவறான பதிவு ஒன்று வைரலாவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் கூட, பல காணொளிகள் மற்றும் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அவைகளின் உண்மைத்தன்மை எங்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் விசாரணையை நீங்கள் இங்கே படிக்கலாம்.

விசாரணையின் முடிவில், தவறான கூற்றுடன் எடிட் செய்யப்பட்ட படத்தைப் பகிர்ந்த பக்கத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். முகநூலில் இந்தப் பக்கத்தை 114 பேர் பின்தொடர்வதைக் நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்த முகநூல் பக்கம் அக்டோபர் 20, 2022 அன்று உருவாக்கப்பட்டது.

முடிவுரை: விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில், மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட் மற்றும் சங்கீதா போகட் ஆகியோர் போலீஸ் காவலில் புன்னகைத்துக்கொண்டிருக்கும் வைரலான புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த படம் எடிட் செய்யப்பட்டு தவறான கூற்றுடன் பகிரப்படு வருகிறது.

  • Claim Review : வினேஷ் போகட் மற்றும் சங்கீதா போகட் ஆகியோர் ஒரு பேருந்தின் உள்ளே அமர்ந்திருக்கும்போது போலீசாரைப் பார்த்து புன்னகைப்பதைக் காணலாம்.
  • Claimed By : அர்ஜுன் பண்டிட் ஷெர்டா
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later