X
X

உண்மை சரிபார்ப்பு: ரஷ்யா-உக்ரைய்ன் சண்டைக்கு நடுவே தவறாக வழிகாட்டும் க்ளைமுடன் உக்ரைய்னின் பழைய படம் ஒரு வைரல்

எங்கள் புலன்விசாரணையில், இந்தப் படம் தற்போது நடந்து கொண்டிருக்கும் ரஷ்யா-உக்ரைய்ன் சண்டைக்கு சம்பந்தப்பட்டது அல்ல என்று கண்டுபிடித்தோம். இந்தப் படம் சமீபத்திய நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தப்பட்டு வைரல் ஆகிக் கொண்டிருக்கும் ஒரு பழைய புகைப்படம்.

  • By: Umam Noor
  • Published: Mar 6, 2022 at 11:02 PM
  • Updated: Mar 6, 2022 at 11:17 PM

புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்). ரஷ்யா-உக்ரைய்ன் சண்டையைச் சுற்றி சமூக ஊடகங்கள் தவறான தகவல்களால் நிரம்பி வழிகின்றன. இதே விஷயத்தில், நிறைய நபர்கள் உறைபனியில் நின்று கொண்டிருப்பது போல் ஒரு படம் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. பயனர்கள் இந்தப் புகைப்படத்தை இப்போது உக்ரைய்னில் நடந்து கொண்டிருக்கும் சண்டையோடு இணைத்து, பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சண்டை முடிவுக்கு வர வேண்டும் என்றும் அமைதிக்காகவும் இந்தப் புகைப்படத்தில் உள்ள மக்கள் ப்ரார்த்தித்துக்கொண்டிருப்பதாக சில பயனர்கள் க்ளைம் செய்கிறார்கள். விஷ்வாஸ் நியூஸ் இந்தப் புகைப்படத்தை புலன் விசாரணை செய்தபோது, இது தற்போது நடந்து கொண்டிருக்கும் ரஷ்யா-உக்ரைய்ன் சண்டைக்கு சம்பந்தப்பட்டது அல்ல என்று கண்டு பிடித்தோம். இந்தப் படம் பழையது மேலும் புதியது போல் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

க்ளைம்

ஃபேஸ்புக் பயனர் இந்த வைரல் படத்தை அப்லோட் செய்துவிட்டு எழுதினார், “அப்பாவிகளின் ரத்தம் சிந்தப்போகும் ஒரு புதிய போரை உலகம் தவிர்க்க வேண்டி உக்ரைய்ன்காரர்கள் பனியில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறார்கள்.” அமைதிக்காக, உக்ரைய்ன் சர்ச்களின் தலைவர்கள் நாளை, ஞாயிற்றுக்கிழமை தினத்தை, பிரார்த்தனை செய்தல், உபவாசம் இருத்தல் மற்றும் செய்த குற்றத்துக்கு மனவருத்தப் படுதல் போன்றவற்றுக்காக அர்ப்பணித்திருக்கிறார்கள். நாமும் அவர்களோடு சேர்த்து குரல் கொடுப்போம், அதன்மூலம் ஆயுதங்கள், அழிவு மற்றும் ரத்தம் சிந்தலின் மொழிக்கு எதிராக ஒரு மனித மற்றும் ஆன்மீக சக்தியாக உருமாற்றுவோம்.”

அந்தப் பதிவின் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணவும்.

புலன் விசாரணை

கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலமாக இந்த வைரல் இமேஜைத் தேடுவதன் மூலம் எங்கள் புலன் விசாரணையைத் தொடங்கினோம். இந்தத் தேடலில் இந்தப் படத்தை ‘believersportal.com’ என்ற வலைதளத்தில் அக்டோபர் 2019 அன்று பிரசுரிக்கப்பட்ட ஒரு செய்தியில் கண்டுபிடித்தோம். அந்த அறிக்கையின்படி, “2014 முதல், மக்கள் உக்ரைய்னில் உள்ள கார்க்கோவ் சிட்டி ஸ்கொயர் என்ற இந்த இடத்தில் குழுமி, போர்ப் பிரதேசத்தில் இருக்கும் மக்களுக்காகவும் அமைதிக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள்.”

முழுக் கதையையும் இங்கே படிக்கலாம்.

இந்தப் படத்தைப் பற்றி உறுதி பெறுவதற்கு, நாங்கள் உக்ரைய்ன்கார செய்தியாளரான க்ரிஸ் யார்க்கோடு தொடர்பு கொண்டு அவரோடு இந்த வைரல் பதிவைப் பகிர்ந்து கொண்டோம். அவர், இந்தப் படம் பழையது என்று, இப்போது நடந்துகொண்டிருக்கும் போரோடு சம்பந்தப்பட்டது அல்ல என்று கூறினார்.

இந்த தவறாக வழிநடத்தும் பதிவைப் பகிர்ந்த ஃபேஸ்புக் பயனரை சமூக ஸ்கேன் செய்தபோது, அந்தப் பயனர் லெபனானைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்தோம்.

निष्कर्ष: எங்கள் புலன்விசாரணையில், இந்தப் படம் தற்போது நடந்து கொண்டிருக்கும் ரஷ்யா-உக்ரைய்ன் சண்டைக்கு சம்பந்தப்பட்டது அல்ல என்று கண்டுபிடித்தோம். இந்தப் படம் சமீபத்திய நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தப்பட்டு வைரல் ஆகிக் கொண்டிருக்கும் ஒரு பழைய புகைப்படம்.

  • Claim Review : அப்பாவிகளின் ரத்தம் சிந்தப்போகும் ஒரு புதிய போரை உலகம் தவிர்க்க வேண்டி உக்ரைய்ன்காரர்கள் பனியில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறார்கள்.” அமைதிக்காக, உக்ரைய்ன் சர்ச்களின் தலைவர்கள் நாளை, ஞாயிற்றுக்கிழமை தினத்தை, பிரார்த்தனை செய்தல், உபவாசம் இருத்தல் மற்றும் செய்த குற்றத்துக்கு மனவருத்தப் படுதல் போன்றவற்றுக்காக அர்ப்பணித்திருக்கிறார்கள். நாமும் அவர்களோடு சேர்த்து குரல் கொடுப்போம், அதன்மூலம் ஆயுதங்கள், அழிவு மற்றும் ரத்தம் சிந்தலின் மொழிக்கு எதிராக ஒரு மனித மற்றும் ஆன்மீக சக்தியாக உருமாற்றுவோம்
  • Claimed By : பியரி ல்மத்
  • Fact Check : Misleading
Misleading
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later