X
X

உண்மை சரிப்பார்ப்பு: ராணுவம் மொபைல் போன்களையும் மது பாட்டில்களையும் அழிக்கும் இது பாகிஸ்தானிலிருந்து வந்தது ஆப்கானிஸ்தானிலிருந்து அல்ல.

ஆப்கானிஸ்தானில் மொபைல்கள் தடை செய்யப்பட்டு மொபைல்கள் பொது இடங்களில் அழிக்கப்படுவது பற்றிய காணொளி, உண்மையில் ஒரு பாகிஸ்தானி நிகழ்ச்சி. இந்தக் காணொளி ஆப்கானிஸ்தானுடையது என்று சொல்லி வைரல் ஆகிய இந்தக் காணொளி பொய்.

விஷ்வாஸ் நியூஸ் (குவாஹாத்தி)|| சமீபத்தில் பல்வேறு சமூக ஊடகத் தளங்களிலும் வாட்ஸ்அப்பிலும் ஒரு காணொளி வைரல் ஆகியது. அந்தக் காணொளி நிறைய எண்ணிக்கையில் உள்ள ராணுவத்தினர் நிறைய மொபைல் போன்களையும் பல்வேறு எலெக்ட்ரானிக் பொருட்களையும் அழிப்பதைக் காட்டியது. அந்தக்காட்சி தாலிபான்-கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தது என்று சமூக ஊடகப் பயனர்கள் க்ளைம் செய்கின்றனர். மொபைல் போன்கள் ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன என்று இந்த வைரல் க்ளைம் சொல்கிறது. ஒவ்வொருவரும் தன்னிச்சையாக தங்கள் மொபைல் போன்களை தாலிபான் ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும், அதற்குப் பிறகு யாராவது ஒரு குடிமகன் மொபைல் போன் வைத்திருந்து அவன் பிடிக்கப்பட்டால், அவனுக்கு சாவு நிச்சயம். இதுதான் புதிய சட்டம்.

விஷ்வாஸ் நியூஸ் இந்தக் க்ளைமை புலன் விசாரணை செய்து அது தவறு என்று கண்டுபிடித்தது. இந்தக் காணொளி பல்வேறு சட்ட விரோதமானப் பொருட்களை பாகிஸ்தானின் கலால் (எக்சைஸ்) துறை அழிக்கும்போது எடுக்கப்பட்டது.

இந்த வைரல் பதிவு எதைப்பற்றி?

ஃபேஸ்புக் பயனர் திப்தேந்து பிஸ்வாஸ் பிப்ரவரி 9, 2022 அன்று இந்தக் காணொளியை அப்லோட் செய்து எழுதினர் -(ஆங்கில மொழிபெயர்ப்பு – இவர்களை தாலிபான் ஆட்சியை விரும்பி ஏற்கும் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லுங்கள், தற்போது மொபைல் போன்கள் ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன. அனைவரும் தங்கள் மொபைல் போன்களை தன்னிச்சையாக தாலிபான் ராணுவ அதிகாரிகளிடம் கொடுத்துவிட வேண்டும். அதற்குப் பின், மொபைல் போன் வைத்திருக்கும் எவரும் கொல்லப்படுவார்கள், இதுதான் ஆப்கானிஸ்தானின் புதிய சட்டம்.)

பல சமூக ஊடக பயனர்கள் இதே க்ளைம்களுடன் இந்தக் காணொளியை பகிர்ந்தார்கள். இது பல வாட்ஸ்அப் குழுக்களிலும் வைரல் ஆகியது. ஆவணப்படுத்தப்பட்ட பதிவின் இணைப்பை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

புலன்விசாரணை

விஷ்வாஸ் நியூஸ் தன புலன்விசாரணையை ஆரம்பித்து, இந்த வைரல் காணொளியின் மூலத்தைக் கண்டுபிடிப்பதற்காக இந்தக் காணொளியை இன்விட் கருவியில் இட்டு, அதன் ஸ்க்ரீன்கிரேப்களை எடுத்தது. இந்தப் புகைப்படங்களில் ஒன்றில் இந்தக் காணொளியில் காணப்படும் ஒரு ராணுவ வீரனின் சீருடையில் பாகிஸ்தானின் முத்திரை காணப்பட்டது. அதை கீழே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

இங்கிருந்து தடயங்களை எடுத்துக் கொண்டு, நாங்கள் சரியான குறிப்பு வார்த்தைகளை உபயோகித்து இந்தக் காணொளியின் கீபிரேம்களைத் தேடினோம். நாங்கள் இந்தக் காணொளியை பல பாகிஸ்தான் யூடியூப் சேனல்களில் கண்டிபிடித்தோம் அதன்மூலம் இந்தக் காணொளி பாகிஸ்தானிலிருந்துதான் வந்தது என்று உறுதிப்படுத்தினோம்.

29 டிசம்பர் 2021 அன்று ரியல் கராச்சி என்ற சேனலில் ஒரு காணொளியைக் கண்டிபிடித்தோம். இந்த வைரல் வெட்டு 37-லிருந்து 48 வினாடிகள் குறியில் தோன்றுகிறது. இந்தக் காணொளியை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

இதற்கும் மேல், டாக்டர் எஸ்ஸா லேபரட்டரி & டயக்னாஸ்டிக் செனட்டர் அஃபிஷியல் என்ற பெயருள்ள இன்னொரு யூடியூப் சேனலும் அவர்களின் யூடியூப் சேனல்களில் இந்தக் காணொளியை அப்லோட் செய்திருக்கிறார்கள். அதில் உள்ள விவரக்குறிப்பு இவ்வாறு இருக்கிறது ”30 டிசம்பர் 2021 அன்று பாகிஸ்தான் கஸ்டம்ஸ் அழிப்பு விழா”. இங்கு கூட, இந்த வைரல் காணொளியின் ஒரு பகுதி தெளிவாகத் தெரிகிறது. இந்தக் காணொளியை இங்கே க்ளிக் செய்வதின் மூலம் பார்க்கலாம்.

எங்கள் புலன்விசாரணையின் மூலம் இந்தக் காணொளி பாகிஸ்தானிலிருந்து வந்தது என்பதைக் காட்டுகிறது.

பிறகு நாங்கள் இந்தக் காணொளியை அஸ்ஸாமின் முதன்மை செய்திப் பத்திரிக்கையான தைனிக் அஸ்ஸாமின் சர்வதேசப் பக்கத்தின் முதுநிலை துணை ஆசிரியரான சித்தார்த் ஷங்கர் தேகாவிடம் பகிர்ந்தோம். ஆப்கானிஸ்தானின் பல்வேறு பாகங்களிலிருந்து மொபைல் தடை பற்றிய அறிக்கைகள் அவ்வப்போது வருகின்றன ஆனால் பொது இடத்தில் இத்தகையப் பொருட்களின் மொத்த அழிப்பு பற்றி வரும் அறிக்கைகள் பொய் என்று பத்திரிக்கையாளர் தேகா கூறினார்.

இந்தப் பதிவைப் பகிர்ந்த பயனரின் தற்குறிப்பை நாங்கள் ஸ்கேன் செய்தோம். திப்லேந்து பிஸ்வாஸ் ரான் என்கிற இந்த நபர் தெலியாமுரா என்ற இடத்தில் வசிப்பவர்.

निष्कर्ष: ஆப்கானிஸ்தானில் மொபைல்கள் தடை செய்யப்பட்டு மொபைல்கள் பொது இடங்களில் அழிக்கப்படுவது பற்றிய காணொளி, உண்மையில் ஒரு பாகிஸ்தானி நிகழ்ச்சி. இந்தக் காணொளி ஆப்கானிஸ்தானுடையது என்று சொல்லி வைரல் ஆகிய இந்தக் காணொளி பொய்.

  • Claim Review : ஆங்கில மொழிபெயர்ப்பு – இவர்களை தாலிபான் ஆட்சியை விரும்பி ஏற்கும் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லுங்கள், தற்போது மொபைல் போன்கள் ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன. அனைவரும் தங்கள் மொபைல் போன்களை தன்னிச்சையாக தாலிபான் ராணுவ அதிகாரிகளிடம் கொடுத்துவிட வேண்டும். அதற்குப் பின், மொபைல் போன் வைத்திருக்கும் எவரும் கொல்லப்படுவார்கள், இதுதான் ஆப்கானிஸ்தானின் புதிய சட்டம்
  • Claimed By : Diptendu Biswas
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later